search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online"

    • செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார்.
    • விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி கொல்லர் தெரு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 38). இவரது செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரூ.12,99,534 பணம் செலுத்தி பதில் அளித்துள்ளார்.

    ஆனால் இவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் மெய்ய னூர் அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரும் ஆன்லைனில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேந்திரன், இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.
    • ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன.

    சேலம்:

    மாறி வரும் நவீன தொழில் நுட்ப யுகத்துக்கு ஏற்ப சமீப காலமாக இணையவழிக் குற்றங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.

    இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடம் நம்ப வைத்து பணம் பறித்தல், ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன. இத்தகைய குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற மின்னஞ்சல், வாட்சப் என போலியான தகவல்களை அனுப்பு கின்றனர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்குக் எஸ்.எம்.எஸ்.அனுப்புகிறார்கள்.

    செல்போன் டவர் அமைத்துத் தருகிறோம், ஆஸ்திரேலியக் கப்பலில் வேலை வாங்கித் தருகிறோம், முத்ரா திட்டத்தில் மானிய மாகக் கடனளிக்கிறோம், வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பரிசு வந்திருக்கிறது அதைக் கொடுக்கிறோம், கொரோனா நிவாரணநிதி அளிக்கிறோம், வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம் என்று நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவார்கள். நம்பிக்கையை அதிகரிக்க போலியான மின்னஞ்சல், போலியான இணையதளத்தைக் கூடக் கொடுப்பார்கள்.

    இவ்வாறாக பெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டு முன்பணம் அல்லது சேவைக் கட்டணம் அல்லது சுங்கக் கட்டணம் என்று ஏதாவது சொல்லி, பணத்தைக் கட்டச் சொல் வார்கள். நமக்கும் ஆசை கண்ணை மறைப்பதால் கேள்வியே கேட்காமல் கேட்கும் தொகையை கட்டிவிடுவோம். அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்வோம்.

    சில நேரங்களில் பணமாகக் கேட்காமல் அறியாமையைப் பயன்படுத்த வங்கி அதிகாரியாக ஆதார் சரிபார்க்கிறோம், வருமான வரித்துறையினராக பான் சரிபார்க்கிறோம், ஆதார் - பான் அட்டை இணைக்கிறோம், தொலைத்தொடர்புத் துறையினராக கே.ஒய்.சி. சரிபார்ப்பு, கூரியர் வந்துள்ளது அடையாளத்தைச் சரி பார்க்கிறோம், கொரோனா தடுப்பூசி போடப் பதிவு செய்யச் சொல்லியோ கறாராகவும் பேசுவார்கள்.

    இவர்களை நம்பி பல தகவல்களைக் கொடுத்தால் ஏ.டி.எம்.கார்டின் எண், ரகசிய எண் என்று நேரடியாகக் கொடுத்து ஏமாறுபவர்கள் உண்டு. சில நேரம் ஓடிபி எண் மட்டும் கொடுத்து ஏமாறுபவர்களும் உண்டு. அட்டை என்னிடம் தானே இருக்கு எப்படி ஏமாற்ற முடியும் என நினைக்கலாம். ஆனால் அட்டை இல்லாமல் அட்டை எண்ணுடன் ரகசிய எண் மட்டும் கொடுத்து, பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்தால் குறுஞ்செய்தி கூட இல்லாமல் பணம் மாற்றமுடியும்.

    வங்கியில் பணமில்லை என்றுகூட அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஓ.டி.பி. மூலம் கணக்கில் நுழைந்து, உங்கள் பெயரில் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. நீங்கள் கொடுக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று மெல்லிய மிரட்டல்கள் வந்தாலும் இத்தகைய தகவல்களைப் பகிரவேண்டாம். வங்கியைத் தொடர்பு கொண்டு நிலையறிந்து செயலாற்ற வேண்டும்.

