search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 தேர்தல்"

    • தேர்தல் வியூக அமைப்பாளர்கள் பல நூறு கோடி கட்டணம் பெறுகின்றனர்
    • ராகுல், 10 வருடங்களில் பல தோல்விகளுக்கு பிறகும் சரியான பாதையில் செல்கிறார்

    இவ்வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    2014 பொதுத்தேர்தலில் தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களை அமைத்து தரும் நிபுணர்கள் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். அவர்கள் வகுத்து தரும் திட்டங்களுக்கு ஏற்ப கட்சிகள் தேர்தல் நேரங்களில் செயல்படத் தொடங்கின.

    பல நூறு கோடிகளை கட்டணமாக வசூலித்த இத்தகைய அரசியல் வியூக அமைப்பாளர்களின் திட்டங்கள், சில நேரங்களில் சில கட்சிகளுக்கு வெற்றியை கொடுத்தது.

    தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநில ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்த "பிகே" என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor).


    தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பிகே தெரிவித்ததாவது:

    புலனாய்வு அமைப்புகளினால் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் பிரமுகர், பா.ஜ.க.வில் இணைந்து விட்டால், அவர் மீது நடவடிக்கைகள் நின்று விடுகின்றன. இது பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானது.

    பா.ஜ.க. பெரிதளவு மோடியை சார்ந்தே இருப்பது அக்கட்சியின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியலாம்.

    அடுத்து வரும் தேர்தல்களில் 90 சதவீதம் பா.ஜ.க. தோற்றால் மோடி மக்களை சந்திக்க தயங்குவார்.

    ஆனால், ராகுல் காந்தி கடந்த 10 வருடங்களில் பல தோல்விகளுக்கு பிறகும், நேர்மறையாக, தான் செல்ல நினைக்கும் பாதையிலேயே சரியாக செல்கிறார்.

    ராகுலுக்கு மன உறுதி அதிகம்.

    ஆனால், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவர் பாத யாத்திரை செல்வது சரியான முடிவு அல்ல. போர் நடக்கும் போது தளபதி, தலைமையகத்தில் இருந்து தனது படையினருக்கு வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கின
    • 3 சந்திப்புகளுக்கு பிறகு ஒன்றும் நடக்கவில்லை என்றார் நிதிஷ்குமார்

    இந்திய பாராளுமன்றத்திற்கு அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருக்கிறது. இம்மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கி இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா கூட்டணி" எனும் கூட்டணியை அமைத்தன.

    இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அடக்கம்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    இந்தியாவில் பல கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கடின முயற்சிகளுக்கு பிறகு உருவானதே இந்தியா கூட்டணி. கூட்டணி உருவானதும் பாட்னாவிலும், பெங்களூரூவிலும், மும்பையிலும் பல சந்திப்புகள் நடந்தன. ஆனால், அதற்கு பிறகு ஒன்றுமே நடைபெறவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அடுத்த வருடம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் கவனம் முழுவதும் நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களிலேயே உள்ளது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அழைப்பார்கள்.

    இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.

    ×