search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர் மாயம்
    X

    கல்லூரி மாணவர் மாயம்

    • கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொங்கிராம்பட்டு மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆட்டோ டிரைவர்.

    இவரது மகன் தினேஷ் (வயது 19). இவர் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பெற்றோர் உறவினர்கள் தினேஷை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். தினேஷ் கிடைக்காததால் கண்ணமங்கலம் போலீசில் தினேஷின் தாயார் தேன்மொழி புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×