search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண செலவு"

    • இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார்.
    • கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 1-ல் முத்துகிருஷ்ணன் முதல் தெருவில் வசித்து வந்தவர் கவிதா (வயது 47). வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு உதவியாக இளையமகள் அவரது வீட்டில் தங்கியுள்ளார். கணவனை இழந்த கவிதா 2 பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு, கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடனை கொடுத்தவர்கள் கவிதாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். கடனை திருப்பி அளிக்க முடியாத கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் சென்றவர் திரும்ப வெளியில் வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் இவரை தேடி நேற்று மதியம் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்த மின் விசிறியில் புடவையினால் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இது குறித்த தகவலின் படி திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×