search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச"

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் எருமப்–பட்டியை அடுத்துள்ளஅலங்காநத்தம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி வீட்டில் குளித்து கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
    • பின்னர் அதனை காட்டி வீரலட்சுமியை தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினார். இது குறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்–பட்டியை அடுத்துள்ளஅலங்காநத்தம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி.

    அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மனோஜ் (28) என்பவர் கடந்த ஆண்டு வீரலட்சுமி வீட்டில் குளித்து கொண்டிருந்த போது அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

    பின்னர் அதனை காட்டி வீரலட்சுமியை தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினார். இது குறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சிறையில் இருந்த போது ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி பாஸ்கரன் (30) என்பவருடன் மனோஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறையை விட்டு வெளியே வந்த பிறகும் இவர்களது நட்பு தொடர்ந்தது.

    அப்போது மனோஜ் வீரலட்சுமியின் ஆபாச வீடியோவை பாஸ்கரனுக்கு அனுப்பினார். அதை பார்த்த பாஸ்கரன் அந்த வீடியோவை வைத்து கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினார்.

    இது குறித்து வீரலட்சுமி தனது கணவர் குமாரிடம் தெரிவித்தார். அவர் பாஸ்கரனை போனில் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன், குமாரின் செல்போனுக்கு வீரலட்சுமியின் குளியல் வீடியோவை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் எருமப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வழக்கு பதிவு செய்து பாஸ்கரன் மற்றும் வீடியோைவை அனுப்பிய மனோஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×