search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complains to police"

    • பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
    • முகமது நவாஸ் கல்லூரிக்கு சென்றார்.

    புதுச்சேரி,

    வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா. இவர் வில்லியனூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகன் முகமது நவாஸ் (வயது18). இவர் கோபாலன் கடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை தனது தங்கையை அழைத்துக் கொண்டு அங்குள்ள பள்ளியில் விட்டு விட்டு முகமது நவாஸ் கல்லூரிக்கு சென்றார்.

    ஜான் பாஷா தனது மனைவியுடன் விழுப்பு ரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்றார். பின்னர் ஜான் பாஷா மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் மின் விசிறியில் துப்பட்டாவால் முகமது நவாஸ் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய மகனை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முகமது நவாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜான் பாஷா வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தன்னுடைய மகன் கல்லூரிக்கு சென்று வரும் நிலையில் அவரிடம் அவரது நண்பர்கள் யாரோ பிரச்சினை செய்ததால் மனக்கவலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் முகமது நவாஸ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சுஷ்மிதா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
    • சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் மனோகர், விவசாயக் கூலி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 21). இவர் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார். விடுமுறைக்கு காரைக்கால் வந்த சுஷ்மிதா கடந்த 26-ந் தேதி காலை புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ளார். புதுச்சேரி சென்றவுடன் தந்தைக்கு போன் செய்து புதுச்சேரி வந்து விட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. பல மணி நேரம் முயற்சி செய்த தந்தை, சுஷ்மிதாவின் தோழிகளுக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது, சுஷ்மிதா கல்லூரிக்கும் மற்றும் ஹாஸ்டலுக்கும் வரவில்லை. என கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மனோகர், திருநள்ளாறு போலீசில் புகார் செய்து, உடனடியாக தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தியுள்ளார்.

    • சந்தியா நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
    • சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த வரகூர்பேட்டை ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவரது மகள் சந்தியா (வயது 19). நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல நேற்றிரவு வீட்டில் தூங்கியவர், காலையில் காணவில்லை. இது குறித்து சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.

    • மரக்காணம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயமானார்.
    • கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராம த்தைச் சேர்ந்தவர் குண சேகரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் புதுச்சேரி மாநிலம் வில்லி யனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். கல்லூரிக்கு காலை 7 மணிக்கு புறப்ப டும் இவர் மாலை 5.30 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவார்.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்ற ஆர்த்தி இரவு 7 மணியாகியும் வீடு திரும்ப வில்லை. கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை. இதை யடுத்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் கடந்த ஒரு வருடமாக கொத்தமங்கலத்தில் தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் சம்பவதன்று இரவு சந்தோஷ்குமார் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கோவை பெரிய நாயக்கன்பாளைத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மூத்த மகன் சந்தோஷ்குமார் (33). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள சந்தோஷ்குமார் ஷீட் மெட்டல் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு கடந்த 2013-ல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம், இந்திரா நகரை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தோஷ் குமார் கடந்த ஒரு வருடமாக கொத்தமங்கலத்தில் தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவதன்று இரவு சந்தோஷ்குமார் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தோஷ்குமாரின் தந்தை ஆறுமுகம், தம்பி விமல்ராஜ் ஆகியோர் சென்று விசாரித்துள்ளனர்.

    அப்போது இரவு சுமார் 8 மணியளவில் சந்தோஷ்கு மார் கஞ்சி குடித்ததாகவும், அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவரை சத்தியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் உயர் சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு டாக்டர்கள்ள் பரிசோத்த பின், சந்தோஷ்கு மார் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

    இதையடுத்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக, சந்தோஷ்குமாரின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரி ன்பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே கிருஷ்ணன் குப்பம் சேர்ந்த 17 வயது கட்டியாங்குப்பம் அரசு பள்ளியில் படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி குள்ளஞ்சாவடி பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். இதனை தொடர்ந்து மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி மாணவி எங்கு சென்றார். கடத்தப்பட்டாரா? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புஞ்சை புளியம்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் மனைவி மாயமானார் இதையடுத்து கணவர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    புளியம்பட்டி அடுத்துள்ள பனையம்பள்ளி, கே.வி.கே. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34). இவர் ஆயில் மில்லில் பணியாற்றி வருகின்றார்.

    இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு திவாகர் (11), தியாகு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்வத்தன்று வழக்கம் போல ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் புளியம்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக்கிராமம் ஊசிமலையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா(35).

    இவர்களுக்கு 1 மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த கவிதா சம்வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து கணவர் முருகன் பர்கூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.

    ×