என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தந்தை மீது சரமாரி தாக்குதல் மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்23 May 2022 7:26 AM GMT (Updated: 23 May 2022 7:26 AM GMT)
தந்தை மீது சரமாரி தாக்குதல் செய்த மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் கூடலிங்கம் (வயது 70). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் தர்மர் என்பவரிடம் 5 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நகையை தருமாறு மகனிடம் கூடலிங்கம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கூடலிங்கம் நகை குறித்து மகனிடம் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தர்மர், மற்றொரு மகன் காட்டு ராஜா ஆகியோர் தந்தை என்றும் பாராமல் கூடலிங்கத்தை கம்பு, கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கு உடந்தையாக உறவினர்கள் நீலா, சின்ன முனியாண்டி ஆகியோர் இருந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த கூடலிங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் தர்மர், நீலா, காட்டு ராஜா, சின்ன முனியாண்டி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X