என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தாயின் 2-வது கணவர் கைது
- கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
- இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வதுதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சரவணன் தனது மனைவியின் மகளான 19 வயது இளம்பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். நேற்று தற்செயலாக செல்போனை அந்தப் பெண் பார்த்தபோது தனது மகளின் குளியல் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பெண்ணின் தாயார் அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்