search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் ஆன்லைனில் வாலிபரிடம் ரூ.6.48 லட்சம் மோசடி
    X

    சேலத்தில் ஆன்லைனில் வாலிபரிடம் ரூ.6.48 லட்சம் மோசடி

    • சண்முகராஜ் (28). இவரது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி பகுதி நேர வேலை இருப்பதாக வந்த அறிவிப்பை பார்த்து, அந்த வேலை கேட்டு விண்ணபித்துள்ளார்.
    • வேலையுடன் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகராஜ், ரூ.6,48,080 செலுத்தி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ் நகர் அருகே உள்ள சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (28). இவரது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி பகுதி நேர வேலை இருப்பதாக வந்த அறிவிப்பை பார்த்து, அந்த வேலை கேட்டு விண்ணபித்துள்ளார்.

    எதிர்முனையில் இருந்த நபர், குறிப்பிட்ட லீங்கில் பணம் செலுத்திப்பூர்த்தி செய்தால், வேலையுடன் பணமும் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சண்முகராஜ், ரூ.6,48,080 செலுத்தி உள்ளனர்.

    ஆனால் அந்த நபர் கூறியபடி பணமும் வேலையும் கிடைக்கவிலலை. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகராஜ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×