என் மலர்
நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"
- எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
- தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
சென்னை:
சென்னையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பட்டியலை பொறுத்தளவில் அதிலுள்ள சிறு பிரச்சனைகளை களைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நின்றார். அதாவது, வாக்களிக்கின்ற உரிமை இருக்கின்ற எவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கக் கூடாது, வாக்களிக்க தகுதி இல்லாத யாரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் தாரக மந்திரமாகும்.
இந்த தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் பாகம் வாரியாக முகவர்களை நியமித்த ஒரே இயக்கம் தி.மு.க. மட்டும்தான். எங்கள் முகவர்கள் களத்திற்கு சென்று வாக்களிக்கின்ற உரிமையுள்ள எவரையும் விடுபடாமல் பாதுகாப்போம். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதே திருத்தப்படாத வாக்காளர் பட்டியலை கொண்டு தான் தேர்தலை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. எதிர்கட்சி தலைவர், வார்த்தைகளை கொட்டுகின்ற போது அந்த வார்த்தைகளை தகுதியான கருத்துக்களை கூறுகின்றதா என்று ஆராய வேண்டும்.
அவர்கள் ஆட்சியில் இருந்த போது இதே வாக்காளர் பட்டியலை வைத்துதானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர் கூறுவதுபோல் போலி வாக்காளர்கள் தி.மு.க. பக்கம் இருந்திருந்தால் அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். தான் திருடி பிறரை நம்பாள் என்ற பழமொழி இந்த கூற்றுக்கு உகந்ததாக இருக்கும்.
திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியதோடு, 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தி காட்டி தமிழ் கடவுள் முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி இந்த ஆட்சியாகும். இது அனைத்தையும் முருகப் பெருமான் உணர்ந்து எங்கள் முதலமைச்சரோடு கை கோர்த்து கொண்டிருக்கிறார். எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று நினைப்பவர்களை இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் எந்த பிரிவினைவாதத்திற்கும் இடம் தர மாட்டார் என்பது சீமானுக்கு தெரியும். தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.
- முதலமைச்சர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
- மாலை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
நெல்லை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லை சென்ற அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகரில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை சென்றார். நெல்லையில் சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து இரவில் ரெட்டியார்பட்டி யில் ரூ.56 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை மின்னும் விளக்கொளியில் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் பங்கேற்கிறார்.
அங்கிருந்தபடி ரூ.72.10 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேம்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.5.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், பாளையங்கோட்டையில் ரூ.3½ கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம், பாளையங்கோட்டையில் ரூ.1.69 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு பகுப்பாய்வு ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும் மேலப்பாளையம் மீரா பள்ளிவாசலில் ரூ.1.70 கோடியில் சமுதாய கூடம் உள்பட ரூ.182.74 கோடியில் முடிவுற்ற 32 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.98 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள அறிவுசார் நூலக கட்டிடம் உள்பட ரூ.357 கோடியில் 11 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
50 புதிய பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 45 ஆயிரத்து 112 பயனாளிகளுக்கு ரூ.101.48 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறாக நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.696 கோடியில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவுக்காக சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும்.
- வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அப்போது மாவட்டக்கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கவிதை - கவிஞர் சுகுமாரன், நாவலாசிரியர் - முருகன், உரைநடை ஆசிரியர் - பாரதிபுத்திரனுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொழி பெயர்ப்பாளர் - கீதா, நாடகப் பிரிவில் கருணா பிரசாத் 2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார்.
கவிதை - கவிஞர் நா.சுகுமாரன், சிறுகதை - ஆதவன் தீட்சண்யா, நாவல் - இரா. முருகன், உரைநடை - பேராசிரியர் பாரதிபுத்திரன் (சா.பாலுசாமி), நாடகம் - கருணா பிரசாத், மொழி பெயர்ப்பு - வ. கீதா , நாடகப் 2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் புத்தக கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதாளர்கள் விவரக்குறிப்பு
நா. சுகுமாரன்
கவிதை, நாவல், மொழிபெயர்ப்புகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பாடுபொருளிலும், வடிவத்திலும் தனித்துவமிக்கக் கவிஞர். கவிஞர் பாப்லோ நெரூதாவின் பாதிப்புடன் உலகத் தரமான கவிதைகளைப் படைத்த படைப்பாளர்.
