search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் திருநள்ளாறில் கல்லூரி மாணவி மாயம்
    X

    காரைக்கால் திருநள்ளாறில் கல்லூரி மாணவி மாயம்

    • சுஷ்மிதா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
    • சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் மனோகர், விவசாயக் கூலி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 21). இவர் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார். விடுமுறைக்கு காரைக்கால் வந்த சுஷ்மிதா கடந்த 26-ந் தேதி காலை புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ளார். புதுச்சேரி சென்றவுடன் தந்தைக்கு போன் செய்து புதுச்சேரி வந்து விட்டதாக கூறியுள்ளார். அதன் பிறகு சுஷ்மிதாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. பல மணி நேரம் முயற்சி செய்த தந்தை, சுஷ்மிதாவின் தோழிகளுக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது, சுஷ்மிதா கல்லூரிக்கும் மற்றும் ஹாஸ்டலுக்கும் வரவில்லை. என கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மனோகர், திருநள்ளாறு போலீசில் புகார் செய்து, உடனடியாக தனது மகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×