search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appeal"

    முதலமைச்சர் பழனிசாமி மீதான் சிபிஐ விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று தான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையில் மேல்முறையீடு குறித்து நான் சொல்லாததை சொன்னது போல் மு.க. ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

    அதாவது சி.பி.ஐ. விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அப்பீல் செய்யும் என்ற கருத்தை நான் கூறியதாக சொல்லி இருக்கிறார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது.

    லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்பது ஒரு தன்னிச்சையான, தன்னாட்சி நிலையிலே செயல்படுகிற ஒரு அமைப்பு. உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்படுகிறது.

    இது அகில இந்திய அளவில் இருக்கிற ஒரு நடைமுறை. சி.பி.ஐ. என்ற அமைப்பு மைய அரசின் அமைப்பு என்ற போர்வையில் இருந்தாலும் நீதிமன்றம் ஒரு ஆணை வெளியிடும் போது நடுநிலை தவறாமல் செயல்படுவது தான் வழக்கமாக உள்ளது.

    இதிலே தன்னாட்சி அமைப்பான லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று நான் கூறியதாக கூறி இருப்பது தவறு.

    என்னிடம் நிருபர்கள் கேட்ட போது அவர்கள் ஒருவேளை அப்பீல் செய்யலாம் என்று பொருள்பட தான் சொன்னேன். அதாவது மேல்முறையீடு செய்யலாம் செல்லாமலும் இருக்கலாம் என்பது தான் இதன் தத்துவம்.

    லஞ்ச ஒழிப்பு துறையை பொறுத்தவரை அது பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்கிற உணர்வு அவர்களுக்கு வரும்போது அப்பீல் செல்வதா? செல்ல வேண்டாமா? என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இதில் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை.


    டெண்டர் விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தம் இல்லை. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இல்லை. இதுதான் உண்மை நிலை. அதனால் மேல்முறையீடு என்பது லஞ்ச ஒழிப்பு துறை எடுக்க வேண்டிய முடிவு.

    இதில் தெளிவுப்பட ஆவணங்கள் பேசுகிறது. அன்றையதினம் நான் பேட்டி கொடுத்த போது சற்று பரபரப்பான சூழலாக இருந்தது. எந்த ஒரு விசாரணையாக இருந்தாலும், ஆரம்பகட்ட புலனாய்வு உண்டு. அதன் பிறகு தான் ஆழ்ந்த புலனாய்வு விசாரணை நடைபெறும்.

    ரோடு டெண்டரை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் ‘பாக்ஸ்’ டெண்டர் நடைமுறை இருந்தது. இதில் யார்? என்ன தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது கமிட்டிக்கு தெரியும். ஆட்சியாளர்களுக்கு தெரியும். தி.மு.க. ஆட்சியில் பல தவறுகள் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது ஆன்லைன் டெண்டர் நடைமுறையில் உள்ளது. இதில் யார் மனு போடுகிறார்கள் எவ்வளவு தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதில் எந்த தவறுமே நடக்க முடியாது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையை, நேர்மையை, இந்தியாவே பாராட்டுகிறது. மத்திய அரசும் பாராட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். #tenderirregularities #Edappadipalaniswami #CBIenquiry #Ponnaiyan
    சென்னை:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
    இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.

    நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை முழுவதும் முடித்துவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முடித்துவிட்ட நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு.

    நீதிமன்றத்தின் மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. 2009-ல் திமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி ரூபாய் மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு, திமுக ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேட்டில் அப்போதைய திமுக அரசு ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது. விரைவில் திமுக மீது வழக்கு தொடருவோம் என தெரிவித்துள்ளார். #tenderirregularities #Edappadipalaniswami #CBIenquiry #Ponnaiyan
    மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது தொடர்பாக டிராபிக் ராமசாமி இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். #HighCourt #TrafficRamasamy
    சென்னை:

    ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

    அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி கூறியதாவது:-

    ‘மெரினா கடற்கரையில், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்ட பகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ததை எதிர்த்தும், அங்குள்ள மறைந்த முதல்- அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சமாதிகளை கிண்டிக்கு மாற்ற வேண்டும். 3 பேரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.


    இந்த நிலையில் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, என்னுடைய வழக்கை என் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தும் தள்ளுபடி செய்துள்ளது. அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ‘இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவுத்துறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள்’ என்று அறிவித்தார். #HighCourt #TrafficRamasamy
    ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தினகரன் அணியினர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. #OPPanneerselvam #TTVDhinakaran
    புதுடெல்லி:

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தினகரன் அணியினர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின் தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டனர். இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



    இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கவர்னரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.

    இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார். அதன் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

    அதேநேரம் தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. (நடராஜ் (மயிலாப்பூர்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மாணிக்கம் (சோழவந்தான்), மனோகரன் (வாசுதேவநல்லூர்) ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் அவர்களை சேர்க்கவில்லை என தினகரன் தரப்பில் கூறப்படுகிறது)

    இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தங்க தமிழ்செல்வன் உள்பட தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்துசெய்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. கொறடா சக்கரபாணி எம்.எல்.ஏ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இதுதொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மே 10-ந் தேதி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.   #OPPanneerselvam #TTVDhinakaran #Tamilnews 
    துணை முதலைச்சர் ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #SC
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தன. எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் எதிரெதிராக நின்றன. அப்போது அமைக்கப்பட்ட எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பன்னீர் செல்வமும், எடப்பாடியும் ஒரு அணியாக இணைந்த பிறகு, தினகரன் அணி என 3-ம் அணி உருவானது. அந்த அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றுமாறும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.



