search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகனை அடித்து கொன்ற தந்தை"

    சேலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ரத்தினவேல் காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). இவருடைய மகன் மணி (37). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
     
    சுப்பிரமணியின் மனைவி இறந்த நிலையில்  இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். சுப்பிரமணி தறிதொழிலாளியாகவும், மணி சமையல் கலைஞராகவும் வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம்  உள்ளதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
     
    வழக்கம்போல் நேற்று இரவு  அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் சுப்பிரமணி ஆவேசத்துடன் மகனை கட்டையால் சரமாரியாக அடித்தார்.   

    இதில் படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து இறந்தார்.  இதை அறிந்த ரத்தினவேல்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதற்கிடையே சுப்பிரமணி காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
     
    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியை வலைவீசி தேடி வருகிறார்கள். மகனை தந்தை அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×