என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி
- கோகுல் கண்ணன் (வயது 25). இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
- டிரேடிங் கம்பெனிக்கு அமெரிக்க டாலராக பணத்தை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை, அல்லிகுட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கோகுல் கண்ணன் (வயது 25). இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
மேலும் அந்த டிரேடிங் கம்பெனிக்கு அமெரிக்க டாலராக பணத்தை மாற்றி அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய கோகுல் கண்ணன், அவர் குறிப்பிட்ட வங்கியில் ரூ.1 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு, அந்த மர்மநபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகுல் கண்ணன், இது குறித்து சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
Next Story






