என் மலர்
நீங்கள் தேடியது "student missing"
- நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
- சுப்ரமணி மகன் திலகராஜ். இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள செம்ம–நத்தம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் திலகராஜ். இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது மகள் ரஞ்சனி (வயது 20), சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ நடத்தி வரும் கார்த்தி என்பவர், எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்றி–ருக்கலாம் என தெரிவித்து உள்ளார்.
இந்த புகாரின் பேரில், ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
- மைதிலி (வயது 18). இம்மாணவி , நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார்.
- இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை, குள்ளப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (வயது 18). இம்மாணவி , நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- மரக்காணம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயமானார்.
- கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை
விழுப்புரம்:
மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராம த்தைச் சேர்ந்தவர் குண சேகரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் புதுச்சேரி மாநிலம் வில்லி யனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். கல்லூரிக்கு காலை 7 மணிக்கு புறப்ப டும் இவர் மாலை 5.30 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவார்.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்ற ஆர்த்தி இரவு 7 மணியாகியும் வீடு திரும்ப வில்லை. கல்லூரிக்கு சென்றும் உறவி னர்க ளிடம் விசாரித்த மகள் குறித்த விபரம் தெரியவில்லை. இதை யடுத்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே சின்னத்தேவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் மகள் விஷ்வஸ்ரீ (வயது 16). இவர் மந்திசுனை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- காயத்ரி (வயது 20). திருச்செங்கோ ட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. படித்து வருகிறார்.
- இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி சென்ற அவர் மறுபடியும் மாலை வீடு திரும்பவில்லை.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் . இவரது மகள் காயத்ரி (வயது 20). திருச்செங்கோ ட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி சென்ற அவர் மறுபடியும் மாலை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொங்கிராம்பட்டு மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆட்டோ டிரைவர்.
இவரது மகன் தினேஷ் (வயது 19). இவர் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர் உறவினர்கள் தினேஷை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். தினேஷ் கிடைக்காததால் கண்ணமங்கலம் போலீசில் தினேஷின் தாயார் தேன்மொழி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொன்னேரி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்த இளம்பெண் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- மாணவியின் பெற்றோர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரி சென்ற அவர் திரும்பி வரவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகிறார்கள்.
- ருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் பூர்ணிமா (16).
- பூர்ணிமா நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் பூர்ணிமா (16).
இந்த நிலையில் ஜெயலட்சுமியின் தாய் பாப்பா தனது பேத்தி பூர்ணிமா மற்றும் பேரன் தர்ஷன் ஆகிய இருவரையும் தனது பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். பூர்ணிமா நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
அதன் காரணமாக நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி காலை பயிற்சி வகுப்பு செல்வதாக கூறிவிட்டு சமத்துவபுரம் 4 ரோட்டில் தனியார் பஸ்சில் ஏறி பயிற்சி வகுப்பு சென்றுள்ளார்.
ஆனால் இரவு வெகு நேரமாகியும் பூர்ணிமா வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி பாப்பா தனது உறவினர்கள் வீட்டிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து பாப்பா நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து பூர்ணிமா தானாக எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவரேனும் பூர்ணிமாவை கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- விஷால் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார்.
- மகன் சையத்காசிமை விஷால் வந்து சந்தித்தார்.
கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகர் (45). இவர் சென்னை திருவொற்றியூரில் மாநகர பேருந்து டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, மகன்கள் தர்ஷன்(17), விஷால்(15) அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2வது மகனான விஷால் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பிய அவர் அதே பகுதியில் உள்ள தெருவில் சைக்கிள் ஓட்டி கொண்டு இருந்தார். பின்னர் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது நண்பரை பார்ப்பதற்காக அங்கிருந்து சைக்கிளில் சென்றார்.
ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை மீனாட்சிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த சையதுஅமீன்(45) குரோம்பேட்டையில் மாநகர பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சையத்காசிமை விஷால் வந்து சந்தித்தார். பின்னர் இருவரும் திடீரென்று மாயமானார்கள். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து திடீரென மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர்.
- மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
- இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் வீரமணி (45). இவரது மனைவி நல்லம்மாள் (38). இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவரது மகள் ரீனா (19).
மேல்சாத்தம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து கொண்டிருந்த இவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரீனாவை காணவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் ரீனாவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து நல்லம்மாள் வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி ரீனாவை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் அங்கு செல்லவில்லை.
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மகாலட்சுமி (16). அப்பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அங்கு செல்லவில்லை.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ரெயில் நிலையத்தில் சிறுவனின் பைக் நின்று கொண்டு இருந்தது
- பெற்றோர் போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி விஜி ராம் நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் இருந்த பைக் மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு டியூஷன் செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றார்.
அதன்பின்னர் சிறுவன் வீடு திரும்பவில்லை. மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறுவன் ஓட்டி சென்ற பைக் நின்று கொண்டு இருந்தது. ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காட்பாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.






