search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wagner group"

    • வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
    • இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

    ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷிய ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது.

    இந்த நிலையில் வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இது போன்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரிட்டன் அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை தொடர்ந்து வாக்னர் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதோடு, இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.

    • வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக இங்கிலாந்து அரசு அறிவித்தது.
    • வாக்னர் குழுவின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷிய ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது.

    இந்த நிலையில் வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக இங்கிலாந்து அரசு அறிவித்தது. அந்த குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்னர் குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்றும், அக்குழுவின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை மந்திரி சுயெல்லா பிராவர்மேன் கூறும்போது, வாக்னர் குழு, ரஷிய அதிபர் புதினின் ராணுவ கருவியாகும். அது வன்முறை மற்றும் அழிவுகரமானது. உக்ரைன் மற்றும் ஆப்பிரிக்காவில் வாக்னர் குழுவின் செயல்பாடு உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகும் என்றார்.

    • யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது.
    • புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தனியார் ராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின்.இந்த படை ரஷிய அதிபர் புதினின் துணை ராணுவ படை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது.

    ரஷிய ராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன் போரில் வாக்னர்படை முக்கிய பங்காற்றி வருகிறது. உக்ரைன் போரின் போது முக்கிய நகரங்களை இந்த படை வீரர்கள் தான் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் கடந்ந 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. யெவ்கெனி பிரிகோஷின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாக்னர் படையினர் மாஸ்கோவில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் 2 நாளில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. வாக்னர் குழுவினருக்கு மன்னிப்பு வழங்குவதாக ரஷியா அறிவித்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. ரஷியாவின் சதி செயலால் அவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட வெண்கெனி பிரிகோஷின் காரில் சென்றபடி பேசுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் நான் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறேன், நான் நலமாக இருக்கிறேன். இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறுவது போல வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. எப்போது எடுக்கப்பட்டது? என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வீடியோவில் அவர் பேசுவது உண்மைதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் உயிரோடு இருக்கிறாரா?அல்லது இறந்து விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இந்த புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



    • 2023 ஆகஸ்டில் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
    • 2022 பிப்ரவரி மாதமே அமெரிக்கா பயண கட்டுப்பாடுகளை வெளியிட்டு இருந்தது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவிற்கு போரில் உதவி வந்த தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார்.

    சாமர்த்தியமாக இதனை புதின் எதிர்கொண்டு இந்த கிளர்ச்சியை அடக்கினார். இதனையடுத்து பிரிகோசின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது.

    அமெரிக்க அரசாங்கம், தனது குடிமக்கள் யாரேனும் பெலாரஸ் நாட்டில் இருந்தால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டு பேஸ்புக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளங்களில், "பெலாரஸ் நாட்டை விட்டு தனது குடிமக்கள் வெளியேற வேண்டுமென அமெரிக்கா முதல்முறையாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அது வந்த இரு நாட்களில் பிரிகோசின் பலியானார். ஒரு வேளை பிரிகோசினிற்கு ஏற்படப்போகும் நிலை குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கலாம்" என குறுஞ்செய்தியுடன் அந்த தகவல் பரவியது.

    எவ்ஜெனி பிரிகோசின் மரணத்தில் ரஷியாவிற்கு பங்கு இருக்கலாம் என பலர் நம்பி வந்த நிலையில், இச்செய்தியின் மூலம், அமெரிக்காவிற்கு பிரிகோசின் மரணம் குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் என கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.

    ஆய்வில் இந்த தகவல்கள் அனைத்தும் தவறு என நிரூபணமாகியுள்ளது.

    2022 பிப்ரவரி மாதமே பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    அதில், "ரஷியா, பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாலும், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறுவது தடுக்கப்படும் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்கர்கள் பெலாரஸ் நாட்டிற்குள் வர வேண்டாம். பெலாரஸிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

    இந்த பயண கட்டுப்பாடு குறித்த உத்தரவு மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவால் புதுப்பிக்கப்பட்டது.