    இதுபோன்ற இணையவழி குற்றங்களை தடுக்க அரசு சைபர் கிரைம் என்ற்ர பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. எனினும் குற்றச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

    இந்த சூழலில் சேலத்தில் வேலை தருவதாக எஸ்.எம்.எஸ்.அனுப்பி மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

    சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி திவ்யா (வயது 36). இவரது செல்போனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த குறுந்தகவலை பார்த்து, அதில் வேலை கேட்டு மெயில் அனுப்பி உள்ளார்.

    அதை தொடர்ந்து இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சில நிபந்தனைகளை பணம் செலுத்தி செய்தால், பகுதி நேர வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய திவ்யா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் செலுத்தி அதன் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி எந்த ஒரு வேலையும் கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பாலாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வீரமணிகண்டன் (வயது 28). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை பார்த்து பகுதி நேர வேலைக்கு தொடர்பு கொண்டு உள்ளார். இவரும் அதே பாணியில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் பேச்சைக் கேட்டு ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளார்.

    ஆனால் இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீர மணிகண்டன், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பகுதி நேரம், முழுநேர எம்.பில்., பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பங்களை https://b-u.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக 30-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    பகுதி நேரம் முழுநேர எம்.பில்., பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.

    விண்ணப்பங்களை https://b-u.ac.in/என்ற இணையதளம் வாயிலாக 15ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எம்.பில்., படிப்பிற்கு ரூ.750, பி.எச்டி., படிப்புக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். விபரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
    • இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனராக கடந்த 2029-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

    ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டப் பிறகு இந்தி கட்டாயம், இலவச மருந்து மாத்திரை விநியோகம் நிறுத்தம், மாத்திரை தட்டுப்பாடு, உயர்சிகிச்சைக்கு ஏழைகளை தவிர்த்து கட்டணம் என அறிவித்து பல சர்ச்சைக்கு உள்ளானார்.

    இதனால் ஜிப்மருக்கு எதிராக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடந்தது. மத்திய அரசு கூடுதல் நிதி அளித்தும் அந்த நிதியை முறையாக பயன்படுத்தி செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.

    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெறப்பட்டது. கவர்னர் தமிழிசை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வும் செய்தார்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் மாற்றம் உறுதியாகி உள்ளது. தற்போதைய இயக்குனர் ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை பதவியில் இருக்கலாம். தற்போது அவர் பொறுப்பேற்று 4½ ஆண்டுகள் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் ஜிப்மர் இணையத்தளத்தில் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறையில் இருந்திருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை அல்லது பொது சுகாதாரத்தில் உயர் முதுகலைத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம் ரூ.2 ½ லட்சத்துக்குள் தரப்படும். ஜிப்மர் வளாகத்தில் குடியிருப்பு விடுதி தரப்படும். வயது 60-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜிப்மர் இயக்குனராக 65 வயது வரையிலோ, நியமனத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம். நிர்வாக துணை இயக்குனருக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோகுல் கண்ணன் (வயது 25). இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
    • டிரேடிங் கம்பெனிக்கு அமெரிக்க டாலராக பணத்தை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை, அல்லிகுட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கோகுல் கண்ணன் (வயது 25). இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    மேலும் அந்த டிரேடிங் கம்பெனிக்கு அமெரிக்க டாலராக பணத்தை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய கோகுல் கண்ணன், அவர் குறிப்பிட்ட வங்கியில் ரூ.1 லட்சத்தை செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு, அந்த மர்மநபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகுல் கண்ணன், இது குறித்து சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

    • போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சம்பவம் நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கீழ் காலனியை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது22). கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்தார்.

    இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தவணை தேதி முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக ஆன்லைன் செயலி நிறுவனத்தார் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர்.

    ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காததால், லோகேஷ்வரனின் பெற்றோரை, கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

    இதனால், தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போனதை அடுத்து மனமுடைந்த லோகேஷ்வரன், வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆன்லைனில் கடன் செயலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாலை வந்தார்.
    • ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாலை வந்தார். அப்போது, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தலைவர் கந்தசாமி தலைமையில், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், உபதலைவர் சின்னதம்பி , இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அப்போது பல இடங்களில் லாரிகள் இல்லாமலேயே ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர். எனவே ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
    • கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.

