search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vistara Flight"

    • சில நிமிடங்களில் தீடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
    • பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    புவனேஷ்வரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தீடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், விமானம் சேதமடைந்தது.

    சேதமடைந்த விமானத்தில் 169 பேர் பயணித்த நிலையில், புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் பத்தே நிமிடங்களில் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஆலங்கட்டி மழை பெய்ததில் விமானத்தின் வின்ட்ஷீல்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

    • விமான குழுவினர் நடுவானில் குழந்தைக்கு கேக் வெட்டி கொண்டாடி அந்த குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
    • கொண்டாட்ட படங்களை ஆரோகியின் தந்தை ரோகித் டுவிட்டரில் பகிர்ந்து விஸ்தாரா விமான குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சியை தரும் அதிலும் குழந்தைகளின் முதல் பிறந்தநாளை அவர்களது பெற்றோர்கள் விசேஷமாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளை செய்வார்கள்.

    இந்நிலையில் ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளை விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. விஸ்தாரா விமானத்தில் மாலத்தீவுக்கு ரோகித் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார். அவரது மகள் ஆரோகிக்கு அன்றுதான் முதல் பிறந்த நாளாகும்.

    இதையறிந்த விமான குழுவினர் நடுவானில் அந்த குழந்தைக்கு கேக் வெட்டி கொண்டாடி அந்த குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த கொண்டாட்ட படங்களை ஆரோகியின் தந்தை ரோகித் டுவிட்டரில் பகிர்ந்து விஸ்தாரா விமான குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    • டேராடூனுக்கு செல்லும் யுகே 852 என்ற விஸ்தாரா விமானத்தில் இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • விமான பணி பெண்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.

    நடுவானில் பயணிகள் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து டேராடூன் சென்ற விமானத்தில் கடந்த 25-ந்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பயணி ஒருவர் சக பயணியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் எனது மகளை மிரட்டுவாய் என ஆவேசமாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    2 பயணிகளையும் விமான பணி பெண்கள் சமாதானப்படுத்தும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. 27 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனமான விஸ்தாராவின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் இருந்து டேராடூனுக்கு செல்லும் யுகே 852 என்ற விஸ்தாரா விமானத்தில் இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விமான பணி பெண்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர். எஞ்சிய பயணம் அவர்களுக்கு சுமூகமாக அமைந்தது என கூறப்பட்டுள்ளது.

    ×