search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலாண்டு தேர்வு"

    • எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் ஆமீம்புரத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆரம்ப பள்ளியிலும் காலாண்டு தேர்வானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவர்களுக்கு எழுத்து திறன் குறைவதோடு, செல்போன் பயன்படுத்துவதால் கண் பார்வை திறனும் பாதிக்கப்படுவதாக கூறி இன்று மாணவர்களின் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் குழந்தைகள் படிப்பது என்பது வேறு. ஆனால் தற்போது சாதாரண காலகட்டத்திலும் அதாவது இந்த காலாண்டு தேர்வின் போது, எழுதும் வகையில் தேர்வை நடத்தாமல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்துகிறார்கள். இதனால் இணையதளம் முடக்கம் ஏற்படும்போது ஒரே தேர்வை 2 முதல் 3 நாட்கள் வரை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய நிலை உள்ளது. மேலும் குழந்தைகளின் பார்வை திறன் குறைபடும்.

    எனவே எழுத்து முறையில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வினாத்தாள்களை அரசு பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
    • தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களின் வினாத்தாள்களுமே வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி 27-ந்தேதிவரை நடக்கின்றன.

    இந்த தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வினாத்தாள்களை அரசு பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 4, 5ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களின் வினாத்தாள்களுமே வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் பள்ளி ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது.

    6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக கடந்த 15-ந்தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது.

    அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து தேர்வு நாளில் வினியோகிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் நாளை நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெறுகிறது.

    ஏற்கனவே இருந்த இந்த தேர்வு முறையால் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. தற்போது அதுபோன்ற தவறுகள் எதுவும் எங்கும் நடைபெறாமல் மிகுந்த கவனத்துடன் வினாத்தாள்களை கையாள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

    • வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.
    • விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாகவும், இதர நாட்களில் வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.

    அந்த வகையில், ராமேசுவரத்திற்கு விடுமுறை நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை இருக்கும். இதனால் வியாபாரம் அதிகளவில் காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.

    இந்நிலையில், தமிழகத்தில் காலாண்டு தேர்வு வருகிற 17-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் மிகுவும் குறைந்தே காணப்பட்டது.

    அக்னி தீர்த்த கடல், கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடல், தரிசனம் செய்ய நீண்ட வரிசை என்று எதுவும் இல்லாமல் காணப்பட்டது. அதிலும் இன்று வந்த அதிக அளவிலான பக்தர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாகவும், தேர்வு முடிந்த பின்னரே பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படும் என தெரிவித்தார். மேலும் பூஜை பொருட்கள், கலைப்பொருட்கள் விற்பனையும் பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.

    • அடுத்த மாதம் நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
    • தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது.

    சென்னை:

    6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.

    அதாவது, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டி.ஐ.இ.டி.) வாயிலாக விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது.

    இந்த நிலையில் தற்போது மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்து இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் இருந்து இதனை அமல்படுத்த திட்டமிட்டு, அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள காலாண்டு தேர்விலேயே இந்த பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் பழைய நடைமுறையில்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, மாநில அளவில் தயாராகும் பொது வினாத்தாள்கள் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (டி.என்.எஸ்.சி.இ.ஆர்.டி.) வந்து சேரும். பின்னர், அங்கிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதற்கேற்றாற்போல், வருகிற 2-ந் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் 2 செட் வினாத்தாள்களை தயாரிக்க, தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, '6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொது வினாத்தாள் நடைமுறை சோதனை அடிப்படையில் 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது' என்றார்.

    பொது வினாத்தாள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    கடந்த தேசிய சாதனை ஆய்வு மற்றும் மாநில அளவிலான சாதனை ஆய்வில் மாணவ-மாணவிகளின் கற்றல் விளைவு மிகவும் மோசமாக இருப்பதாக தெரியவந்தது. அதற்கான காரணத்தை தீவிரமாக ஆய்வு செய்ததில், மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் மாணவர்களின் கற்றல் நோக்கங்களையும், விளைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்கள் வடிவமைத்தது கண்டறியப்பட்டது. இதனை கருத்தில் கொண்டுதான், தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் முடிவை ஒரே சீராகவும், சரியாகவும் மதிப்பிட முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.
    • அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன.

    திருப்பூர்:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல் சில தனியார் பள்ளிகளில் கடந்த மாதம் 24 ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து தனியார், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன. மாணவர்களின் எழுத்து திறன் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் அக்.13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி சென்ற மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றனர்.

    • மின்கட்டணம் செலுத்தப்படாததால் அந்த பள்ளிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
    • நேற்று மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து காலாண்டு தேர்வை எழுதினர்.

    விக்கிரமசிங்கபுரம்:

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அனவன்குடியிருப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளிக்கான கடந்த மாத மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை எனவும், இதற்காக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னரும் மின்கட்டணம் செலுத்தப்படாததால் அந்த பள்ளிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது கடும் வெயில் அடிக்கிறது. மேலும் மின்சாரம் இல்லாததால் வகுப்பறையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் வகுப்பறையில் மாணவ, மாணவிகளை உட்கார வைத்து பாடம் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது. எனவே, மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். நேற்று மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து காலாண்டு தேர்வை எழுதினர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாணவர்கள் படிப்பிற்காக அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மின்சாரம் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளாவது மனிதாபிமான முறையில் மின்சாரம் வழங்கி இருக்கலாம்' என்றனர்.