    திருப்பூர்:

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.மோசடி நபர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு ஏமாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடலாம். நேரில் வருவதாக கூறி, போலீஸ் உதவியை உடனடியாக பொதுமக்கள் நாட வேண்டும்.

    தங்கள் துறை சார்ந்த உயர் அதிகாரி போல் சமூக வலைதளங்களில் தங்களை தொடர்பு கொண்டு, தான் அவசர வேலையாக இருப்பதாக கூறி, கிப்ட் கார்டுவாங்கி அனுப்புமாறு கேட்டு மோசடியில் ஈடுபடலாம்.ஆன்லைனில் ஆர்டர் செய்யாத உணவுகள் தங்களுக்கு வந்திருப்பதாக கூறிஅதை திருப்பி அனுப்ப தங்கள் மொபைல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பே லேட்டர் வசதியை பயன்படுத்தி ஆன்லைனில் தங்களது கணக்கில் மற்ற நபர்கள் பொருட்களை வாங்கிவிட்டு அந்த நிறுவனத்தால் பணம் கேட்டு தங்களுக்கு அறிக்கை வரலாம். ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும்.ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.

    அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை குற்றவாளிகள், அவர்களுக்கு சாதமாக பயன்படுத்தி, உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் போட்டோக்களை திருடுகின்றனர். தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது. சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நட்பு வேண்டாம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    சைபர் குற்றங்களில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைத்து, தங்களது புகாரை பதிவு செய்யவும். கால தாமதம் இன்றி பதிவு செய்யப்படும் புகார் மீதான நடவடிக்கை விரைவானதாக இருக்கும் என்றனர்.

    சென்னை ஐ.டி. எ.எஸ்., துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தனசேகர் கூறியதாவது:-

    ஸ்பார்ஸ் என்பது தேசிய அளவில் முப்படையின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிக்கல்கள் இன்றிஒற்றை சாளரமுறையில் ஓய்வூதியம்செல்வதற்கு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளம்.இதில் 35 லட்சம் ஓய்வூதியதாரர்களில் 12 முதல் 13 லட்சம் பேரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்களையும் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் நாமினியுடன் தற்போதேஇருவரும் இணைந்த வங்கிக்கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.

    தற்போது அனைத்தும் டிஜிட்டல்மயம் ஆகியுள்ளதால், அதில் நடக்கும் மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.ஓ.டி.பி., தகவலை, எக்காரணம் கொண்டும் செல்போன் வாயிலாக ஒருவருக்கும் தெரிவிக்கக்கூடாது. செல்போன் வாயிலாக ஒரு போதும் தரக்கூடாது என்றார்.

    • ஈரோட்டில் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் மிளகாவை மொத்த விலையில் வாங்குவதற்காக இணையதளம் உதவியை நாடியுள்ளார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த போன் நம்பருக்கு அந்த பெண் வியாபாரி போன் செய்துள்ளார்.

    அப்போது எதிர்முனையில் பேசியவர்கள் தாங்கள் நிறுவனம் குஜராத்தில் உள்ளது என்றும் மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் வியாபாரி அவர்கள் கூறியபடி ஆயிரம் கிலோ பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் முன் தொகையாக ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800-யை செலுத்தியுள்ளார்.

    அதன் பின்னர் அவர்கள் கூறியபடி அந்த பெண் வியாபாரிக்கு அவர்கள் பொருட்களை அனுப்பவில்லை.

    இது குறித்து அந்த பெண் வியாபாரிகள் கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் - ஆப் என்று வந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கை முதலில் முடக்கினர்.

    அதன் பின்னர் அவர் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்தனர். நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணை அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து மோசடியில் அவர் இழந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 பணத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அந்த பெண் வியாபாரி நன்றி கூறி சென்றார்.

    முதல் தலைமுறை இளைஞர்கள் சேவை சார்ந்த தொழில்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் துவங்க  முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர்  மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது . 

    இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ .10 லட்சம் முதல் 5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 
    25 % அல்லது அதிக பட்ச மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கவும் மேலும் மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10% மானியம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    மேலும் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3% வட்டி மானியமாகவும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு 
    வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது. 

    மகளிர்களுக்கு 50% ஒதுக்கீடும் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது . 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 

    ஏற்கனவே மத்திய- மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடனுதவி பெற இயலாது . விவசாயம், வாகனம் மற்றும் மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் தவிர்த்து ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்த்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

    எனவே தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொதுமேலாளர் , மாவட்டத் தொழில் மையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை 630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில்மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 8925533991 , 8925533990 மற்றும் 8925533989 என்ற செல்லிடபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. 
    பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் ஆன்லைன் சேவைகளை சமூக வலைதளத்திலும் பெறலாம் என திருச்சி மண்டல ஆணையாளர் முருகவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    திருச்சி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆசாத் கா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியில்  பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் அனைத்து ஆன்லைன் சேவைகள் பற்றிய உடனடி தகவல்கள் மற்றும் நன்மைகள் டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், டிஜிலாக்கர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலமும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

    அதாவது Twiter-@socialepfo, Facebook-https://www.facebook.com /socialepfo, Youtube- https://Youtube.com/socialepfo, Dogilocker-https:// digilocker.gov.in, mobile app: UMANG என்ற சமூக வலைதளங்களில் சேவைகளை பெறலாம்.

    தொழில் அதிபர்கள், இ.பி.எப். உறுப்பினர்கள், இ.பி.எப். ஓய்வூதியம் பெறுவோர் சேவைகள், புதிய தகவல்கள் மற்றும் முன்மயற்சிகள் பற்றிய முதல் தகவல்களை மேலே குறிப்பிட்டுள்ள சமூக ஊடகங்கள் மூலம் தாரளமாக பெறலாம்.

    தங்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் ஏதேனும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய நாட்டில் உள்ள அனைத்து இ.பி.எப்.ஓ. அலுவலகங்களிலும் https:// epfindia.gov.in/ site docs/PDFs/ Downloads PDFs/ Whatsapp_ Helpline.pdf, http:// epfigms.gov.in என்ற வழிகளில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாலிபரிடம் செல்போன் விற்பதாக கூறி ஆன்லைனில் மர்ம நபர்கள் செய்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து ரூ.39 ஆயிரம் மீட்டு வாலிபரிடம் ஒப்படைத்தனர்
    சேலம்:

    சேலம் போர்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்த நவீன் குமார். இவர் இணையதளத்தில்  குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் ரூ.39 ஆயிரத்து 500 முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று சொன்னார். அதை நம்பி நவீன்குமார் போனில் பேசியவர் கூறிய வங்கி கணக்கிற்கு கூகுல்பே மூலம் ரூ.39 ஆயிரத்து 500  அனுப்பி வைத்தார்.

    ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் செல்போன் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு நவீன் குமார் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 

    இதுகுறித்து  சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதில் நவீன் குமார் அனுப்பிய பணம் மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கி கணக்கிற்கும் பஞ்சாப்பில் உள்ள தனியார் வங்கி கணக்கிற்கும் சென்றிருப்பது தெரியவந்தது. 

    மோசடி செய்யப்பட்ட பணத்தை நவீன்குமாருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளின் லீகல் டிபார்ட்மெண்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நவீன்குமாரிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட  ரூ.39 ஆயிரம் 500 முழுவதும் அவரது வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது. 

    மேலும் இது போன்ற குறைந்த விலையில் செல்போன், 2, 4  சக்கர வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் விற்பதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதை நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் ஓ.டி.பி.க்களை யாரிடமும் பகிர வேண்டாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம், குறைந்த வட்டியில் கடன் என்ற வரும் போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். 

    அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-க்கு விரைவாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டுத் தர இயலும் என  சேலம் சைபர் கிரைம் டி.எஸ்.பி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ×