search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disqualify"

    ஆதாயம் பெறும் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதன்மூலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது. #AAP #PresidentKovind #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் நோயாளிகள் நலக் கமிட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தனர். இவ்வாறு ஆதாயம் பெறும் இரட்டை பதவிகளை வகித்து வரும் அவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.



    இந்த மனுக்களை அவர் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார். அவற்றை பரிசீலித்த தேர்தல் கமிஷன், அந்த மனுக்களை விசாரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி நிராகரித்தது. பின்னர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் தேர்தல் கமிஷன் சில பரிந்துரைகளை வழங்கியது.

    இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதற்கான உத்தரவில் அவர் சமீபத்தில் கையெழுத்து போட்டார். இதன்மூலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது.

    முன்னதாக நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தேர்தல் கமிஷன் தகுதிநீக்கம் செய்ததும், அதை ஐகோர்ட்டு ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. 
    துணை முதலைச்சர் ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #SC
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தன. எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் எதிரெதிராக நின்றன. அப்போது அமைக்கப்பட்ட எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பன்னீர் செல்வமும், எடப்பாடியும் ஒரு அணியாக இணைந்த பிறகு, தினகரன் அணி என 3-ம் அணி உருவானது. அந்த அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றுமாறும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.



    இதனைத் தொடர்ந்து தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் தரப்பு போட்டாபோட்டியாக, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். #SC 
    கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ரீராமலு தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த தேர்தலுக்கென நடைபெற்ற அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    பா.ஜ.க. சார்பில் பதாமி மற்றும் மொலகால்முரு தொகுதிகளில் போட்டியிடும் ஸ்ரீராமலு, சுரங்க வழக்கு ஒன்றில் முன்னாள் தலைமை நீதிபதியின் உறவினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வீடியோ காட்சி நேற்று அம்மாநில தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பானது. இது அம்மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, கபில் சிபில், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங், ஆர்பிஎன் சிங், பி.எல். புனியா ஆகியோர் ஸ்ரீராமலுவை தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்த மனுவில், சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்ரீராமலுவுக்கு எதிராக எடுக்க வேண்டும் எனவும், அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #karnatakaelection2018 #Sriramulu #Congress #BJP
    ×