என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பி.எஸ் உட்பட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் டிடிவி தரப்பு மேல்முறையீடு
Byமாலை மலர்26 Jun 2018 7:51 AM GMT (Updated: 26 Jun 2018 7:51 AM GMT)
துணை முதலைச்சர் ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #SC
புதுடெல்லி:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தன. எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் எதிரெதிராக நின்றன. அப்போது அமைக்கப்பட்ட எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் தரப்பு போட்டாபோட்டியாக, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். #SC
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தன. எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் எதிரெதிராக நின்றன. அப்போது அமைக்கப்பட்ட எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பன்னீர் செல்வம் உட்பட 7 எம்.எல்.ஏக்களும் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.
இதையடுத்து, பன்னீர் செல்வமும், எடப்பாடியும் ஒரு அணியாக இணைந்த பிறகு, தினகரன் அணி என 3-ம் அணி உருவானது. அந்த அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனவும், முதல்வரை மாற்றுமாறும் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் தரப்பு போட்டாபோட்டியாக, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தினகரன் தரப்புக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 7 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். #SC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X