search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வசதி"

    • பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
    • நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வார்டுபாய் (ஆண் மற்றும் பெண் உதவியாளர்), உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), இலரக மோட்டார் வாகன ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் மற்றும் வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி (அழைப்பு மையம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தனியார் நிறுவனத்தின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர் (பொது), 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலரக மோட்டார் வாகன ஓட்டுநர்ராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர்(பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

    18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும் இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும். மேலும் இப்பயிற்சி யினை பெற்றவர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சி யினை பெற தாட்கோ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது.
    • தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது.

    நாமக்கல்:Namakkal District News,

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இக்கோட்டையின் ஒருபுறம் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதுபோல, கோட்டையின் மற்றொரு புறம் ரங்கநாதர் சந்நிதி உள்ளது.

    மலைக்கோட்டையின் கீழ்ப் பகுதியில் குளம் மற்றும் பூங்கா உள்ளது. புராதன சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கோயில், குளம் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசிக்க தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் மலைக்கோட்டைக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகம் இருக்கும்.

    அவ்வாறு வரும் மக்கள் மலைக்கோட்டைக்கு சென்று பழமை வாய்ந்த திப்புசுல்தான் கோட்டை, ஆயுதக் கிடங்கு, குளம், தானியக் கிடங்கு உள்ளிட்ட இடங்களைக் கண்டு மகிழ்வர். இந்நிலையில், மலைக்கோட்டைக்கு மக்கள் அதிகளவில் வந்தாலும் அங்கு பாதுகாப்பு வசதி குறைவாக உள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதவது:-

    மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் அத்துறை சார்பில் காவலர் ஒருவரை நியமித்து கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வந்தனர். சில ஆண்டுகளாக அங்கு காவலர் யாரும் இல்லை.இங்கு வருவோர் மலைக்கோட்டை சுவர் மீது எழுதுவது மற்றும் கற்களைக் கொண்டு தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது. இதைத் தடுக்க தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அங்குக் காவல் பணிக்கு ஊழியரை நியமிக்க வேண்டும். அதுபோல குற்றச்செயல்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு ,கேமரா வைக்க வேண்டும் என்றனர்.

    • மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க,
    • 5 நல உதவி திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர்:

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதியாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வசதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக்கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவற்றை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் https://www.tnesevai.tn.gov.in/citizen/registration.aspxஎனற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து அதற்கான இணையதள ரசீது பெற்றுக்கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்ட அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கபட்டுள்ளது
    • 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை,

    2023-2024ம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில், 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்து, அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லை. இதனை புதுக்கோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.
    • பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அரு நுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியிலுள்ள பெலாப்பாடி, பெரியகுட்டி மடுவு , சின்னகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றியம் மண்ணுார், கெங்கவல்லி வட்டம் கொல்லிமலை பகுதி யிலுள்ள சேரடிமூலை, பச்சமலையிலுள்ள மண்மலை, வேங்கமுடி, ஆத்துார் ஒன்றியம் பைத்துார் பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு, இதுவரை எந்த நிறுவனமும் செல்போன் சேவை வழங்கவில்லை.

    இந்த நவீன காலத்திலும் செல்போன் வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. எனவே, அதிநவீன கோபுரங்களை அமைத்து செல்போன் சேவை வழங்க வேண்டும் என மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மத்திய மாநில அரசு களுக்கும், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவ னத்திற்கும் கடந்த 10 ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, மத்திய அரசின், மலை கிராமங்க ளுக்கு நவீன வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆத்துார் தொலை தொடர்பு கோட்டத்தில் பெலாப்பாடி, பெரியகுட்டிமடுவு, சின்ன குட்டிமடுவு, சந்துமலை, மண்ணுார், சேரடிமூலை, மண்மலை, வேங்கமுடி ஆகிய 8 இடங்களில், கண்ணாடியிழை கேபிள் இணைப்புடன் அதிநவீன 4 ஜி செல்லிடப்பேசி கோபு ரங்கள் அமைக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கியுள்ளது.

