search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி அருகே பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவி மாயம்
    X

    பரமத்தி அருகே பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவி மாயம்

    • ருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் பூர்ணிமா (16).
    • பூர்ணிமா நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் பூர்ணிமா (16).

    இந்த நிலையில் ஜெயலட்சுமியின் தாய் பாப்பா தனது பேத்தி பூர்ணிமா மற்றும் பேரன் தர்ஷன் ஆகிய இருவரையும் தனது பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். பூர்ணிமா நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

    அதன் காரணமாக நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி காலை பயிற்சி வகுப்பு செல்வதாக கூறிவிட்டு சமத்துவபுரம் 4 ரோட்டில் தனியார் பஸ்சில் ஏறி பயிற்சி வகுப்பு சென்றுள்ளார்.

    ஆனால் இரவு வெகு நேரமாகியும் பூர்ணிமா வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி பாப்பா தனது உறவினர்கள் வீட்டிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து பாப்பா நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து பூர்ணிமா தானாக எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவரேனும் பூர்ணிமாவை கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×