search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில்  கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
    X

    ஏற்காட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

    • நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • சுப்ரமணி மகன் திலகராஜ். இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள செம்ம–நத்தம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் திலகராஜ். இவர் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது மகள் ரஞ்சனி (வயது 20), சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ நடத்தி வரும் கார்த்தி என்பவர், எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்றி–ருக்கலாம் என தெரிவித்து உள்ளார்.

    இந்த புகாரின் பேரில், ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×