சாலை மேம்பாட்டு பணியை அதிகாரிகள் ஆய்வு

சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.
சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
Published on

சேலம்:

மாநில நெடுஞ்சா லைத்துறை சார்பில் சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல், நெத்திமேடு முதல் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலும், அம்மாபேட்டை மிலிட்டரி சாலையில் பாலபாரதி பள்ளி முதல் அணைமேடு வரையிலும் மற்றும் நெய்க்காரப்பட்டி முதல் உத்தமசோழபுரம் வரையி லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. பொன்னம்மா பேட்டை ெரயில்வே கேட் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சாலையின் நீளம், அகலம், தடிமன், அடர்த்தி, சாலை தளத்தின் சாய்மானம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், சாய்வு தளம் மற்றும் தரத்தை ஆய்வு செய்து மழைநீர் தேங்காத வகையில் சாலைகள் அமைக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ரா.சவுந்தர்யா, சுமதி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள் கவின், பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com