    இத்திட்டப்பணிகள் நிறைவடைந்ததும், இதுவரை செல்லிடப்பேசி சேவை வசதியில்லாத அனைத்து மலை கிராம மக்களுக்கும் அதிநவீன செல்லிடப்பேசி வசதி கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மேயர் மகேஷ் தகவல்
    • இன்று காலை திடீர் ஆய்வு

    நாகர்கோவில், மார்ச்.15-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பஸ் நிலை யத்தில் உள்ள தபால் நிலையத்தையொட்டி உள்ள பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீரை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து கழிவறையை ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிப்பு இன்றி இருந்தது தெரியவந்தது.

    அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.பின்னர் அங்குள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். தின்பண்டங்கள் சரிவர மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒரு கடையில் தின்பண்டங்கள் தயார் செய்த எண்ணை திறந்த நிலையில் இருந்தது. அதை உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சோதனை நடத்த மேயர் மகேஷ் உத்தர விட்டார். பஸ்நிலையத்தில் குப்பைகள் கிடந்ததை உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தினார்.

    மேலும் அந்த பகுதியில் தற்காலிக செட் அமைத்து ஒருவர் தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த செட்டை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். சுகாதார பணியாளர்கள் அந்த செட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டி ஒன்று பழுதாகி மோசமான நிலை யில் இருந்தது. அந்த குடிநீர் தொட்டியை மாற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வு பணி குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஏற்கனவே சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.பழைய இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது புதிய இரு கைகளில் பள்ளி மாணவ- மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் அமர வசதியாக புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    பஸ் நிலையத்தில் தற்போது கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில கடைகளில் ஷட்டர்கள் இல்லாமல் தார்ப் பாய்களால் மூடப் பட்டு உள்ளது. அந்த கடைகளில் உடனடியாக ஷட்டர் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் செயல்படும் கடைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சி.சி.டி.வி. கேமராக்கள் முழுவதும் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். எந்த இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் இடையூறும் ஏற்படாது என்பதை தெரிந்து பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

    ஆய்வின் போது ஆணை யாளர் ஆனந்த்மோகன், என்ஜினியர் பாலசுப்பிர மணியன் மண்டல தலைவர் ஜவகர் கவுன்சிலர் ரோசிட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பள்ளி கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
    • நவீன வசதிகளுடன் நூலகத்துக்கு தனி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

    பாபநாசம் நகரில் தனி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம் பழுதடைந்த காரணத்தால் இடிக்கப்பட்டது. தற்போது பாபநாசம் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - வித்யா பாட சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

    இந்த வட்டார கல்வி அலுவலகம் அந்த பள்ளி கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    எனவே, ஏற்கனவே இடிக்கப்பட்ட பழைய இடத்திலேயே பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம் கட்டித் தர வேண்டும்.

    பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாபநாசம் ஒன்றியம் உம்பளப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாபநாசம் பேரூராட்சி வார்டு எண் 3 இல் உள்ள பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - கிழக்கு, ஆகிய பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும்,

    பாபநாசம் பேரூராட்சியில் பொது நூலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு அந்த பகுதி இல்லாததால், புதிய இடத்தினை தேர்வு செய்து நவீன வசதிகளுடன் நூலகத்துக்கு தனி கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் இராஜகிரி ஊராட்சியில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடமும், கணினி வசதிகள் உள்ளிட்ட உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிப்பு
    • பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.

    நாகர்கோவில்:

    சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் பி.எப். 7 வகை வைரஸ் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியா வில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என்றும் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்தி ருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொேரானா அறிகுறி யுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் வீட்டுத் தனிமை யில் உள்ளனர். இவர்களை சுகாதாரத் துறை அதிகாரி கள் கண்காணித்து வருகிறார்கள்.

    வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருப வர்களை கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றில் 20 படுக்கை வசதிகள் அதிதீவிர சிகிச்சை வசதிகளை கொண்ட படுக்கைகளாகும். 40 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 40 படுக்கை கள் சாதாரண படுக்கைகள் ஆகும். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர் அருள் பிரகாஷ் தலைமை யிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் டாக்டர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான அளவு ஆக்சிஜன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. 3000 லிட்டர் கொண்ட ஆக்ஸிஜன் நிரப்பகமும் செயல்பாட்டில் உள்ளது. இது தவிர ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மற்றும் 550 லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி மையமும் உள்ளது. இது தவிர 296 சிலிண்டர்களும் உள்ளன.

    ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    பண்டிகை காலமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். காய்ச்சல் இருமல், சளி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டு
    • அய்யப்ப பக்தர்கள் ஆதிமணியை 9442164154 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

    நாகர்கோவில்:

    அகில பாரத அய்யப்ப சேவா சங்க கன்னியாகுமரி மாவட்ட யுனியன் சார்பில் சபரிமலை விழாக்கால அன்னதானம் வழங்கும் தொடக்கவிழா சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அய்யப்ப பக்தர்கள் ஓய்வு இல்லத்தில் மாவட்டத் தலைவர் மதுசூதன பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ஆதிமணி அறிமுக உரையாற்றினார். இவ்விழாவில் சபரிமலை விழாக்கால அன்னதானத்தை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அன்னதானத்தை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு வெளிமாநி லங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் கன்னியாகுமரி மாவட்ட யுனியன் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் புதிதாக ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதில் வருகை தருகின்ற ஐயப்ப பக்தர்கள் தங்கலாம். மேலும் மூன்று நேரம் உணவு வழங்கும் வசதி, குடிநீர் வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்களுக்காக சிறந்த முறையில் பல்வேறு வசதிகளை செய்துள்ள அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கன்னியாகுமரி மாவட்ட யுனியன் பணிகளை பாராட்டுகிறேன்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் தங்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாநில இணைச் செயலாளரும், மாவட்டசெயலாருமான ஆதிமணியை 9442164154 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.

    விழாவில் அய்யப்ப பக்தர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இதனை தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • Kumaritourism.com என்ற இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசிய தாவது:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றலாத்தலங்களை மேம்படுத்துவது, இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில் களையும் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளை தமிழக அரசு சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், கோவில்கள், அருவிகள், மற்றும் பூங்காக்கள்,இயற்கை சூழல் நிறைந்த பகுதிகள், அரிய வகை மூலிகைகள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Kumaritourism.com என்ற இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்ட த்திற்குட்பட்ட சுற்றுலா தலங்கள் , கோவில்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் , பத்மநாப புரம் உதவி கலெக்டர் கவுசிக், பயிற்சி உதவி கலெக்டர் குணால் யாதவ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்விஜயலெட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் பாண்டியராஜன், இணைய தளத்தினை உரு வாக்கிய கேப்காம் சொலியூ சன்ஸ் நிறுவனர்அன்பு ராஜா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    • விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
    • 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா்.

    ஊட்டி:

    சா்வதேச புகழ்பெற்ற ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் காலமான செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகன் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

    அதேபோல, மற்ற மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும். சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 60 ரகங்களிலான பல்வேறு வகையான லட்சக்கணக்கான மலா்கள் பூந்தொட்டிகளிலும், மலா் பாத்திகளிலும் தயாா்படுத்த ப்படுகின்றன.தற்போது, ஊட்டியில் இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள சூழலில் ஓணம் பண்டிகைக்கான தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பூங்காவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் பூங்காவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மலா்களை ரசிக்க சிரமப்பட்டு வந்தனா். இதனால் பூங்கா நிா்வாகம் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா். இதன் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடா்ந்து இந்த பேட்டரி காா் விரைவில் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு வருமென பூங்கா நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    ×