என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே கிருஷ்ணன் குப்பம் சேர்ந்த 17 வயது கட்டியாங்குப்பம் அரசு பள்ளியில் படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி குள்ளஞ்சாவடி பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். இதனை தொடர்ந்து மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி மாணவி எங்கு சென்றார். கடத்தப்பட்டாரா? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






