search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாட்டு"

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மெதுகும்மல் ஊராட்சியில் பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்ட செம்மான் விளை செல்லும் சாலை, சுந்தரவனம் - திட்டங்கினாவிளை சாலையில் மழை நீர் ஓடை, நெய்யாறு இடதுக்கரை கிளை சானல் கரையில் குரங்குமான் விளை பகுதியில் கன மழையால் இடிந்து விழுந்த பக்கசுவர், கம்மங்கூடல் குளத்தில் பக்கசுவர் போன்ற பணிகளை செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. செம்மான்விளை செல்லும் சாலையை காங்கிரீட் சாலையாக அமைக்க ரூ.3 லட்சமும், சுந்தரவனம்- திட்டங்கினாவிளை சாலை யில் மழை நீர் ஓடை அமைக்க ரூ.5 லட்சமும், நெய்யாறு இடதுக்கரை கிளை சானல் கரையில் குரங்குமான் விளை பகுதியில் கன மழையால் இடிந்து விழுந்த பக்கசுவர் அமைக்க ரூ.5 லட்சமும், கம்மங்கூடல் பகுதியில் உள்ள குளத்தில் பக்கசுவர் அமைக்க ரூ.5 லட்சமும் என 4 பணிகளுக்கும் மொத்தம் ரூ.18 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். பின்னர் இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்லன், மற்றும் ஷாஜி, டிஜூ காங்கிரஸ் நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

    சேலம்:

    மாநில நெடுஞ்சா லைத்துறை சார்பில் சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல், நெத்திமேடு முதல் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலும், அம்மாபேட்டை மிலிட்டரி சாலையில் பாலபாரதி பள்ளி முதல் அணைமேடு வரையிலும் மற்றும் நெய்க்காரப்பட்டி முதல் உத்தமசோழபுரம் வரையி லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. பொன்னம்மா பேட்டை ெரயில்வே கேட் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சாலையின் நீளம், அகலம், தடிமன், அடர்த்தி, சாலை தளத்தின் சாய்மானம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், சாய்வு தளம் மற்றும் தரத்தை ஆய்வு செய்து மழைநீர் தேங்காத வகையில் சாலைகள் அமைக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ரா.சவுந்தர்யா, சுமதி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள் கவின், பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதிய ரயில்கள் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் குமரி மாவட்ட மக்கள்
    • தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சம், குழித்துறை ரெயில் நிலை யத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் ரெயில் நிலையத்தின் முன் பகுதி மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதி தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப் பட உள்ளன. இந்த பணிகளுக்கான தொடக்கத்தின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த நேரத்தில் குமரி மாவட்டத் திற்கு புதிய ரெயில்களுக்கான அறிவிப்பு வருமா? என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலுக்கு பிறகு கன்னியா குமரி மாவட்டத்திற்கு புதிய ெரயில்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் கடைசி எல்லையான குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு ெரயில் இயக்கப்பட்டால் அது,தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கும் நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்க ளுக்கு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் சுமார் 70 கி.மீ தூரம் தான். இருந்தாலும் 750 கி.மீ தூரம் கொண்ட சென்னை தான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ஆதலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தான் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும்.

    திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் இந்த மார்க்கத்தில் புதிய ெரயில்களை இயக்க தொடர்ந்து மறுத்து வரு கிறார்கள். ஆகவே தமிழகம் மார்க்கம் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அவர்கள், சில ரெயில்களை நீட்டித்து இயக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

    தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆகவே சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ெரயில்களை, தமிழகத்தின் தெற்கே உள்ள கடைசி மாவட்டமான கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதற்கான முதல் முயற்சியாக தாம்பரம் - ஐதராபாத் தினசரி ெரயில் மற்றும் சென்னை சென்ட்ரல்-டெல்லி ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களையும் திருச்சி, மதுரை வழியாக கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழி யாக தாம்பரத்துக்கு தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் ரயிலை தினசரி ெரயிலாக மாற்றி இயக்க வேண்டும். இது மட்டு மல்லாமல் நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும்.

    கன்னியாகுமரியில் இருந்து மங்களுருக்கு தினசரி இரவு நேர ெரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ெரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களூர் (16347-16348) இரவு நேர ெரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    வேளாங்கண்ணி மாதா கோவி லுக்கு செல்பவர்கள் வசதிக்காக தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை-புனலூர் தினசரி ெரயிலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரெயில்வே ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் திறன் மேம்பட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.   இந்த  தொடக்கவிழாவில் சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கிவைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ெரயில்வே அதிகா–ரிகள் உடன் இருந்தனர். 

      டிக்கெட் பரிசோதகர்கள், பயணச்சீட்டு வழங்குப–வர்கள், ெரயில் நிலைய அதிகாரிகள், பார்சல் அலுவலகத்தில் பணி–புரியும் அலுவலர்கள், கூட்ஷெட்டில் பணிபுரியும் ெரயில்வே தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

     இந்தப் பயிற்சியில்  ெரயில் பயணிகளுக்கு  சேவைகளை எப்படி சிறப்பாக செய்வது, ெரயில் பயணிகளின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பயணிகளுடன் கனிவாக நடந்து கொள்வதைப் பற்றி, பயணிகளின் தேவைகளை நன்றாக அறிந்து அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும், கனிவான முறையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பது  குறித்து பயிற்சி  அளிக்கப்படுகிறது.
    ×