search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saamana"

    • பிரதமர் மோடியே அவரது தோல்விக்கு காரணமாக இருப்பார்
    • மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும்

    பா.ஜனதா கட்சி இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறையும் மோடியே பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த முறையும் பா.ஜனதா பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    பா.ஜனதாவின் வெற்றியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜனதாவுக்கு உத்தர பிரதேசம் (62), மத்திய பிரதேசம் (28), பீகார் (17), ராஜஸ்தான் (24), குஜராத் (26), மகாராஷ்டிரா (23) மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சிதான் காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அவர் பா.ஜனதாவை மிகப்பெரிய எதிரியாக கருதுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னா, பிரதமராகும் ஆசை எதிர்க்கட்சி தலைவரகளுக்கு இல்லையென்றால், பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என தலையங்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய நிலையில் அவரது பொறுமையை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியுடன் காந்தி குடும்பத்தை சேர்ந்தவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்ற பிம்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.

    கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்தது 2024-ம் ஆண்டுக்கான பா.ஜனதாவின் கெட்ட சகுனம். வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும். சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜனதா கட்சியுடன் போட்டியை கடுமையாக்குவார் எனத் தெரிவித்துள்ளது.

    வட இந்தியாவில் ராகுல்காந்தி தன்னந்தனியாக பிரசாரத்தை மேற்கொண்டால், தற்போதைய நிலை காங்கிரஸ் கட்சி மாறலாம். 2024-ம் ஆண்டு பா.ஜனதா தோல்விக்கு மோடியே காரணமாக இருப்பார். அதற்கு அமித் ஷா பங்களிப்பார். மோடி- அமித் ஷா மீது கோபம் உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் என எழுதியுள்ளது.

    இருந்தாலும், மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது அரசியலமைப்பு மற்றும் இந்திய தாயாக இருக்கும். தலைவர் மக்களிடையே இருந்து உருவாகுவார்.

    இலங்கை மன்னர் ராவணனை வீழ்த்த வானர் கூட்டம் உதவியது போல், தற்போது வானர் சேவை அவசியமானது எனத் குறிப்பிட்டுள்ளது.

    சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டாவிட்டால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #BJP #AyodhyaRamTempleIssue
    மும்பை:

    பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா, சமீப காலங்களில் பாஜகவை தீவிரமாக சாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக தனது அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாஜக மத்தியிலும், உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சிக்கு வரும்போது அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டிவிடுவார்கள் என நம்பியதாகவும், ஆனால் ஒருவார்த்தை கூட தற்போது அதைப்பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    மேலும், ராமர் பாஜகவுக்கு நல்ல நாட்களை அளித்ததாகவும், ஆனால் இன்னும் ராமர் அயோத்தியில் இருந்து அன்னியமாகவே இருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என கூறும் பாஜக, அந்த வழக்கு எத்தனை ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது என உச்சநீதிமன்றத்தில் கேட்கவில்லை என கூறியுள்ளது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே போய்விட்டதாகவும், ஒருவேளை ராமர் கோவில் கட்டப்படவில்லை என்றால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் எனவும் சாமனா நாளிதழில் சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. #ShivSena #BJP #AyodhyaRamTempleIssue
    மத்தியில் பாஜக ஆட்சியில் வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது இந்தியா என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நட்ந்து வருகிறது. அங்கு கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்து வருகிறது. ஆனாலும், இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு செயல்படும் விதத்தை சிவசேனா கடுமையாக தாக்கி வருகிறது.

    இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியில் இந்தியா வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கூறுகையில், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்து வருகிறது. தேசிய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலைப்படாமல் பிசியாக உள்ளார். 

    எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலையோ 100 ரூபாயை நெருங்குகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
      
    விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. உணவு பொருள்கள் , சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய திட்டங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என தெரிவித்துள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
    சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய உத்தவ் தாக்ரே, இந்தியாவில் பெண்களை விட பசுக்கள் பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    மும்பை:

    பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பசுக்களை பாதுகாப்பதாக நடத்தப்படும் வன்முறையால் உயிர்கள் பலியாவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன, ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பாஜகவின் இந்துத்துவா கொள்கை போலியானது என்றும், இந்தியாவில் இந்துத்துவா கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



    தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே, நாங்கள் பசுக்களை பாதுகாக்க வேண்டாம் என கூறவில்லை எனவும், பசுக்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியதால், பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் யார் தேச விரோதி என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது எனவும், மிகவும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததாகவும், ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியைப் போலவே இப்போதும் ஆட்சி நடப்பதாகவும் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
    ராம ராஜ்ஜியம் எனக்கூறி பாஜக அரசியல் செய்து வருவதாகவும், தன் பெயரைச் சொல்லி அரசியல் செய்யுமாறு ராமர் கூறவில்லை எனவும் பாஜகவை சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. #ShivSena #BJP
    மும்பை:

    சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த சுரேந்திர சிங், நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை ராமராலும் கூட தடுக்க முடியாது எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது.

    இந்நிலையில், இதுதொடர்பாக சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நாட்டில் பாஜக எவ்வாறு ராம ராஜ்ஜியம் அமைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்காமல், ராமராலும் கூட இதனை தடுக்க முடியாது என பாஜக கூறி வருவதாக விமர்சித்துள்ளது. இதையடுத்து, பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடும், இப்போது மற்றொரு நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

    நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் மீதான கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் மாறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கைமீறிப்போனதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

    இதுபோன்ற நிலையில் ராம ராஜ்ஜியம் எவ்வாறு அமைக்கப்படும்? அதற்கான திட்டங்கள் குறித்து பாஜக விளக்க வேண்டும் எனவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

    ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனக்கூறி பாஜக அரசியல் செய்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமர் கூறவில்லை எனவும் சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #BJP
    பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    மும்பை:

    நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தபட்ட நாளை கருப்பு தினமாக அனுசரித்த பாஜகவினர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடியும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

    இந்நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் இருந்த நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 

    இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாமனாவில் உள்ள தலையங்கத்தில் கூறியதாவது:



    பிரதமர் மோடியும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற எமர்ஜென்சி குறித்து அவர்கள் இப்போது பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. 

    ஜனநாயக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் பரவாயில்லை, ராஜாக்கள் வாழ்ந்தால் போதும். நமது ராணுவ வீரர்களும் விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஜவான், ஜெய் கிசான் ( ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கமும் செத்துக் கொண்டிருக்கிறது.

    மக்கள் எதிர்ப்பை மீறி ரத்னகிரி பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திறப்பது புற்றுநோய் மருத்துவமனையை திறப்பதற்கு சமமாகும் என தெரிவித்துள்ளது. #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    ×