search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் செய்திகள்"

    சேலம், ஆனைமடுவில் மழை அதிக பட்சமாக 42 மி.மீ. பதிவாகியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.   நேற்றிரவும்  கடும்  உஷ்ணம் நிலவியதால் பொது மக்கள் தூங்க முடியாமல் புரண்டு, புரண்டு படுத்தனர்.

    திடீர் மழை 
    இந்த  நிலையில்   சேலம் மாவட்டத்தில் இன்று அதிகாலை பரவலாக  மழை பெய்தது . சேலம் மாநகரில் 6 மணிக்கு தொடங்கிய மழை  40 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது .  இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.  மழையை  தொடர்ந்து மாந–கர் முழுவதும்   குளிர்ந்த  சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதே போல வாழப்பாடி அருகே உள்ள ஆனைமடுவு பகுதியில் கனமழை பெய்தது . இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
    ஏற்காடு கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்
    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 

    இந்த மலர்க்கண்காட்சியில் மேட்டூர், அணை, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி உள்ளிட்ட 7 மலர் வடிவமைப்புகள் 5 லட்சம் மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கம் அருகே அனைத்து துறையின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்குகளையும் மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,  தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், கிளியூர் மலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டென்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும் என்றார்.  

    இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளை நிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலவச போர்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும் என்றார்.

    விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளும்.ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உள்ளூர் மலைவாழ் மக்களுக்கும்,உள்ளூர் வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார். 

    திறப்புவிழா நிகழ்ச்சியில் அண்ணாபூங்கா ஊழியர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம் போட்டோ எடுத்துக்கொண்ட காட்சி.

    இவ்விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ் ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளர் டி.எம்.செல்வகணபதி. ஏற்காடு ஒன்றிய பொருப்பாளர் தங்கசாமி,ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பாலு, கிளை செயலாளர்கள் ஆட்டோ ராஜா, குணசேகரன்,வைரம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜியகுமார்.மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    ரெயில்வே ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் திறன் மேம்பட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.   இந்த  தொடக்கவிழாவில் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ெரயில்வே அதிகா–ரிகள் உடன் இருந்தனர். 

      டிக்கெட் பரிசோதகர்கள், பயணச்சீட்டு வழங்குப–வர்கள், ெரயில் நிலைய அதிகாரிகள், பார்சல் அலுவலகத்தில் பணி–புரியும் அலுவலர்கள், கூட்ஷெட்டில் பணிபுரியும் ெரயில்வே தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

     இந்தப் பயிற்சியில்  ெரயில் பயணிகளுக்கு  சேவைகளை எப்படி சிறப்பாக செய்வது, ெரயில் பயணிகளின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பயணிகளுடன் கனிவாக நடந்து கொள்வதைப் பற்றி, பயணிகளின் தேவைகளை நன்றாக அறிந்து அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும், கனிவான முறையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பது  குறித்து பயிற்சி  அளிக்கப்படுகிறது.
    எடப்பாடி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் திடீரென மாயமானார்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி ஊராட்சி, மோட்டூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி இவரது மகள் தமிழரசி(23) இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

    இத்தம்பதியினருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 
    இந்நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த தமிழரசி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசி தனது 6 மாத கைக்குழந்தையுடன் திடீரென மாயமானார். 

    கை குழந்தையுடன் மாயமான தமிழரசியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் அவர் கிடைக்காத நிலையில்,கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன தமிழரசியை யாரேனும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்களா? அல்லது அவர் வேறு எதேனும் குடும்ப பிரச்சினைக்காக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கும் செயல்பாடு நாளையுடன் முடிவடைகிறது.
    சேலம்:

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி சேலம் மாவட்டத்தில்  உள்ள  அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்,  நலிவடைந்த பிரிவினரின்  குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை வகுப்பில் (எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது. 
     
    அதன்படி வருகிற கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேருவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு கல்வித்துறை வெளியிட்டது.  விண்ணப்பிப்பதற்கான செயல்முறை  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின்  கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) இணையதளத்தில்   கடந்த  ஏப்ரல் மாதம் 20-ந்தேதி  தொடங்கியது.  

    விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  18-ம் தேதி என அறிவித்து இருந்தது.  அதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு இந்த இணையதளம் வழியாக    விண்ணப்பித்து வந்தனர்.

    இதனிடையே  இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க உரிய ஆவணங்களான  வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,  ஆதார்   உள்ளிட்டவைகள் அரசிடம இருந்து பெறுவதற்கு பல நாட்கள் ஆனதால்   ஏழை, எளிய பெற்றோர் பலர் விண்ணப்பிக்கவில்லை. இது அரசின் கவனத்திற்கு வந்தது.
     
    இதையடுத்து,  தமிழக அரசு, ஏழை, எளிய குழந்தைகளின் நலன் கருதி  விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து உத்தரவிட்டது. அதாவது 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை என 7 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் வழங்கியது.  இந்த நிலையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் முறை   நாளை (25-ந்தேதி) யுடன் முடிவடைகிறது.  

