search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி
    X

    கோப்பு படம்.

    தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி

    • கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்
    • சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    ஊத்துக்குளி,செப்.17-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பெட்டிக்கடை அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 28). இவர் அங்குள்ள கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சித்தேஸ்வரன் (வயது 3). சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று வேலை செய்யும் இடத்திற்கு குழந்தையை அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடி பார்த்த சுப்பிரமணி, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் சித்தேஸ்வரன் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சித்தேஸ்வரன் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×