    இதனைத் தொடர்ந்து தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் தரப்பு போட்டாபோட்டியாக, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். #SC 
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

    அப்போது வக்கீல் சூரிய பிரகாசம் ஆஜராகி, தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று நான் தொடர்ந்தேன்.

    ஐகோர்ட்டு, அதுகுறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில், தமிழக அரசு இந்த பிரச்சினையை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவசர அவரசரமாக ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தமிழக அரசின் இந்த உத்தரவு சரியானது அல்ல. தற்போது அருணா ஜெகதீசன் விசாரணையையும் தொடங்கி விட்டார். இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் தொடரும் வழக்கை இன்று விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்கள்.

    அதற்கு வக்கீல் சூரிய பிரகாசம், அதுவரை நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் இது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்று கூறினார்கள்.

    சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக, பினாமிமுறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #gutkhascam
    சென்னை:

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழல் வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவியில் உள்ள ஊழியர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதுடன், மிக மூத்த வழக்கறிஞரான முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கியை அந்த வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்திருப்பதும் மிகுந்த ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

    ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருக்கும் அரசு ஊழியர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய முதுநிலை வழக்கறிஞரை நியமிக்க எங்கிருந்து பணம் வந்தது என்ற நியாயமான கேள்வியும் அய்யப்பாடும் இயல்பாகவே எழுகிறது.

    இந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஏற்கனவே “குட்கா டைரியில்” குற்றம் சாட்டப்பட்டிருப்பவர். அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகக் காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

    குட்கா வழக்கு சி.பி.ஐ விசாரணைக்குச் சென்றால் சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் குட்கா வழக்கில் வசமாகச் சிக்கிக் கொள்ளநேரிடும் என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ விசாரணையைத் தடுக்கவும், காலம்தாழ்த்தவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது “முகமூடியாக”, பினாமிமுறையில் பயன்படுத்தி, இந்த வழக்கினை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

    ஆகவே சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் அவர்களது பதவியில் எல்லா எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்வரை, குட்கா வழக்கு விசாரணைக்கு அனைத்துவகையான முட்டுக்கட்டைகளையும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் வரிசையாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

    எனவே இவர்கள் இருவரும் தங்கள் பதவியிலிருந்து தாமே முன்வந்து விலகிக்கொள்ள வேண்டும் அல்லது முதலமைச்சர் இந்த இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்பது அவசர அவசியமாகிறது.

    குறிப்பாக குட்கா வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடப்பட்ட உடன், “வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், மேல்முறையீடு செய்யமாட்டோம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அமைச்சர் ஜெயக்குமாரின் அந்தக் கருத்துக்கு மாறாக, இப்போது சுகாதாரத்துறையில் உள்ள ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார் என்றால், வளமானதும் வலிமையானதுமான பெரிய இடத்துப் பின்னணி இல்லாமல், அரசின் முடிவை எதிர்த்து அப்படியொரு நடவடிக்கை எடுக்க ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு எப்படி துணிச்சல் வரும்?

    ஆகவே இந்த மேல்முறையீட்டின் திரைமறைவில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், தமிழகக் காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் முக்காடு போட்டு ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே பார்ப்போர் அனைவருக்கும் தெள்ளித் தெளிவாகத் தெரிகிறது.



    ஆகவே இந்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது “மேல்முறையீடு செய்யப் போவதில்லை” என்று தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட உறுதியான முடிவினைத் தெரிவித்து, குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

    அது மட்டுமின்றி முகுல் ரோகத்கி போன்ற மூத்த வழக்கறிஞரை நியமித்து தனக்காக வாதிட வைக்கும் அளவிற்கு, ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மடியில் கனம் இருப்போர்க்கு வழியில் நிச்சயம் பயம் இருக்கும் என்றுதானே மக்கள் எண்ணிப்பார்ப்பார்கள்!

    இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #gutkhascam
    குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #Gutkha #TNMinister #Jayakumar
    சென்னை:

    தமிழகத்தில் நடந்த குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது.

    இதுபற்றி மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

    இதை ஏற்று குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரி இ.சிவக்குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே சி.பி.ஐ. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அமைச்சர் தனது பினாமி மூலம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

    இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-


    குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதாக கோர்ட்டு கூறியிருக்கிறது. இதில் லஞ்ச ஒழிப்பு துறை மீது எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை.

    மேலும் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. மேல் முறையீடு செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. தனிப்பட்ட முறையில் தான் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து குட்கா ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    அதே சமயம் அன்புமணி ராமதாஸ் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதும் அதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gutkha #TNMinister #Jayakumar
    குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். #Gutkha #supremeCourt #CBI
    புதுடெல்லி:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்யாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.


    எனினும், எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்பதால், தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஏற்கனவே தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. தனது மனுவில் கூறியிருந்தது.

    இந்நிலையில், குட்கா ஊழலில் சிபிஐ விசாரணை தொடர்பான உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் சிவக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #supremeCourt #CBI
    ×