search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிராஜ்"

    • இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது.
    • அதேவேளையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்தியாவில் இந்து மக்கள் சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது:-

    இந்து மக்கள் தொகை குறைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம். இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது.

    ஆனால் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது. 1950-ல் 9.84 சதவீதமாக இருந்தது. தற்போது 17.09 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இது அனைத்தும் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால் நடந்துள்ளது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1950-ல் கிறிஸ்தவ மக்கள் தொகை 2.24 சதவீதமாக இருந்த நிலையில், 2015-ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 5.38 சதவீதம் உயர்வாகும். ஜெயின் சமூகத்தினர் தொகை 1950-ல் 0.45 சதவீதமாக இருந்தது. 2015-ல் 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    சீக்கிய சமூகத்தினர் 1950-ல் 1.24 சதவீதம் இருந்தனர். 2015-ல் 1.85 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இது 6.58 சதவீதம் உயர்வாகும். பார்சி சமூகத்தினர் 1950-ல் 0.03 சதவீதம் இருந்தனர். 2015-ல் 85 சதவீதம் குறைந்து 0.004 சதவீதமாக குறைந்துள்ளனர்.

    • இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை.
    • மேற்கு வங்காளம், பீகார், டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என்று பார்ப்போம்.

    மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

    காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலான கட்சி. மற்ற கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. மேற்கு வங்காளம் (திரிணாமுல் காங்கிரஸ்- மம்தா பானர்ஜி), பீகார் (நிதிஷ்குமார்- ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேஜஸ்வி யாதவ்- லாலு கட்சி), உத்தர பிரதேசம் (அகிலேஷ் யாதவ்) மாநில கட்சிகள் இதற்கு உதாரணம்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிரிராஜ் கூறுகையில் "இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை. அது ஆதாயத்திற்கான கூட்டணி. மேற்கு வங்காளம், பீகார், டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என்று பார்ப்போம். இந்த இந்தியா கூட்டணிதான் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்காக சதி செய்கிறது.

    ×