    நாளை கடைசி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெற்றோர் பலர் ஆர்வமுடன்  விண்ணப்பித்து  வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில்  கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் வரும் 353 பள்ளிகளிலும் கடந்த ஆண்டை விட விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளன. 
    சேலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ரத்தினவேல் காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). இவருடைய மகன் மணி (37). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
     
    சுப்பிரமணியின் மனைவி இறந்த நிலையில்  இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். சுப்பிரமணி தறிதொழிலாளியாகவும், மணி சமையல் கலைஞராகவும் வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம்  உள்ளதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
     
    வழக்கம்போல் நேற்று இரவு  அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் சுப்பிரமணி ஆவேசத்துடன் மகனை கட்டையால் சரமாரியாக அடித்தார்.   

    இதில் படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து இறந்தார்.  இதை அறிந்த ரத்தினவேல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதற்கிடையே சுப்பிரமணி காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
     
    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியை வலைவீசி தேடி வருகிறார்கள். மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    சேலத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    சேலம்:

    சேலம் 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெட்ரோல், டீசலின் தரம் குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.

    பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சண்முகம் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். தொடர்ந்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் மஞ்சள்நாதன் ஊழியர்களிடம் தரத்தின் விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
    சேலம் வழியாக செல்லும் கோவா ரெயிலில் கூடுதலாக ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
    சேலம்:

    கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம், ஈரோடு, கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்  என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி நேற்று கூடுதல் ஏ.சி. பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டது.  வருகிற ஜூன் மாதம் 27ந் தேதி வரை  தற்காலிகமாக இயக்கப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில் செல்லும் வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 17316) கூடுதலாக 2 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு  நாளை முதல் வருகிற ஜூன் மாதம் 28ந் தேதி தற்காலிகமாக இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
    4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி படிப்பு அங்கீகாரம் பெற சேலம், நாமக்கல் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்வி அமைச்சகம் அழைப்பு
    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி அமைச்சகம் தேசிய கவுன்சில் வகுத்துள்ளபடி ஆசிரியர் கல்விக்கான 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பில்  இணைய கல்வி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது. 

    தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி பி.ஏ பி.எட் .,  பி.எஸ்சி. பி. எட்., பிகாம் பி. எட் ஆகிய படிப்புகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பரிசார்த்த அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில்  சேருவதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.

    கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் படி இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. இதில் ஒரு மாணவர் ஆசிரியர் கல்வியோடு சேர்த்து தனக்கு வேண்டிய கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிகம் ஆகிய சிறப்புத் துறைகளில் பட்டம் பெற உதவுகிறது. 

    இந்த ஒருங்கிணைந்த படிப்பானது அதிநவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், உள்ளடக்கிய கல்வி மற்றும் இந்தியா மற்றும் அதன் மதிப்புகள், நெறிமுறைகள், கலை, மரபுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றிலும் ஒரு அடித்தளத்தை நிறுவும்.

    கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகாரம், விதிமுறைகள் மற்றும் நடைமுறை) திருத்த விதிமுறைகள், 2021-ஐப் பார்க்கவும். மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மே மாதம் 1 -ம் தேதி முதல் மே மாதம் 31 -ந்தேதி (இரவு 11:59 மணி வரை) சமர்ப்பிக்கலாம்.

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட  மாவட்டங்களில்  ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள்  பல இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    தாரமங்கலம் அருகே பள்ளி மாணவனை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள எடயபட்டி கிராமம் கலர்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மாணவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியின் எதிரே உள்ள கம்மங்கூழ் கடையில் உள்ள சேரில் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர்   மாணவனிடம் உட்கார கூடாது என்று கூறி கட்டையால்  தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த மாணவர் ஜலகண்டாபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச் சைக்கு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     
    இதுபற்றிய புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் ராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலத்தில் நடைபெற உள்ள உதவி பேராசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
    சேலம்:

    இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

    இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு அவசியம். இந்தத் தேர்வுகள் இந்திய அரசின்  தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    மொத்தம் 82 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. கணினி மூலமாக இந்தத் தேர்வு காலை, மாலை என 2 ஷிப்டுகளாக நடைபெறும். சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு காகாபாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுவது வழக்கம்.

     
    இந்த நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022-ம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ேதர்வுக்கு  விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள் இந்த மாதம்  20-ம் தேதி என அறிவித்து இருந்தது.

     இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
     
    இந்த நிலையில்  யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி வரை என   நீட்டித்து உள்ளது.  இந்த  தகவலை   யூ.ஜி.சி. சேர்மன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
    மேட்டூர் காவிரி கிராஸ் அருகே கால்வாய் கரையில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவிரிக்கரை பகுதியில் உள்ள கால்வாய் கரையில் ஒரு மோட்டார்சைக்கிள் கிடந்தது. அது தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. 

    அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த மோட்டார்சைக்கிளை கைப்பற்றினர். 

    அதை தீவைத்து எரித்தவர்கள் யார்? அந்த மோட்டார்சைக்கிளில் வந்தவர் யார்? முன்விரோதத்தில் மோட்டார்சைக்கிளை  கடத்தி கொண்டு வந்து தீ வைத்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×