search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDIA Bloc"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசாமில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது.
    • இந்தியா கூட்டணியுடன் நாங்கள் நிற்கிறோம் என்றார் ஆம் ஆத்மி எம்பி சந்தீப் பதக்.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தலில் அசாமில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்தது. அதன்படி கவுகாத்தியில் பாபென் சவுத்ரி, தில்பர்காவில் மனோஜ் தன்வார் மற்றும் சோனிபூரில் ரிஷி ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா கூட்டணியுடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாம் இப்போது பேசுவதில் சோர்வடைகிறோம்.

    தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். எங்களுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணியுடன் நாங்கள் நிற்கிறோம்.

    இன்று ஆம் ஆத்மி கட்சி அசாமில் அறிவித்துள்ள 3 வேட்பாளர்களை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என நம்புகிறோம்.

    கூட்டணிக்கு வந்து தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு. நேரமும் வியூகமும் முக்கியம். பேசி அலுத்துவிட்டோம். பேசுவதில் இன்னும் எவ்வளவு நேரம் விரயமாகும்? என கேள்வி எழுப்பினார்.

    • திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவிப்பு.
    • மத்திய அரசை பாராட்டியதுடன் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் நிதிஷ் குமார்.

    பாட்னா:

    பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்துவந்தார். அதன்பின் 2022-ல் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்.

    பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவர் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு கிடையாது என அறிவித்துள்ளதும் நிதிஷ் குமாரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    இதுபோன்ற காரணங்கள் எல்லாம் நிதிஷ் குமாரை கூட்டணி மாற வைக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    ஒருவேளை நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியில் சேர முடிவு செய்தால், வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி பீகாரின் பெட்டியாஹ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் ஒரே மேடையில் தோன்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான சுஷில்குமார், அரசியலில் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

    • ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மேற்கு வங்காளத்தை வந்தடைந்தது.
    • இந்தியா கூட்டணி அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் என்றார் ராகுல் காந்தி.

    கொல்கத்தா:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரை வந்தடைந்தது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:

    மேற்கு வங்காளத்துக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் வெறுக்கத்தக்க பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. எனவே, இந்தியா கூட்டணி அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டி என தெரிவித்துள்ள நிலையில், ராகுலின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    • மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு.
    • திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்".

    மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இல்லாமல் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி இருப்பதை யாராலும் கற்பனைக் கூட செய்யது பார்க்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    இதுதொடர்பாக, கட்சியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் ஒரு பகுதியாக அசாமில் உள்ள வடக்கு சல்மாராவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியின் தூண் போன்றவர் மம்தா பானர்ஜி. அவர் இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து வருவதாகவும், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான தொகுதிப்பங்கீடு விரைவில் நிறைவடையும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர்.
    • தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் அஜோய்குமார் தெரிவித்துள்ளார்.

    வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அஜோய் குமார் மேலும் கூறியதாவது:-

    காங்கிரசுடன் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கூட்டணியை அவர் வழிநடத்துவார். 

    பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு இன்னும இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.

    ராமர் கோயில் கட்டவும், பல திட்டங்களைத் தொடங்கவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் மத்திய அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிதி வழங்க மறுக்கிறார்கள். திருநெல்வேலி, சென்னை வெள்ளத்திற்கு தமிழக அரசு பலமுறை நிவாரண நிதி கேட்டு வருகிறது. ஆனால் பாஜக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இந்தியாவின் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் சொத்துக்களில் 76 சதவீதத்தை வைத்துள்ளனர். ஆனால் 50 சதவீத மக்கள் தொகை இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.
    • இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் சரத் பவார்.

    மும்பை:

    இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. கூட்டணியின் செயல்பாடுகள், தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் தயாரிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் புனேயில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டணி உறுப்பினர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நிதிஷ் குமாரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என உறுப்பினர்கள் ஆலோசனை கூறினார்கள். அதற்கு நிதிஷ் குமார் சம்மதிக்கவில்லை. கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என நிதிஷ் குமார் கூறினார்.

    தேர்தலில் ஓட்டு கேட்பதற்காக பிரதமர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்குப் பிறகு தலைவரை தேர்ந்தெடுப்போம். 1977-ம் ஆண்டில் நடந்த தேர்தலின்போது மொரார்ஜி தேசாய் எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றபின் அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    மகாராஷ்டிராவில் உள்ள மக்களவை தொகுதி பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவு எட்டப்பட்டதும் எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிப்போம் என தெரிவித்தார்.

    • நிதிஷ்குமார் மறுத்ததால் கார்கே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேர்வு செய்ய வேண்டும், தொகுதி பங்கீட்டையும் ஜனவரி இறுதிக்குள் பேசி முடிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தலைநகர் டெல்லியில் இன்று காணொலி காட்சி மூலம் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்தியா கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கார்கே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
    • ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பதில் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. தற்போது தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டணியின் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முக்கிய இடம் பிடிக்கும் எனத் தெரிகிறது. மேலும், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பதும் முடிவு செய்ய இருப்பதாக தெரிகிறது.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என விரும்புகிறது. அதேவேளையில் திரிணாமுல் காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

    இந்தியா கூட்டணி உருவாவதற்கு நிதிஷ் குமார்தான் முக்கிய காரணம். இதனால் கடந்த கூட்டத்தின்போது ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தின் பாதிலேயே வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் நிதிஷ் குமார் கட்சியினர் அதை மறுத்தனர்.


    கடந்த கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சி டிசம்பர் மாதத்திற்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ்க்கு கடும் சவாலாக இருக்கும்.

    • இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை.
    • மேற்கு வங்காளம், பீகார், டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என்று பார்ப்போம்.

    மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலான கட்சி. மற்ற கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. மேற்கு வங்காளம் (திரிணாமுல் காங்கிரஸ்- மம்தா பானர்ஜி), பீகார் (நிதிஷ்குமார்- ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேஜஸ்வி யாதவ்- லாலு கட்சி), உத்தர பிரதேசம் (அகிலேஷ் யாதவ்) மாநில கட்சிகள் இதற்கு உதாரணம்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிரிராஜ் கூறுகையில் "இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை. அது ஆதாயத்திற்கான கூட்டணி. மேற்கு வங்காளம், பீகார், டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என்று பார்ப்போம். இந்த இந்தியா கூட்டணிதான் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்காக சதி செய்கிறது.

    • இந்தியா கூட்டணியில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவும்.
    • பா.ஜனதா கூட்டணியில் பிரதமர், அமித் ஷா முன் எதுவும் பேச முடியாது.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் எம்.பி.யான பிரியங்கா திரிவேதி, பா.ஜனதாவின் கூட்டணி கட்டாயப் படுத்தப்பட்ட மற்றும் சரணடைந்த கூட்டணி என விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி கூறுகையில் "அவர்களுடைய கூட்டணி (பா.ஜனதா உடைய) கட்டாயப் படுத்தப்பட்ட கூட்டணி. ஏனென்றால் கொடுங்கோன்மையை ஆதரித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என எல்லோருக்கும் தெரியும். அவர்கள் (பா.ஜனதா) நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றை புறந்தள்ளியுள்ளனர்.

    பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா முன்னிலையில், அவர்களால் ஏதும் பேச முடியாது. எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியாது. அவர்களுடைய எந்த திட்டத்தையும் முன்வைக்க முடியாது என்று அவர்களுக்கு தெரியும். இதுதான் சரணடைந்த கூட்டணி.

    இந்தியா கூட்டணி 26 கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி. அங்கே பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், இதுதான் ஜனநாயத்தின் அழகு. பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும். முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு, நாட்டின் அரசியலமைப்புக்காக, மக்களுக்காக மிகவும் வலிமையாக போராடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

    • விவி பேட் ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும்.
    • சேமிக்கப்பட்ட ரசீதுகள் 100 சதவீதம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

    இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம்.

    எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது எனவும் இந்தியா கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் விவிபேட் தொடர்பாக தங்களை சந்திக்க இந்தியா கூட்டணி குழுவுக்கு நேரம் ஒதுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இந்தியா கூட்டணியில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தேர்தல் ஆணையத்தின் தலைவரை சந்தித்து வழங்கி, ஆலோசனை நடத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அவ்வாறு செய்வதில் எங்களுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

    "இந்தியா கூடடணியின் 3 அல்லது 4 பேர் உங்களை சந்தித்து விவிபேட் குறித்து சில நிமிடங்கள் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கும்படி மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்" என ஜெய்ராம் ரமேஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    30-ந்தேதியிடப்பட்டு இந்த கடினம் எழுதப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி இது தொட்ரபானை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும்,
    • தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    2014 மற்றும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் பா.ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, பிரதமாக பதவி ஏற்றார். தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக இருந்து வருகிறார்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் இவர்தான் பா.ஜனதா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கிறார். 2014-ல் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த பா.ஜனதா, 2019-ல் தனிப்பெரும்பான்மை பெற்றது.

    2024-ல் கூடுதல் இடங்களை பிடித்து வெற்றிபெற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது. அதேவேளையில் மோடி தலைமையிலான மத்திய அரசை இந்த முறை வீழ்த்தவில்லை என்றால், பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மிகவும் கடினம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

    இதனால் சுமார் 28 கட்சிகள் சேர்ந்து "இந்தியா கூட்டணி" என்பதை அமைத்துள்ளன. இருந்தபோதிலும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டணிக்குள் தனித்தனியே பிரச்சனை இருந்துதான் வருகிறது.

    இதற்கிடையே மக்களவை தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் பா.ஜனதாவுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. தற்போது ஐந்து மாநில தேர்தல் பா.ஜனதாவுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக உள்ளது.

    இந்த நிலையில் ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 295 முதல் 335 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா கூட்டணி 165 முதல் 205 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பீகார், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை விட ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இந்தியாவில் இந்தியா கூட்டணிதான் ஆதிக்கம் செலுத்தும். பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்டோரிடம் மாநில அளவில் கருத்து கேட்கப்பட்டு இந்த கணிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட அனைவரும் வாக்காளர்கள் எனவும், 543 இடங்களிலும் 13,115 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

    கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், வடக்கு மண்டலத்தில் 180 இடங்களில் 150 முதல் 180 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் 78 இடங்களில் 45 முதல் 55 இடங்களை கைப்பற்றும் எனவும், தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேசம் (27-29), சத்தீஸ்கர் (9-11), ராஜஸ்தான் (23-25), உத்தர பிரதேசம் (73-75) பா.ஜனதா கூட்டணி அதிக அளவில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் கூட பா.ஜனதா கை ஓங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 23 முதல் 25 இடங்களையும், பா.ஜனதா 16 முதல் 18 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடியின் பணி திருப்பிகரமாக இருப்பதாக 47.2 பேர் ஆதரவு அளித்துள்ளனர். 30.2 சதவீதம் பேர் மிகவும் திருப்தி, 21.3 சதவீதம் பேர் திருப்தியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    பெரும்பாலானோர் 2024 தேர்தல் வரை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செல்லாது எனவும் தெரிவித்துள்ளனர்.

    ×