கோடைகாலக் குறிப்புகள், பூமியை வாசிக்கும் சிறுமி, சுகுமாரன் கவிதை (1954-2019) இன்னொரு முறை சந்திக்க வரும்போது ஆகியவை சிறந்த தொகுப்புகள். குங்குமம் இதழில் பணி புரிந்துள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தீவிர இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆதவன் தீட்சண்யா
நான் ஒரு மது விரோதி, லிபரல் பாளையத்துக் கதைகள், ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் முதலியவை இவரது சிறந்த சிறுகதைகள். சமூகநீதி சார்ந்து சிறந்த கதைகளை மாறுபட்ட மொழிநடையில் எழுதிய படைப்பாளர். 21ஆம் நூற்றாண்டில் இதுவரை எவரும் கையாளாத மொழிநடையில் கதைகளை எழுதியது இவருடைய சிறப்பு. மேலும் இவர் தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இரா.முருகன்
அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே. இரா. முருகன் குறுநாவல்கள் போன்ற நாவல்களைப் படைத்தவர். இதுவரை 29 நூல்களை எழுதியுள்ளார். மாய யதார்த்தக் கதைகளையும் (Magical Realism) எழுதிய வித்தியாசமான எழுத்தாளர். ஆங்கிலத்திலும் இவர் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
- அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.
அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் சாரதா கல்லூரி அருகிலும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பாலம் அருகே மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார். அங்கு மதிய உணவுக்கு பின்னர் நிர்வாகிகளை சந்திக்கிறார்.
தொடர்ந்து மாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் மின்னொளியில் ஜொலிக்கும் அருங்காட்சியகத்தை ஒவ்வொரு கட்டிடமாக சென்று பார்வையிடுகிறார். இதற்காக பிரத்யேக மின்சார வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீண்டும் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.
விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 50 புதிய பஸ் போக்குவரத்து சேவையையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது. வண்ணார்பேட்டை முதல் டக்கரம்மாள்புரம் வரையிலும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. கட்சிக்கொடிகள் பறக்கின்றன. வழிநெடுகிலும் நிர்வாகிகள் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். பாளையங்கோட்டை அரியகுளம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, ரெட்டியார்பட்டி மலைச்சாலை பகுதிகளில் தி.மு.க. கொடிகள், வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர முதலமைச்சர் வந்து செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கின்றன.
- ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.
- கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்.
பேராசிரியர் க.அன்பழகனின் 103-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
கழகம் எனும் கலத்தைப் புயல்கள் தாக்கியபோதெல்லாம் தலைவர் கலைஞரின் பக்கத்துணையாய் நின்று கரைநோக்கிச் செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள்!
என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.
கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்த பேராசிரியர் பெருந்தகை ஊட்டிய திராவிட இனமான உணர்வோடு முன்செல்கிறேன், கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார்.
- அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார். அதில் கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டி தேர்தல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும், உள்கட்சி விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலசப்பாக்கம், அரக்கோணம், சோளிங்கர் ஆகிய 3 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியாக (ஒன் டூ ஒன்) வரவழைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதுவரை 49 நாட்களில் 112 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கள நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.
- சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
- கலசப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கலசப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
- ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது பெண் தான். என் வெற்றிக்கு காரணமும் பெண்தான்.
- பெண்கள் முன்னேறினால் அந்தக் குடும்பம் சிறப்பாக இருக்கும்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* என்னுடைய வெற்றிக்கு பின் இருப்பது எனது மனைவிதான்.
* ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் இருப்பது பெண் தான். என் வெற்றிக்கு காரணமும் பெண்தான்.
