search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன் எச்சரிக்கை"

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
    • கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.

    திருப்பூர்:

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.மோசடி நபர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு ஏமாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடலாம். நேரில் வருவதாக கூறி, போலீஸ் உதவியை உடனடியாக பொதுமக்கள் நாட வேண்டும்.

    தங்கள் துறை சார்ந்த உயர் அதிகாரி போல் சமூக வலைதளங்களில் தங்களை தொடர்பு கொண்டு, தான் அவசர வேலையாக இருப்பதாக கூறி, கிப்ட் கார்டுவாங்கி அனுப்புமாறு கேட்டு மோசடியில் ஈடுபடலாம்.ஆன்லைனில் ஆர்டர் செய்யாத உணவுகள் தங்களுக்கு வந்திருப்பதாக கூறிஅதை திருப்பி அனுப்ப தங்கள் மொபைல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பே லேட்டர் வசதியை பயன்படுத்தி ஆன்லைனில் தங்களது கணக்கில் மற்ற நபர்கள் பொருட்களை வாங்கிவிட்டு அந்த நிறுவனத்தால் பணம் கேட்டு தங்களுக்கு அறிக்கை வரலாம். ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும்.ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.

    அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை குற்றவாளிகள், அவர்களுக்கு சாதமாக பயன்படுத்தி, உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் போட்டோக்களை திருடுகின்றனர். தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது. சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நட்பு வேண்டாம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    சைபர் குற்றங்களில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைத்து, தங்களது புகாரை பதிவு செய்யவும். கால தாமதம் இன்றி பதிவு செய்யப்படும் புகார் மீதான நடவடிக்கை விரைவானதாக இருக்கும் என்றனர்.

    சென்னை ஐ.டி. எ.எஸ்., துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தனசேகர் கூறியதாவது:-

    ஸ்பார்ஸ் என்பது தேசிய அளவில் முப்படையின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிக்கல்கள் இன்றிஒற்றை சாளரமுறையில் ஓய்வூதியம்செல்வதற்கு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளம்.இதில் 35 லட்சம் ஓய்வூதியதாரர்களில் 12 முதல் 13 லட்சம் பேரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்களையும் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் நாமினியுடன் தற்போதேஇருவரும் இணைந்த வங்கிக்கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.

    தற்போது அனைத்தும் டிஜிட்டல்மயம் ஆகியுள்ளதால், அதில் நடக்கும் மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.ஓ.டி.பி., தகவலை, எக்காரணம் கொண்டும் செல்போன் வாயிலாக ஒருவருக்கும் தெரிவிக்கக்கூடாது. செல்போன் வாயிலாக ஒரு போதும் தரக்கூடாது என்றார்.

    • மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் தீவிர படுத்தி உள்ளனர்.

    24 மணி நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ள போலீசார் முன்னே எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரங்காட்டி வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் வழிபா ட்டுத் தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் நீண்ட நேரமாக நிறுத்தப்படும் வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    அழகர் கோவில், ஒத்தக்கடை, திருமங்கலம், கப்பலூர், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எப். போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நகர் பகுதியில் போலீஸ் கமிஷன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான வாகனங்களும் சோதனை நடத்தப்படுகிறது. போலீசார் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×