    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க பள்ளிக்கு வந்த போது 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை கண்டு அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.
    • மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பவானி:

    பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பெருமாள்புரம், அண்ணா நகர், காமராஜ் நகர், சொக்கார அம்மன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 மாணவ, மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் கிருஷ்ணகுமாரி என்பவர் பணியாற்றி வருகிறார். அதேபோல் பட்டதாரி ஆசிரியர் 3 பேர், இடைநிலை ஆசிரியர் 5 பேர் என 9 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் 8-ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க பள்ளிக்கு வந்த போது 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை கண்டு அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.

    பின்னர் மாணவ, மாணவிகள் தேர்வை பார்த்து எழுதுவதாக குற்றம் சாட்டி சமூகவலைதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டார். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மேலாண்மை குழுவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

    தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்யப் போவதாக பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி மீது துறை ரீதியான ந டவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் திரும்பி சென்றனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளி நேரத்தின் போது உள்ளே வந்து யாரும் செல்போன் எடுக்க கூடாது. அதையும் மீறி சிலர் பள்ளி மேலாண்மை குழு என தெரிவித்து செல்போன் மூலம் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இன்று எங்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நாங்கள் எவ்வளவோ முறை சொல்லியும் வீடியோ எடுக்க வேண்டாம் எனக் கூறியும் அவர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இந்த பள்ளிக்கு அவ பெயர் ஏற்படுத்தி உள்ளனர்.

    அதே போல் ஒரு சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிய விஷயமாக மாற்றி வருகின்றனர் என்றனர்.

    • மாணவர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இருந்தால் நிச்சயம் வரவேற்கிறோம்.
    • மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தமிழக அரசு பள்ளிக்கல்வி துறை கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி உடல் நிலை, உணவு முறை, குடும்ப விவரம் என, பல்வேறு கேள்விகள் கேட்கப்படுவதால், ஆசிரியர்கள் எப்போது பார்த்தாலும், செல்போனும், கையுமாகவே இருந்து வருகின்றனர். தற்போது காகிதம் இல்லா காலாண்டு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை கொண்டு வரும் முயற்சிகள் மாணவர்களின் கல்வியை வளர்க்கும் நோக்கில் இருந்தால் நிச்சயம் வரவேற்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கூறும் கல்வித்துறை, போன் மூலம் தான் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, 1 முதல் 3-ம் வகுப்பு வரை, காலாண்டு தேர்வினை காகிதம் இல்லாமல் வாய்வழியாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செல்போனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அவர்கள் கூறும் பதில்கள் அடிப்படையில் மதிப்பீடுகளை செல்போனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், மாணவர்களின் எழுத்து திறமை மறைந்து போகும் அபாயம் உள்ளது.ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி மிக அவசியம். ஆனால் தேர்வை காகிதம் இல்லாமல் நடத்த சொல்வதால் மாணவர்களின் எழுத்து மற்றும் சிந்தனைத் திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாநில பாடத்திட்டத்தில் படிக்க கூடிய மாணவர்களுக்கு 4 மாதம் கற்பித்தல் பணி நடந்து உள்ளது.
    • காலாண்டு தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    கொரோனா தொற்று பரவலால் 2 வருடம் பள்ளிகள் முழுமையாக நடைபெறாததால் பாடங்களை நடத்த முடியவில்லை. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதில் பல்வேறு சிரமம் ஏற்பட்டது.

    1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி அளிக்கப்பட்டனர். 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டன.

    இந்த ஆண்டு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்டு தொடர்ச்சியாக வகுப்புகள் நடைப்பெற்று வருகின்றன. அனைத்து வகுப்புகளும் வழக்கம்போல் நடந்து வருகிறது. தொடக்கத்தில் சற்று தொய்வு ஏற்பட்ட போதும் பின்னர் பாடத்திட்டங்கள் முழு வீச்சில் நடத்த தொடங்கினார்கள்.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி சி.பி.எஸ்.இ. பள்ளியிலும் விடுமுறை விடாமல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் காலாண்டு தேர்வு 2 வருடத்திற்கு பிறகு நடப்பாண்டில் நடத்த கல்வித்துறை முடிவு செய்து அதற்கான அட்டவணை தயாரித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்ட நாட்களில் தேர்வினை நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்க கூடிய மாணவர்களுக்கு 4 மாதம் கற்பித்தல் பணி நடந்து உள்ளது. காலாண்டு தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னையில் அரசு, உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் "ஆப்சென்ட்" ஆகாமல் தேர்வு எழுத ஆசிரியர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

    வகுப்புக்கு வராமல் உள்ள மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை தேர்வு எழுத அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர் உதவிட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    காலாண்டு தேர்வை மாணவர்கள் சிறப்பாக எழுத ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை விரைவாக முடித்து திருப்புதல் செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

    • செப்டம்பர் 26ம் தேதியில் தொடங்கி 30-ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறுகிறது.
    • காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×