என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர்"
- ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி தான் சென்னை திரும்புகிறார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லிக்கு தீடீர் பயணம் மேற்கொள்கிறார்.
நாளை காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஆளுநர் 16ம் தேதி தான் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.
மேலும், தமிழக முதலமைச்சரின் பிரந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
- பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிப்பு.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளார்.
- சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
- விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார்.
செஞ்சி:
சென்னையை சேர்ந்த 9 பேர் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஆட்டோவில் வந்தனர். கிரிவலம் முடிந்து தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அருகில் இருந்த தங்களின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செஞ்சி அருகேயுள்ள கப்பை என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜ், சத்யா ஆகியோர் உட்பட உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். யுவராஜின் மகன்கள் பிரதீஸ்வரன் (வயது 11), ஹரி பிரசாத் (வயது 7) ஆகியோர் கிணற்றில் மூழ்கி இறந்து போனார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் படுகாயம் அடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விபத்தில் இறந்து போன 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், தாசில்தார் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.
- 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியவில்லை.
- பல்வேறு தொகுதிகளில் காங்கிரசார் வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சுதந்திரம் பெற்ற காலம் முதல் நீண்ட காலமாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்து வருகிறது.
இதனால் காங்கிரசின் கோட்டை என புதுவை கருதப்பட்டது. 2016-ம் ஆண்டு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
ஆனால் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் 2021-ல் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் தோல்வியை தழுவினர். 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியவில்லை.
இதற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பிரமுகர்கள் வெளியேறி பா.ஜனதா மற்றும் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.
தற்போது பா.ஜனதாவில் உள்ள அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி முக்கிய பிரபலங்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள்தான். சமீபத்தில் பா.ஜனதாவின் தலைவராக செல்வகணபதி எம்.பி. பொறுப்பெற்றார்.
அவர் புதிய நிர்வாகிகளை கட்சியில் நியமித்து வருகிறார். இதில் பா.ஜனதாவுக்கு மாறிய காங்கிரசாருக்கு பதவிகள் கிடைக்கவில்லை. இது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் பல்வேறு தொகுதிகளில் காங்கிரசார் வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் பணிகளை பாதிக்கும் என கருதப்படு கிறது.
இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள வைத்திலிங்கம் எம்.பி. கட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு கட்டமாக கட்சியிலிருந்து வெளியேறிய காங்கிரசாரை மீண்டும் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளை காங்கிரஸ் பக்கம் இழுக்க தூது விட்டு வருகின்றனர்.
- கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
- புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்.
கடந்த 2023ம் ஆண்டு 14ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில், செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.
- வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு.
- திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் இன்று புதிய குடிநீர் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் , 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1362 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு. அது திருப்பூரை மனதில் வைத்துதான் சொல்லப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு பெரியார் மண்ணான ஈரோட்டில் ரூ.310 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தேன். இன்று விழாவில் பங்கேற்க வரும் போது மகளிர் சுய உதவி குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். எனது இல்லத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரித்த பொருட்கள்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட மகளிர் சுய உதவிக்குழு பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்.
சட்டமன்றத்தில் பேசும் போது உறுப்பினர்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார். ஏனென்றால் அந்த அளவுக்கு பொருட்கள் தரமாக இருப்பதுதான். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்-முறையாக திருப்பூர் வந்துள்ளேன். திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.
தமிழகத்தின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக முதல்வர் உள்ளார். மாநில நிதி சுமையை மீறி திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். மற்ற மாநிலத்தவர்கள் ஜி.எஸ்.டி என்பது என்னவென்று தெரியாமல் படித்து கொண்டிருந்த போது அதன் பாதகங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்கள் திருப்பூர் மக்கள் தான்.
நாம் மத்திய அரசுக்கு 5 ஆண்டுகளில் கொடுத்த வருவாய் ரூ. 6 லட்சம் கோடி. ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி கொடுத்தது ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி மட்டுமே. 1 ரூபாய்க்கு 23 பைசா மட்டுமே தருகின்றனர்.
அமைச்சர் கே.என் நேரு கழகத்திற்கு மட்டும் முதன்மை செயலாளர் அல்ல. மக்களின் களப்பணியில் முதன்மையானவர். திராவிட இயக்கம் , திராவிட மாடல் அரசு அன்றைய தேவையை சிந்திப்பது மட்டுமல்ல. எதிர்கால தேவையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2024க்கு மட்டுமல்ல 2040 ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திருப்பூருக்கு குடிநீர் உள்ளிட்ட திட்டத்தை வழங்கியுள்ளோம்.