    பிரிகோசின் இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன், பெலாரஸ்ஸின் அண்டை நாடான லிதுவேனியா, லிதுவேனியா-பெலாரஸ் எல்லைகளில் உள்ள பெலாரஸ் நோக்கி செல்லும் 2 முக்கிய வழிகளை மூடியது. இதனால் அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று புதுப்பிக்கப்பட்டது.

    ஆக, எவ்ஜெனி பிரிகோசின் இறப்பை முன்கூட்டியே அறிந்துதான் அமெரிக்கா பயண தடை விதித்தது எனும் செய்திகளில் உண்மை இல்லை.

    • புதினுக்கு எதிராக எவ்ஜெனி ஒரு கிளர்ச்சியை தொடங்கினார்
    • மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்தில் எவ்ஜெனி உயிரிழந்தார்

    உலகின் வல்லரசுகளின் ஒன்றான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (70).

    தனக்கு எதிரான போட்டியே இல்லாமல் பார்த்து கொள்வதில் வல்லவராகவும், எதிர்ப்போரை இரும்பு கரம் கொண்டு அடக்கும் சர்வாதிகாரியாகவும் இருப்பதால், ஆட்சிக்கு வந்து சுமார் 23 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து அவரே அதிபராக இருந்து வருகிறார்.

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை உக்ரைன் கடுமையாக எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் போரிட்டு வருகிறது. ரஷிய-உக்ரைன் போர் 540 நாட்களை கடந்து இன்று வரை தொடர்து வருகிறது.

    இந்த போரில் ரஷிய ராணுவத்திற்கு, அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு எனும் கூலிப்படையும் உதவி வந்தது.

    கடந்த ஜூன் மாதம், எதிர்பாராத விதமாக வாக்னர் அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், ரஷிய ராணுவத்திற்கு எதிராகவும், ரஷிய அதிபர் புதினுக்கு எதிராகவும் ஒரு கிளர்ச்சியை தொடங்கினார். இந்த கிளர்ச்சி பெரிதாகி விடாமல் திறமையாக புதின் தடுத்ததால், பிரிகோசின் பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

    இதற்கிடையே 3 நாட்களுக்கு முன்பு ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடமேற்கே உள்ள பகுதியில் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் எவ்ஜெனி பயணிக்கும் போது, அது விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாக ரஷியா தெரிவித்தது.

    இந்நிலையில் தற்போது உள்ள வாக்னர் குழு வீரர்களுக்கு புதின் ஒரு புது உத்தரவு போட்டிருக்கிறார். ரஷிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளமான கிரெம்ளின் தனது வலைதளத்தில் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    இந்த அறிக்கையில், "ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு துணை நிற்கும் அனைவரும் ரஷியாவிற்கு மாறாத விசுவாசமுடன் உழைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ரஷியாவின் தார்மீக மற்றும் நீதி சார்ந்த பாரம்பரியத்தை மேலும் வலுவாக்கும் வகையில் விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். மூத்த அதிகாரிகளிடமிருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்," என்று தெரிவித்து இருக்கிறது.

    இதன் மூலம் ரஷியாவில் உள்ள வாக்னர் மற்றும் பிற தனியார் ராணுவ அமைப்பினரை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்து கொள்ள புதின் முயல்கிறார் எனும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கு எதிரான கலகத்தை கடந்த மாதம் தொடங்கியது.
    • அந்த அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் எவ்ஜெனி பிரிகோசின்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை கடந்த மாதம் தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்தக் கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார். அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருந்தார்.

    இந்நிலையில், ரஷியாவின் டிவெர் மாகாணத்தில் நடந்த விமான விபத்தில் 10 பேர் பலியானார்கள் என்றும், அதில் வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசினும் ஒருவர் என அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    விமான பயணிகள் பட்டியலில் பிரிகோசின் பெயர் உள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பிரிகோசின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.

    ×