search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens toilet"

    • போலீசார் அந்த வணிக வளாகத்துக்கு சென்று ரகசியமாக நோட்டமிட்டனர்.
    • பெண்கள் கழிவறைக்குள் அடிக்கடி சென்று வந்ததையும் வணிக வளாக பாதுகாப்பு பணியாளர்கள் பார்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பர்தா அணிந்த ஒருவர் சந்தேகப்படும் வகையில் திரிந்து வந்ததாகவும், அந்த நபர் அங்குள்ள பெண்கள் கழிவறைக்குள் அடிக்கடி சென்று வந்ததையும் வணிக வளாக பாதுகாப்பு பணியாளர்கள் பார்த்தனர்.

    இதுதொடர்பாக போலீஸ்நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வணிக வளாகத்துக்கு சென்று ரகசியமாக நோட்டமிட்டனர். அவர்கள் பர்தா அணிந்து சென்ற நபரை சுற்றிவைத்தது பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆண் குரலில் பேசினார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பர்தா அணிந்திருந்த அந்த நபர், ஆண் என்பதும், பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு திரிந்ததும் தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவேலூர் ஒனக்குன்னு பகுதியை சேர்ந்த அபிமன்யு (வயது23) என்பதும், பி.டெக் பட்டதாரியான இவர் பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    பர்தா அணிந்து பெண் போல் வேடமிட்டு திரிந்த அவர், வணிக வளாகத்தில் இருந்த பெண்கள் கழிவறைக்குள் புகுந்து தனது செல்போனை ரகசியமாக வைத்து, கழிவறைக்கு வந்துசென்ற பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்திருக்கிறார்.

    இதையடுத்து ஐ.டி. ஊழியர் அபிமன்யுவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் பர்தா உடை உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் தனது செல்போன் மூலம் எத்தனை பெண்களை ஆபாசமாக படம் எடுத்திருக்கிறார்? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×