என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
    X

    காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை

    • பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளன.
    • 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை நடக்கிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ளனர்.

    அதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ல் தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.

    11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×