search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "battery car"

    • சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள பேட்டரிகாருக்கு கட்டணம் நிர்ணயம்
    • 2 கி.மீ.வரை சுற்றிப்பாா்க்க நபா் ஒருவருக்கு தலா ரூ.30

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

    இங்கு வரும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பூங்காவை சுற்றிப்பாா்க்க வசதியாக, சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் பேட்டரி காா் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் பூங்காவை 2 கி.மீ.வரை சுற்றிப்பாா்க்க நபா் ஒருவருக்கு தலா ரூ.30 வீதம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை இணைஇயக்குநா் சிபிலாமேரி தெரிவித்து உள்ளாா்.

    • மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயணிக்க ஏற்பாடு
    • பேட்டரி காரில் சென்று அங்கு உள்ள பச்சை புல்வெளிகளை கண்டு மகிழ்ந்தனர்

    ஊட்டி,

    சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்கு கிறது.

    இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடக்கும். செப்டம்பர், அக்டோபரில் 2-வது சீசன் களைகட்டும். ஊட்டியில் தற்போது, 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் அங்கு சுற்றுலா பயணி களின் வருகை கணிசமாக அதிகரித்து உள்ளது.

    நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் அரிதாக காணப்படும் தாவரங்கள் நடப்பட்டு பராம ரிக்கப்பட்டு வரு கின்றன.

    அதிலும் குறிப்பாக இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், பெரிய புல்வெளி மைதானம் ஆகி யவை, சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது. ஊட்டி தாவர வியல் பூங்காவுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தை களுடன் வரும் பெண்கள் ஆகியோர் மேடான பகுதி யில் உள்ள இத்தாலி யன்பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு பூத்திருக்கும் மலர்களை கண்டு ரசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனா ளிகள், முதியவர்களின் வசதிக்காக பேட்டரி வாக னத்தை அறிமுகப்படுத்து வது என பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் சேவை தற்போது அமலுக்கு வந்து உள்ளது.

    இதில் சுமார் 6 பேர் அமர்ந்து பூங்காவை சுற்றிப்பார்க்க இயலும்.

    எனவே சுற்றுலா பயணி கள் தற்போது பேட்டரி காரில் பயணித்து, தாவிர வியல் பூங்காவை சுற்றி வந்து, அங்கு உள்ள மலர்கள் மற்றும் பச்சை புல்வெளிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    • விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
    • 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா்.

    ஊட்டி:

    சா்வதேச புகழ்பெற்ற ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் காலமான செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகன் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

    அதேபோல, மற்ற மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும். சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 60 ரகங்களிலான பல்வேறு வகையான லட்சக்கணக்கான மலா்கள் பூந்தொட்டிகளிலும், மலா் பாத்திகளிலும் தயாா்படுத்த ப்படுகின்றன.தற்போது, ஊட்டியில் இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள சூழலில் ஓணம் பண்டிகைக்கான தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பூங்காவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் பூங்காவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மலா்களை ரசிக்க சிரமப்பட்டு வந்தனா். இதனால் பூங்கா நிா்வாகம் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா். இதன் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடா்ந்து இந்த பேட்டரி காா் விரைவில் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு வருமென பூங்கா நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    • கடலூர் மாநகராட்சியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
    • பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் அரசு மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 25.5 லட்சம் மதிப்பிலான நவீன உயர் சிகிச்சை கருவிகள், மற்றும் 5.5 லட்சம் மதிப்பிலான பேரிடர் கால நவீன காணொளி காட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் நோயாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உபகரணங்கள் வழங்கியும், கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தும் பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து 31 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சி சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து நோயாளிகள் செல்வதற்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி பகுதியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு அமைப்பது தொடர்பாக நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த பத்தாண்டு காலமாக குப்பை கிடங்கு இல்லாதது குறித்தும், குப்பைகள் மலைபோல் குவிந்து இருந்தது குறித்தும் யாரும் கேட்க திராணி இல்லாமல் இருந்து வந்தனர்.

    ஆனால் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று புதிதாக பொறுப்பேற்று 3 மாதமான நிலையில் மேயர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குப்பை கிடங்குகள் அமைப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முடிவடையாத நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வடிகால் வாய்க்கால் சரி செய்து கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் வாரந்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று கழிவுநீர் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் பாலசுப்ரமணியம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு வரவேற்றார். விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி திமுக செயலாளர் ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய் லீலா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், மாநகராட்சி மண்டல குழு தலைவர் கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, சங்கீதா செந்தில் குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனஞ்செயன், வி.ஆர். அறக்கட்டளை விஜயசுந்தரம், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, செந்தில் குமாரி இளந்திரையன், சுபாஷிணி ராஜா , சுதா அரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம் கோவில் ரத வீதியில் கட்டணத்துடன் பக்தர்களை ஏற்றி இறக்கி விட்டு இயக்கப்பட்டு வந்த பேட்டரி கார்களை நேற்று முதல் இலவசமாக இயக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் ரத வீதியில் வாகனங்கள் செல்ல காவல் துறையினர் தடை விதித்துள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜே.ஜே.நகரில் உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் அக்னிதீர்த்த கடற்கரையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மேலவாசல் மற்றும் வடக்கு, தெற்கு, கிழக்குரத வீதிகள் வழியாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ரதவீதிகள் வழியாகவே திரும்பி நடந்து சென்று வருகின்றனர்.