* மிசாவில் இருந்தபோது என்மனைவி கோபித்துக்கொண்டு அப்செட்டாகி ஏதாவது முடிவு எடுத்து இருந்தால் என் நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்து பாருங்க... எவ்வளோ கொடுமைகள் எனக்கு வந்தபோதும், என்னை அவர் ஊக்கப்படுத்தியதால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன்.
* ஓராண்டு காலம் மிசாவில் சிறையில் இருந்தபோது பொறுமையாக இருந்தவர் எனது மனைவி.
* பெண்கள் முன்னேறினால் அந்தக் குடும்பம் சிறப்பாக இருக்கும்.
* பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம்.
* பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்றால் 16 குழந்தைகள் இல்லை 16 செல்வங்கள்.
* பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என புதுமணத் தம்பதிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நான் நினைத்தால் கூட அமைச்சர் சேகர்பாபு விடமாட்டார்.
- கிண்டியில் உள்ளதைவிட கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே புது எனர்ஜி, உற்சாகம் எனக்கு வந்துவிடுகிறது.
* ஒரு மாவட்டத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை செல்லும் நான் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை வருகிறேன்.
* கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நான் நினைத்தால் கூட அமைச்சர் சேகர்பாபு விடமாட்டார்.
* பல மாவட்டங்களில் உற்சாகமான வரவேற்பு அளித்தாலும் கொளத்தூர் தொகுதியில் தரும் வரவேற்பு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.
* எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளையாக குறிப்பாக ஒரு நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன்.
* மணமக்களோடு இந்த விழாவில் பங்கேற்று இருப்பது உற்சாகத்தை தருகிறது.
* அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
* கிண்டியில் உள்ளதைவிட கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது.
* மினி ஸ்டேடியம், வண்ண மீன் விற்பனை மையம், பாலங்கள், அரசு மருத்துவமனை தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது.
* கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனை தரம் உயர்த்தி இருக்கிறோம்.
* கொளத்தூர் தொகுதிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதிக மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அதிக நூலகங்கள், அதிக மருத்துவமனைகள் உள்ள தொகுதி கொளத்தூர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- டக்கரம்மாள்புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசனபூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
நெல்லை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல், கிறிஸ்துமஸ் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து நிர்வாகிகளின் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே மலையை கடந்து அங்குள்ள விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை யூனியன் முன்னாள் சேர்மனும், தி.மு.க. பாளை தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளருமான கே.எஸ். தங்கபாண்டியன் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து நான்குவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசனபூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து விழா முடிந்ததும் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
அதன்பின்னர் மறுநாள்(21-ந்தேதி) காலை 9.30 மணிக்கு ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அங்கிருந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதற்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் தயாராகி வருகிறது. அங்கு மேடையில் தற்காலிக கழிப்பறைகள், பயனாளிகள், பொதுமக்கள், நிர்வாகிகள் அமருவதற்கு சேர்கள், அவர்களுக்கு மின்விசிறி, தற்காலிக கழிப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவரது வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதலமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் சாலைகளில் முழுவதுமாக வரவேற்பு பேனர்கள், கட்சி கொடிகள் அமைக்க ஏற்பாடுகள் தீவிமாக நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த பல மாதங்களாக சேதம் அடைந்து காணப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை சாலை, வண்ணார்பேட்டை புறவழிச்சாலை, செல்லப்பாண்டியன் சிலை பகுதி சாலைகளை சீரமைக்கும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் இருந்த மணல் குவியல்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டது. இதனால் புறவழிச்சாலை, டக்கரம்மாள்புரம் செல்லும் சாலைகள் பளிச்சென காட்சி அளிக்கிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார்.
- பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னை:
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார். பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து, பெரியார் நகரில் அமைய உள்ள அமுதம் அங்காடி கட்டும் பணிக்கும், ரூ.17.47 கோடி செலவில் கட்டப்பட உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.






