search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child"

    • மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.

    உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது.
    • ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்த போது குழந்தையை படுக்க வைத்து விட்டு தாயார் குளிக்கச் சென்றார்.

    அந்த நேரத்தில் வீட்டில் இருந்த எலி ஒன்று குழந்தை அருகில் வந்தது. திடீரென குழந்தையின் மூக்கை எலி கடித்தது.

    இதனால் குழந்தை கதறி அழுதது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.

    அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எலி இருக்கும் வீடுகளில் குழந்தையை தரையில் படுக்க வைக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
    • குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 2½ வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளார்.

    இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் திரண்டனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சித்தாத்தா குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருவேலம்முத்து. இவரது மனைவி கருவேலங்கனி.

    இவர்களுக்கு கடந்த 23 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவத்தையொட்டி கருவேலங்கனி குழந்தையுடன் மீனாட்சிபட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துள்ளனர். அப்போது திடீரென குழந்தை கட்டிலில் இருந்து தவறி தரையில் விழுந்தது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கருவேலங்கனியின் குடும்பத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி அருகே உள்ள முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (30) கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு இலக்கியா (9), அதன்யாஸ்ரீ (4 1/2), சபரீசன் (1 1/2) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை பரமத்திவேலூர் தாலுகா ஜமீன் இளம்பள்ளி அருகே உள்ள கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வேலைக்கு வந்த வேலுசாமி தனது மனைவி வருகைக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். முனியப்பம்பாளையத்தில் இருந்து தனது குழந்தைகளுடன் கள்ளுக்கடை மேடு பஸ் நிறுத்தத்தில் வந்து சசிகலா இறங்கியுள்ளார்.

    அப்போது குழந்தை அதன்யாஸ்ரீ எதிர் திசையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனது தந்தையை பார்த்ததும் ஜேடர்பாளையம்- சோழசிராமணி சாலையை கடக்க வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஜேடர்பாளையத்தில் இருந்து பெருந்துறை நோக்கி சென்ற ஏ.டி.எம்.மிற்கு பணம் நிரப்பும் வாகனம் எதிர்பாராத விதமாக குழந்தை அதன்யாஸ்ரீ மீது மோதியது.

    இதில் குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.
    • உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது.

    சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது.

    நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்குமாறு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மார்கோ ரூபியோ தலைமையிலான குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோபைனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சீனாவில் இதுவரை அறியப்படாத சுவாச நோய் பரவி வருவதால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பயணத்தை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

    கொரோனா தொற்றின்போது உண்மையை சீனா மறைத்தது. உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்தையும் நமது பொருளாதாரத்தையும், பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளனர்.

    • அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை.
    • போலீசார் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் போவை பகுதியில் உள்ள அசோக் நகரில் ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்வில்லை. இதையடுத்து, பெற்றோர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே காவல் நிலையம் விரைந்த பெற்றோர், தங்களின் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர். காணாமல் போன சிறுவன் விளையாடி கொண்டிருந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    அதன்படி மோப்ப நாய் "லியோ" சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. முதலில் சிறுவன் அணிந்திருந்த டி-சர்ட் ஒன்றை மோப்பம் பிடித்த லியோ, பிறகு சிறுவன் விளையாடி கொண்டிருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தேடலை துவங்கிய லியோ மைதானத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே சிறுவனை கண்டுபிடித்து அசத்தியது.

    மோப்ப நாய் தேடுதல் வேட்டையில் இறங்கிய மூன்றரை மணி நேரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாத பட்சத்தில் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, சில மணி நேரங்களில் சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது. 

    • மழை நின்றபின் குழந்தை லோகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
    • அருகில் இருந்த கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பெருமகளூர் பேரூராட்சி கல்யாண ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் - பிரியா தம்பதியரின் குழந்தை லோகிதா ( வயது 2).

    பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்து வந்தது.

    மழை நின்றபின் குழந்தை ேலாகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் இருந்த கம்பியை தொட்ட போது அதிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை யோகிதா தூக்கி வீசப்பட்டது.

    உடனடியாக குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெருமகளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்த பேராவூ ரணி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது.
    • குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்ட யம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்ததில், குழந்தையின் நுரையீரலின் கீழ் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். அதனால் தான் குழந்தைக்கு தொடர் இருமல் ஏற்பட்டது மட்டுமின்றி, மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தைக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தையின் வலது நுரையீரலில் சிவப்பு நிற சிறிய எல்.இ.டி.பல்ப் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அகற்றினர்.

    இதன்மூலம் அந்த குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். குழந்தை விளையாடிய பொம்மை யில் இருந்து எல்.இ.டி. பல்ப் தெரியாமல் வாய் வழியாக உடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும், இதுபோன்ற நிகழ்வு மிகவும் அரிதாக நடக்கக்கூடியது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தில்லாத விளையாட்டு பொருட்களையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார்.
    • கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 1-ல் முத்துகிருஷ்ணன் முதல் தெருவில் வசித்து வந்தவர் கவிதா (வயது 47). வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு உதவியாக இளையமகள் அவரது வீட்டில் தங்கியுள்ளார். கணவனை இழந்த கவிதா 2 பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு, கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடனை கொடுத்தவர்கள் கவிதாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். கடனை திருப்பி அளிக்க முடியாத கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் சென்றவர் திரும்ப வெளியில் வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் இவரை தேடி நேற்று மதியம் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்த மின் விசிறியில் புடவையினால் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இது குறித்த தகவலின் படி திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்
    • சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    ஊத்துக்குளி,செப்.17-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பெட்டிக்கடை அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 28). இவர் அங்குள்ள கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சித்தேஸ்வரன் (வயது 3). சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று வேலை செய்யும் இடத்திற்கு குழந்தையை அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடி பார்த்த சுப்பிரமணி, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் சித்தேஸ்வரன் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சித்தேஸ்வரன் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆத்திரமடைந்த விஷ்ணு, மனைவி தனது கையில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தையை பிடுங்கி தரையில் வீசினார்.
    • விஷ்ணுவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் கன்னியாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் குமாரபுரம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, மனைவி தனது கையில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தையை பிடுங்கி தரையில் வீசினார்.

    தரையில் வீசப்பட்ட குழந்தை பயங்கரமாக அலறியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கீழே வீசப்பட்டதில் காயமடைந்த கைக்குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், விஷ்ணுவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

    ×