search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    வருங்கால வைப்பு நிதியின் ஆன்லைன் சேவைகளை சமூக வலைதளத்திலும் பெறலாம்

    பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் ஆன்லைன் சேவைகளை சமூக வலைதளத்திலும் பெறலாம் என திருச்சி மண்டல ஆணையாளர் முருகவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    திருச்சி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆசாத் கா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியில்  பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் அனைத்து ஆன்லைன் சேவைகள் பற்றிய உடனடி தகவல்கள் மற்றும் நன்மைகள் டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், டிஜிலாக்கர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலமும் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

    அதாவது Twiter-@socialepfo, Facebook-https://www.facebook.com /socialepfo, Youtube- https://Youtube.com/socialepfo, Dogilocker-https:// digilocker.gov.in, mobile app: UMANG என்ற சமூக வலைதளங்களில் சேவைகளை பெறலாம்.

    தொழில் அதிபர்கள், இ.பி.எப். உறுப்பினர்கள், இ.பி.எப். ஓய்வூதியம் பெறுவோர் சேவைகள், புதிய தகவல்கள் மற்றும் முன்மயற்சிகள் பற்றிய முதல் தகவல்களை மேலே குறிப்பிட்டுள்ள சமூக ஊடகங்கள் மூலம் தாரளமாக பெறலாம்.

    தங்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் ஏதேனும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய நாட்டில் உள்ள அனைத்து இ.பி.எப்.ஓ. அலுவலகங்களிலும் https:// epfindia.gov.in/ site docs/PDFs/ Downloads PDFs/ Whatsapp_ Helpline.pdf, http:// epfigms.gov.in என்ற வழிகளில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×