search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்படம்"

    • புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ’ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
    • இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

    விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'தெறி' 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

    இதைதொடர்ந்து விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் நடித்தார். உடல்நலக் குறையால் கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இந்தாண்டு நடிக்க தொடங்கவிருக்கிறார்.

    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெருமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மிரட்டியுள்ளார். கருப்பு கலர் கோட் சூட் அணிந்து அதில் காணப்படுகிறார். 'இட்ஸ் ஃபேஷன் பேபி' என்ற தலைப்பில்  பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை எடுத்தவர் அகுலா மது. ஆடை வடிவமைப்பை ப்ரீத்தம் செய்துள்ளார்.

     

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார்.
    • மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

    மதராச பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து ஐ, தெறி, மிஷன் சாப்டர்-1 உள்பட தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.

    இவர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவருக்கு 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட் விக்கை எமிஜாக்சன் காதலித்தார். அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

    சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட எமிஜாக்சன் தனது காதலர் எட்வெஸ்ட் விக், மகனுடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வெஸ்ட் விக்குடன் நடந்த நிச்சயதார்த்த விருந்து புகைப்படங்களை வெளியிட்டார்.

     

    தற்போது மகனுடன் ஜாலியாக மரத்தில் ஏறி விளையாடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமிஜாக்சன். புகைப்படத்தோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதிய வீட்டில் இது எங்களின் முதல் வசந்தகாலம் என பதிவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்தித்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதில் காவலர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்துவரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி தலைமை காவலர் தயாளன் கூறும்போது,

    வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது என்று கூறினார்.

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
    • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

    அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

    அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

    ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

    காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

    சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

    இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

    பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும்.
    • வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் குருவைய்யா. பூ வியாபாரி. இவரது மகன் ரோஷன்(27). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள கோவில் பாளையம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகள் உஷா(31) என்பவருடன் பேஸ்புக்கில் பழகி வந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் உஷாவுடன் பேசுவதை ரோஷன் நிறுத்திவிட்டார். ஆனால் அதன்பிறகும் ரோஷனின் செல்போனுக்கு தொடர்ந்து உஷா போன் செய்து வரவே அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த உஷா பேஸ்புக்கில் இருந்த ரோஷனின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதனை தன்னுடன் சேர்ந்து இருப்பது போல போஸ்டர் தயாரித்தார். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும் என நிலக்கோட்டை பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்.

    மேலும் குருவைய்யா பூ மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது உஷா மற்றும் கொங்கபட்டியை சேர்ந்த சவுந்திரராஜன்(55), சிவஞானம்(45), திருப்பூர் கூத்தம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி கிருஷ்ணவேணி(40) ஆகிய 4 பேரும் வழிமறித்து ரூ.5லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் குருவைய்யா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய உஷா என்ற கமலேஸ்வரி(31), சிவஞானம்(45), கிருஷ்ணவேணி(40) ஆகிய 3 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் உத்தரவிட்டார்.

    போலீசார் விசாரணையில் உஷா என்ற கமலேஸ்வரி இதேபோல் பல்வேறு வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொது மக்களை புகைப்படமாக எடுத்து எதற்காக வெளியில் நோட்டீஸ் ஆக ஒட்டுகிறீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த சம்பவத்தை பொதுமக்கள் எதிர்த்ததோ டு கண்டித்து உள்ளனர்

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் தனலட்சுமி நகர் சேர்ந்தவர் அருள் (வயது 63). முன்னாள் ராணுவ வீரர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதிைய சேர்ந்த ஒரு சிலர் அருள் வீட்டிற்கு நேரில் சென்றனர். பின்னர் வீட்டில் ஏன் அதிகளவில் சி.சி.டி.வி கேமரா வைத்துள்ளீர்கள்? மேலும் சாலையில் செல்லும் பொது மக்களை புகைப்படமாக எடுத்து எதற்காக வெளியில் நோட்டீஸ் ஆக ஒட்டுகிறீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று சி.சி.டி.வி.கேமராக்களை அடித்து நொறுக்கினார்கள்.

    இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னாள் ராணுவ வீரரான அருள் தனது வீட்டில் அதிக அளவில் சி.சி.டி.வி. கேமராக்களை வைத்துக் கொண்டு சாலையில் செல்லும் பொது மக்களை கண்காணிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் புகைப்படத்தை எடுத்து வீட்டிற்கு வெளியில் ஒட்டி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை பொதுமக்கள் எதிர்த்ததோ டு கண்டித்து உள்ளனர். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தகவல்.
    • கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு.

    பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் இணைக்க வேண்டும்.

    இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது
    • நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோட்டார் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த திருட்டு சம்பவங்களில் பெண் கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் டிப்-டாப் உடை அணிந்து வரும் பெண்கள் கல்லூரி மாணவிகள் போல பயணி யோடு பயணியாக சேர்ந்து நகை திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.

    இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களின் புகைப் படங்கள் போலீசில் சிக்கி உள்ளது. இந்த புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    மேலும் புகைப்படங் களை பஸ் நிலையங்களில் திருடர்கள் ஜாக்கிரதை என்று துண்டு பிரசுரங்கள் ஒட்டி உள்ளனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் புது நடவடிக்கை மேற்கொண்டு வருகி றார்கள். வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பெண் போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் மாற்று உடையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
    • பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கிளப் அவுஸ் என்ற டேட்டிங்கை பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் திலீப் குமார் என்பவர் பழக்கமானார்.

    இது நாளடைவில் காதலாக மாறியது. திலீப் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்க அந்த பெண் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினார். நாளடைவில் தீலிப்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் பழகு வதை நிறுத்திக்கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த திலீப்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நிர்வாண வீடியோவை வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர். வேலைக்காக துபாய் சென்றிருந்த திலீப்குமாரை இந்தியாவுக்கு வரவழைத்து அவரை கைது செய்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8 மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் புகார் கொடுத்த பெண்ணிற்கு தெரிந்தவராகவோ அல்லது முன்னாள் காதலர், உறவினராகவோ இருக்கின்றனர்.

    எனவே குறிப்பாக பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம்.

    மேலும் ஆண் நண்பர்களோ காதலர்கள் அல்லது உங்களுக்கு பழக்கப்பட்டவர்களோ அவர்கள் கேட்பதற்கு இணங்க வீடியோ காலில் பேச வேண்டாம்.

    பெண்களை மிரட்ட பயன்படுத்தப்படுகின்ற புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பெண்களாகவே எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட புகைப்படங்களாக தான் உள்ளது.

    எனவே பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×