    அதுபோல் பக்தர்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே திருக்கோவில் சார்பில் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன.கிழக்கு ரத வீதியில் இருந்து மேற்கு ரத வீதி சாலை வரையிலும் பேட்டரி கார்களில் செல்ல பக்தர் ஒருவருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்பட்டு 3 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ராமேசுவரம் கோவில் ரத வீதியில் கட்டணத்துடன் பக்தர்களை ஏற்றி இறக்கி விட்டு இயக்கப்பட்டு வந்த பேட்டரி கார்களை நேற்று முதல் இலவசமாக இயக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.ஆணையரின் உத்தரவை உடனடியாக அமல்படுத்திய ராமேசுவரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, 3 பேட்டரிகார்களிலும் தமிழ்,ஆங்கிலம், இந்தியில் இலவசம் என எழுதப்பட்டு நேற்று முதலே அவற்றில் ரதவீதிகளில் பக்தர்கள் சென்றுவர நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதனால் பக்தர்கள் மிகந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது பற்றி திருக்கோவில் இணைஆணையர் கல்யாணி கூறியதாவது:- ராமேசுவரம் கோவில் சார்பில் 3 பேட்டரி கார்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன.மேலும் 2 பேட்டரி கார்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.அந்த பேட்டரி கார்கள் வந்த பின்பு பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள உலகஅளவில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை சுற்றி பார்க்க வசதியாக இலவசமாக இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் சேவையை அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அன்வர்ராஜா எம்.பி. ரூ.8 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரி கார் வழங்கியுள்ளார். இதன் சேவை தொடக்க விழா மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் முல்லைக்கொடி வரவேற்று பேசினார். விழாவில் கலந்து கொண்ட அன்வர்ராஜா எம்.பி. நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். அதனை கலெக்டர் இயக்கினார். விழாவில் அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:- ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.80 லட்சம் செலவில் அலங்காரகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நோயாளிகள் பயணம் செய்வதற்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்தபடியாக தினமும் 2 ஆயிரம் வெளிநோயாளிகள், மாதத்திற்கு 15 ஆயிரம் உள்நோயாளிகள் மற்றும் 500 அறுவை சிகிச்சைகள் நடைபெறக்கூடிய மிகப்பெரிய ஆஸ்பத்திரியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இதேபோல ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே டி-பிளாக்கில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் எம்.பி. நிதியில் இருந்து அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    பூங்கா முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையாக மாற்ற மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். பாம்பன்-சின்னப்பாலம், கீழநாகாச்சி-தேவர் நகர், என்மனங்கொண்டான்-தர்காவலசை, ஆர்.எஸ்.மங்கலம்-சேத்திடல், நயினார்கோவில்-எஸ்.சிறுவயல், முதுகுளத்தூர்-கீழத்தூவல், கமுதி-சின்ன ஆணையூர், காரியாபட்டி-அல்லாலபேரி கிராமம் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகள் என 544 பள்ளிகளுக்கு ரூ.37½ லட்சம் செலவில் நூலகங்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. 63 அரசு பள்ளிகளுக்கு ரூ.1½ கோடி செலவில் இருக்கைகள், மேஜைகள் வழங்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் 129 இடங்களில் ரூ.6கோடியே 68 லட்சம் செலவில் எல்.இ.டி. உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. 70 ஊராட்சிகளில் ரூ.5 கோடியே 16 லட்சம் செலவில் சாலை பணிகள் நடைபெற்றுள்ளன. 25 ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 49 ஊராட்சிகளில் ரூ.2.57 கோடி செலவில் கலையரங்கம் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலையை நீட்டிப்பதற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் அரிச்சல்முனை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் கட்டப்படும். காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தையே ஒரு மாதம் முடக்கியதன் காரணமாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

    தமிழகத்தின் உரிமைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் பல்வேறு திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜவகர்லால், நகர் செயலாளர் அங்குச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் அசோக்குமார், திருப்புல்லாணி முனியாண்டி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் சாதிக் அலி நன்றி கூறினார்.
    ×