search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online"

    • எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் ஆமீம்புரத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆரம்ப பள்ளியிலும் காலாண்டு தேர்வானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவர்களுக்கு எழுத்து திறன் குறைவதோடு, செல்போன் பயன்படுத்துவதால் கண் பார்வை திறனும் பாதிக்கப்படுவதாக கூறி இன்று மாணவர்களின் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் குழந்தைகள் படிப்பது என்பது வேறு. ஆனால் தற்போது சாதாரண காலகட்டத்திலும் அதாவது இந்த காலாண்டு தேர்வின் போது, எழுதும் வகையில் தேர்வை நடத்தாமல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்துகிறார்கள். இதனால் இணையதளம் முடக்கம் ஏற்படும்போது ஒரே தேர்வை 2 முதல் 3 நாட்கள் வரை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய நிலை உள்ளது. மேலும் குழந்தைகளின் பார்வை திறன் குறைபடும்.

    எனவே எழுத்து முறையில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தங்கள் வேலைவாய்ப்பு தகுதியை மாணவர்கள் பதியலாம்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை செயலர் முத்தம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்ய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைனில் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.

    2022-23-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் விபரங்கள் மட்டும் கல்வி இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு வேலைவாய்ப்பகத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே புதுவை, காரைக்கால் பிராந்திய 10-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிய வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம். தொழிலாளர் துறை இணையதளத்தில் சான்றிதழ் பதிவு செய்யும் செயலி லிங்க் தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தங்கள் வேலைவாய்ப்பு தகுதியை மாணவர்கள் பதியலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம்.

    சென்னை:

    நவீன தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில் தொலை மருத்துவம் என்பது தொலைதொடர்பு இணைப்புகள் மூலம் இத்தகைய மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.

    இது சுகாதார சேவைகளை பயனாளிகள் வீட்டிற்கே எடுத்துச் செல்லும் உன்னதமான முறையாகும்.

    கொரோனா பேரிடர் காலத்தில், தொலை மருத்துவத்தின் மகத்துவத்தை இந்த உலகம் அறிந்தது. சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பயணம் செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம் சிறந்த பரிசாக அமைகிறது.

    இதை கருத்தில் கொண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொலை மருத்துவம் எனப்படும் இணைய வழி மருத்துவ ஆலோசனை சேவை மக்களுக்காக சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை நல மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம் என்று டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

    • சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
    • மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பேஸ்புக் கணக்கில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், தான் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தான் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளேன்.

    எனவே எனது சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு தாங்கள் உதவ வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் உதவிக் கேட்டுள்ளார்.

    இதனை உண்மை என நம்பி அவரும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு பேஸ்புக் மூலம் தலைமை ஆசிரியருக்கு நட்பு ஏற்பட்டது.

    மேலும் பார்சலில் பணம் அனுப்பி வைப்பதாக தெரிவித்து இந்திய தூதரகம், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பேசுவதாகவும் பார்சலை பெற வரி செலுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் 13 தவணைகளாக ரூ.43 லட்சத்து 90 ஆயிரத்தை அந்த பெண் பெற்றுக்கொண்டார்.

    அதன் பின் வெளிநாட்டில் இருந்து பேசிய பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பணப்பார்சலும் வரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபோல் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் பிரியா. இவரின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் உங்களுடைய வங்கி கணக்குகளில் தொகை அதிகம் உள்ளது. அதற்கான காரணத்தை சொல்லாவிட்டால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன பிரியா அவர்கள் கூறிய வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அனுப்பினார். பின்னர் விசாரித்த போதுதான் ஏமாற்றப்பட்டதை பிரியா உணர்ந்தார்.

    இதுகுறித்து இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினர்.

    மேலும் புதுவையை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 90 ஆயிரமும், மூலக் குளத்தை சேர்ந்த சத்தியா என்பவரிடம் ரூ.3 லட்சத்து 19 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரமும், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளது என்ற விளம்பரத்தை நம்பி 2 பேரிடம் ரூ.85 ஆயிரமும் மோசடி நடந்துள்ளது.

    கடந்த 3 நாட்களில் மட்டும் புதுச்சேரியில் 12 பேரிடம் ஆன்லைனில் பல்வேறு வகையான நூதன முறையில் ரூ.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.

    இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சண்முகராஜ் (28). இவரது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி பகுதி நேர வேலை இருப்பதாக வந்த அறிவிப்பை பார்த்து, அந்த வேலை கேட்டு விண்ணபித்துள்ளார்.
    • வேலையுடன் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகராஜ், ரூ.6,48,080 செலுத்தி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ் நகர் அருகே உள்ள சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (28). இவரது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி பகுதி நேர வேலை இருப்பதாக வந்த அறிவிப்பை பார்த்து, அந்த வேலை கேட்டு விண்ணபித்துள்ளார்.

    எதிர்முனையில் இருந்த நபர், குறிப்பிட்ட லீங்கில் பணம் செலுத்திப்பூர்த்தி செய்தால், வேலையுடன் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகராஜ், ரூ.6,48,080 செலுத்தி உள்ளனர்.

