என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தந்தை"
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே கானாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது53) தொழிலாளி. இவரது மகன் வெங்கடகிருஷ்ணன் (24). கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வெங்கடகிருஷ்ணன் தனது தந்தை ராமஜெயத்தை தட்டி கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமஜெயம் அங்கிருந்த கத்தியால் தனது மகன் வெங்கடகிருஷ்ணனை சரமாரியாக தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து ராமஜெயத்தை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த நல்லாத்தூரை சேர்ந்த முதியவர் மண்ணாங்கட்டி (வயது 70). இவர் தனது மகனிடம் குடிப்பதற்கு பணம் கேட்ட போது கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த மண்ணாங்கட்டி, விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முதியவர் மண்ணாங்கட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
- வங்கியில் வேலை முடிந்து செல்வராஜூம், கந்தசாமியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் கலர்பட்டி மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளி கிராமம் கலர்பட்டி பகுதியை சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனை யாளர் செல்வராஜ் (வயது 49). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (43). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். இவர்கள் இருவரது வீடும் அருகருகே உள்ளது.
இந்நிலையில் முருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிலத்தை முருகன் பணத்தை ெகாடுத்து திரும்ப பெறாத நிலையில் கடந்த 26-ந் தேதியன்று அந்த நிலத்தை செல்வராஜ் தனது பெயருக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த முருகன் செல்வராஜிடம் சென்று நிலத்தை தனக்கு திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு செல்வராஜ் மறுப்பு தெரிவித்த நிலையில் செல்வராஜுக்கும் முருகனுக்கும் முன்பகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செல்வராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் பெறுவதற்காக ராமகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (69) என்பவரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் குருக்குப்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்றார்.
அவர்களுக்கு தெரியாமல் முருகன் தனது காரில் செல்வராஜை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
வங்கியில் வேலை முடிந்து செல்வராஜூம், கந்தசாமியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் கலர்பட்டி மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முருகன் தனது காரை செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி செல்வராஜூம், கந்தசாமியும் கீழே விழுந்தனர். அப்போது முருகன் தான் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வராஜ், கந்தசாமி ஆகியோரை சரிமாரியாக வெட்டினார். முருகனின் 16 வயது மகனும் அவர்களை கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வராஜையும், கந்தசாமியையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். செல்வராஜ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையிலும், கந்தசாமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பந்தப்பட்ட முருகன் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதான முருகனின் மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அடைத்தனர்.
- மகளின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி தந்தையிடம் பணம் கேட்டு வாலிபர் மிரட்டல் விடுத்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்த 46 வயது நபர் எலக்ட்ரானிக் நிறுவ னம் நடத்தி வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த டி.வி. மெக்கானிக் ஒருவரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் அவரது மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பெண்ணின் தந்தை மெக்கானிக்கிடம் விசாரித்தார். அப்போது அவர் அவதூறாக பேசியதுடன் மகளின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன்நகர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடன் சென்ற நண்பரும் உயிரிழப்பு
- கார்த்திக்ராஜா மணிகண்டன் அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார்.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கலை சேர்ந்தவர் குமார் மகன் கார்த்திக்ராஜா (வயது 28). தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிக்கு பண்ருட்டியில் நேற்று குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கார்த்திக்ராஜா அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24) என்ற நண்பரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்றார். குழந்தையை பார்த்து விட்டு இன்று பகல் 11 மணியளவில் பண்ருட்டியில் இருந்து பரிக்கலுக்கு புறப்பட்டனர். அப்போது திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள அரசூர் பாலம் அருகே காலை 11.30 மணிக்கு வந்த போது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகியோர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
தகவல் அறிந்த திருவெண்ணை நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தந்தை, அவரது நண்பர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் பரிக்கல் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
- இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மனைவிக்கு கண் பார்வையில் கோளாறு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை தான் 6-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து தனக்கு பாலியல் தொல்லை ெகாடுத்து வருகிறார். இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தெரிவித்தேன். போலீசார் எனது தந்தையை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். அப்போது எனது தந்தை இனிமேல் இது பற்றி வெளியே சொன்னால் என்னையும் எனது அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் நான் பயந்து எனது சித்தி வீட்டுக்கு சென்றேன். அங்கேயும் வந்து எங்களை அடித்து விரட்டினார். எனவே எனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.
- இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சரளை பகுதியில் ரவி-ரங்கநாயகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுக்கு தெரிந்த சிவக்குமார்-பிரவீனா ஆகியோர் தனது உறவினர் உதயகுமார் என்பவர் பவானியில் புதிதாக ஜவுளி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அதற்கு பங்குதாரர்கள் வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்க உள்ளதாக ஆசை வார்த்தை கூறியு ள்ளனர்.இதனை நம்பிய தம்பதியினர், ரங்கநாயகிற்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை உதய குமா ரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் பவானியில் விநாயகா இன்டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து ரங்கநாயகியின் சொத்து ஆவணங்களை சிவக்குமார், உதயகுமார், பிரவீனா மற்றும் 2 ஆகிய 5 பேர் கும்பலாக சேர்ந்து கொண்டு வங்கியில் ரூ.1.5 கோடிக்கு அடமானம் வைத்து தலைமறை வாகியுள்ளனர்.
பின்னர் ரங்கநாயகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை யடுத்து போலீசார் தலைமறை வான 5 பேரையும் தேடி வந்தனர். இதில் தாராபுரத்தை சேர்ந்த ஜவுளி கடையில் பணியாற்றி வரும் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த மோசடிக்கு முக்கிய காரணமான சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதில் தலை மறைவாக உள்ள தந்தை, மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார்.
- மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அணை குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). விவசாயி இவருக்கு சுப்பிரமணியன் (42) சுவாமிநாதன் (40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுப்பிரமணியன் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
ஆனால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான சாமிநாதன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுத்தி வந்தார். இதனை அவரின் தந்தை கோபால் கண்டித்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாமிநாதன் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்ததும் தந்தை கோபால் மகனை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது,
இதனை பார்த்த அவரது மூத்த மகன் சுப்ரமணியன் தந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் தா பழூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மது குடிப்பதை கண்டித்ததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார்.
- பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மகன் ஜெபரீசிடம் சகோதரி பற்றி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிண்டி போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிர மணி உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஜெபரீசை போலீசார் கைது செய்தனர் போலீஸ் விசாரணையில் ஜெபரீஷ் வேலை இல்லாமல் சுற்றி திரிவதை தந்தை பாலசுப்ரமணி தட்டி கேட்டு அடிக்கடி தகறாரில் ஈடுபட்டதும் விசரணையில் தெரிய வந்தது.
- போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21).
கர்ப்பமாக இருந்த ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடன் தாய் ரெட்டியூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.
அங்கு மனைவி மற்றும் பிறந்த ஆண் குழந்தையை பார்த்தார். குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குழந்தையின் தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.