தொழில்துறையினர் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநாட்டு அரங்கம் மிகப்பெரிய அளவில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் திருப்பூர் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
மகளிருக்கு உதவித்தொகை , அரசு பேருந்தில் இலவச பயணம் , கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை , இல்லம் தேடி கல்வி என அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர். தெலுங்கானாவில் இருந்து வந்து நம் திட்டங்களை பார்த்து செல்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையிலும் நாம் சாதித்து வருகிறோம். இதற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகிறது.
இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை தருகிறது. பாராட்டும் நன்மதிப்பும் எட்டு திக்குகளில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நீங்கள் பயனாளிகள் அல்ல. இந்த அரசின் பங்கேற்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முதல்வரின் முகமாக இங்கு இருக்கிறீர்கள். அரசின் திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார்.
- சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரம் போத்திரமங்கலத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கேட்டறிந்தார்.
அப்போது கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக கொளஞ்சி என்ற மூதாட்டி அமைச்சரிடம் அழுத படி முறையிட்டார். அவரை அழைத்து கண்களை துடைத்து விட்டு, அழ வேண்டாமென கூறிய அமைச்சர், அதிகாரிகளை அழைத்து இந்த இடத்தை முறையான அளவீடு செய்து, பின்னர் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமாறு உத்தரவிட்டார்.
மேலும் அதே பகுதியில் வைரம் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமானதை கண்ட அமைச்சர், உடனடியாக ரூ.50 ஆயிரம் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். பொதுமக்கள் கூறிய புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமரலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.
- தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும்.
- சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
இதில், கனிமொழி எம்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்த ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக் கழகம், சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வாக்குச்சாட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது.
- இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கோவில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக, 260 கோவில்களுக்கு 315 கையடக்க கருவிகளை மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்து உள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கினார்.
- தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி இன்று முதல் தொடங்கியது.
புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 47-வது புத்தகக் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றி வருகிறார்.
தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறையாற்றுகிறார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் வரும் ஜனவரி 21ம் தேதிவரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.
- வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார்.
- பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.
திருத்தணி:
மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த 4-ந் தேதி இரவு திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 12 மீட்டர் நீளத்திற்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் சரவண பொய்கை மலை படிக் கட்டுகள் வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருகி றார்கள். மலைப்பாதையில் வாகனங்கள் மேலே செல்லாதவாறு போலீசார் இரும்பு தடுப்பு கள் அமைத்து உள்ளனர். சேதம் அடைந்த மலைப் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் வேக மாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தீபா, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜி உடலில் பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டதால் உடல் எடையும் குறைந்தது.
இதனால் கடந்த 15-ந்தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கணையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதற்கு சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் இன்னும் சில நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடலில் பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். ரத்த பரிசோதனை, எக்கோ, எச்ஆர்சிடி சோதனை, வயிற்றுக்கான யுஎஸ்ஜி சோதனை, கழுத்து வலி மற்றும் முதுகெலும்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல், வயிற்று வலிக்கான சோதனை, எம்ஆர்சிபி, மூளைக்கான எம்ஆர்ஐ, எம்ஆர்வி, எம்ஆர்ஏ உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
மூளைக்கான எம்ஆர்ஐ பரிசோதனையில் வலது புறத்தில் க்ரோனிக் லக்யுனே இன்ஃபார்ட் கண்டறியப்பட்டுள்ளது.
முழு முதுகெலும்புகளிலும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டது. முதுகெலும்பில் வீக்கம் காணப்படுகிறது.
எம்ஆர்சிபி சோதனையில் பித்தப்பையில் பல பாலிப்கள், பித்தப்பை கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது நாளடைவில் உணவு உட்கொள்வதை குறைக்கும் என்றும் இதனால் உடல்நிலை பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவ அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ரத்த கொழுப்பை அதிகப்படுத்தி மாரடைப்பு ஏற்படும்.
உரிய மருந்துகளை முறையாக எடுக்கவில்லை என்றால் மூச்சுத்திணறல், சிறுநீரக செயலிழப்பு, கணைய அழற்சி, ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
செந்தில் பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது.
இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைக்கு உரிய சிகிச்சை எடுக்கம் வகையில் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்