    ஆனால் அந்த நபர் கூறியபடி பணமும் வேலையும் கிடைக்கவிலலை. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகராஜ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
    • தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிக ளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமைப்படுத்த சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஒய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்தி லும், பணிக்கால ஓய்வூதியம் மற்றம் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்கள் தாங்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தி லும் நேர்காணல் செய்ய லாம்.

    அவ்வாறு நேர்காணல் செய்ய இயலாத நிலையில் குறிப்பிட்ட மாதத்திற்கு அடுத்த மாதத்தில் நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-24-ம் ஆண்டிற்கு சிறப்பு நேர்வாக இந்த மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்ற, குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    எனவே ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு வாழ் நாள் சான்றிதழை இந்திய தபால் துறை வங்கி சேவை, இ-சேவை, பொது சேவை நிறுவனம், ஓய்வூதியர் சங்கங்களின் சேவை, செல்போன் செயலி ஆகியவற்றில் மின்னணு வாழ்நாள் சான்றை பதிவு செய்து நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    மேலும் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். நேரடியாக கருவூலத்திற்கு வந்தும் நேர்காணல் செய்து கொள்ளலாம்.

    இருப்பினும் ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணல் செய்து கொள்ள லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க,
    • 5 நல உதவி திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வசதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக்கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவற்றை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் https://www.tnesevai.tn.gov.in/citizen/registration.aspxஎனற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து அதற்கான இணையதள ரசீது பெற்றுக்கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் லோன் ஆப் மூலமாக கடன் வாங்குவது, அதிகரித்து வருகிறது.
    • தலை போகும் அவசரம் என்றாலும் அவற்றில் பணம் வாங்க வேண்டாம்.

    திருப்பூர்:

    லோன் ஆப்களை நம்பி கடன் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.  சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை 

    பொதுமக்கள் லோன் ஆப் மூலமாக கடன் வாங்குவது, அதிகரித்து வருகிறது. முழு கடன் தொகையை திருப்பி செலுத்தி முடித்தாலும் அவர்கள் விடுவதில்லை.இன்னும் கடன் தொகை பாக்கி இருப்பதாக கூறி, மிரட்டி வசூல் செய்கின்றனர். வட்டி பணம் தராவிட்டால், உங்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் அக்கவுன்ட் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உங்க போட்டோக்களை மார்பிங் செய்து, உங்கள் மொபைல் போன் தொடர்பில் உள்ள நபர்களின் வாட்ஸ் அப் எண்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.

    டெலி கிராம் செயலி லிங்க், சினிமா, ஓட்டல் ரிவ்யூ என்ற பெயரிலும், கமிஷன் தருவதாக பெரிய அளவில் மோசடி நடக்கிறது.சமீபத்தில் பிட் காயின் டெபாசிட் முறைகேடு தொடர்பாகவும், புகார் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் புகார் பதிவு செய்வதில், கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் குற்றவாளிகளை வளைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் கூறும்போது, பெரும்பாலான லோன் ஆப்கள் மோசடியானவை. தலை போகும் அவசரம் என்றாலும் அவற்றில் பணம் வாங்க வேண்டாம்.

    பணம் வாங்கும் நபர்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற தகவல்களை பெற்று, அதில் முறைகேடு செய்யும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.

    மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

    • அரசு பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தற்போது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகளைப் பெற தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்று திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கு ஏதுவாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தற்போது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதில், கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள் பெறவும், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ஆகியவற்றுக்கு தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஆகவே, மேற்கண்ட திட்டங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கேரவேன் பார்க் இயக்கு பவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவரும், https//www.tntourismtorscom என்ற சுற்றுலாத்துறை வெப்சைட்டில் தங்களின் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
    • பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் நிறு வனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தி லுள்ள உணவு மற்றும் உறைவிட சுற்றுலாத்திட்டம் , சாகச சுற்றுலா இயக்கு பவர்கள், கூடார சுற்றுலா இயக்குபவர்கள் , கேரவேன் சுற்றுலா இயக்குபவர்கள், கேரவேன் பார்க் இயக்கு பவர்கள் உள்ளிட்ட சுற்றுலா சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் அனைவரும், https//www.tntourismtorscom என்ற சுற்றுலாத்துறை வெப்சைட்டில் தங்களின் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் நிறு வனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணைகள் மேற்குறிப்பிட்ட வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    கூடுதல் தகவல்களுக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடு தல் கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
    • அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது :-

    மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ளது.

    14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் இன்றுக்கு ள் பதிவு செய்ய வேண்டும். இதை செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதே போல வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.

    முதல் வழிமுறையாக ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் சரிபார்க்கலாம்.

    ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலை தளத்தில ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம்.

    இ.கே.ஒய்சி பதிவு செய்திடாத விவசாயிகள் விபரங்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார்.
    • விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி கொல்லர் தெரு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 38). இவரது செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரூ.12,99,534 பணம் செலுத்தி பதில் அளித்துள்ளார்.

    ஆனால் இவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் மெய்ய னூர் அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரும் ஆன்லைனில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேந்திரன், இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×