என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
10-ம் வகுப்பு கல்வி தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யலாம்
- தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தங்கள் வேலைவாய்ப்பு தகுதியை மாணவர்கள் பதியலாம்.
புதுச்சேரி:
புதுவை தொழிலாளர் துறை செயலர் முத்தம்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்ய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைனில் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.
2022-23-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் விபரங்கள் மட்டும் கல்வி இயக்ககத்தின் மூலம் பெறப்பட்டு வேலைவாய்ப்பகத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே புதுவை, காரைக்கால் பிராந்திய 10-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிய வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம். தொழிலாளர் துறை இணையதளத்தில் சான்றிதழ் பதிவு செய்யும் செயலி லிங்க் தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி தங்கள் வேலைவாய்ப்பு தகுதியை மாணவர்கள் பதியலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்