search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு"

    • சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள்.
    • பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.

    நாகர்கோவில் : கன்னியாகுமரிக்கு நவம்ப ர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இந்த சீசனையொட்டி கன்னியா குமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனி யாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு மொத்தம் 122 சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் 34 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. மீதிஉள்ள 88 கடைகள் 22-ந்தேதி மறு ஏலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையில் கன்னியா குமரி சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள பகுதியிலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு, விவேகானந்தா ராக் ரோடு பகுதியிலும் சீசன் கடை ஏலம் எடுத்த வியா பாரிகள், ஐகோர்ட்டு அறிவுரையின்படி கடைகள் போன்று கட்டாமல் நடை பாதையில் திறந்த வெளி யில் சீசன் கடைகளை வைத்துவியாபாரம்செய்ய தொடங்கிஉள்ளனர். இந்த சீசன் கடைகளில் இரவு-பகலாக வியாபாரம் நடந்து வருகிறது.

    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
    • ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும்.

    சென்னை:

    நடிகை ஜெயபிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

    இதுகுறித்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    கீழ் கோர்ட்டு தண்டனையை நிறுத்திவைக்க கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஜெயபிரதா உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.37 லட்சத்து 68 ஆயிரத்தை செலுத்த முடியுமா? என்று ஜெயபிரதா தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    ஆனால், ரூ.20 லட்சம் செலுத்துவதாக ஜெயபிரதா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கு இ.எஸ்ஐ. தரப்பு வக்கீல் டி.என்.சி.கவுசிக், எதிர்ப்பு தெரிவித்துவாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், "கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜெயபிரதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.20 லட்சத்தை 15 நாட்களுக்குள் கீழ் கோர்ட்டில் மனுதாரர்கள் நேரில் ஆஜராகி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின்னர் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கீழ் கோர்ட்டு நிறுத்திவைக்கலாம். இல்லை யென்றால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடாது" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பிறப்பித்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் பொது நலமனு ஒன்விறை தாக்கல் செய்திருந்தார்.அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், பூச்சிக்கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகளுக்கும், மகப்பேறு சிகிச்சைகளுக்கும் இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத்தான் நம்பி உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மிகவும் பழுதடைந்து காணப்படு கிறது. மேலும் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய செவிலி யர்கள் கூட மருத்துவ மனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆர்.எஸ். மங்களம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை செய்த போது மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மருத்துவ மனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மருத்துவ மனை கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் பூச்சு, பெயின்ட் வேலைகள் நடந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அது தொடர்பாக பதில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தர விட்டனர்.

    அதன்படி குடும்ப நல சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் 1989-ம் ஆண்டிலிருந்து ஆர்.ஸ் மங்கலம் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.தற்போது சேதமடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

    மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவசர தேவை கருதி பொது சுகாதார பிரிவு கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சுகாதார நிலை யத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, படுக்கை வசதியுடன் கூடிய உள் நோயாளிகள் பிரிவு இ.சி.ஜி. எக்ஸ்ரே மற்றும் பிரசவ வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
    • வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது

    மதுரை

    அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதான வர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் ஒர்க் ஷாப் ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை 2-வது மாஜிஸ் திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த–தாவது:-

    நான் எனது கணவருடன் சேர்ந்து இதே பகுதியில் டயர் வியாபாரம் செய்து வருகிறேன். சட்டப்படிப்பும் படித்து வருகிறேன். எனது கணவர் சரவணன் மாற்றுத் திறனாளி. அவரின் சகோ–தரர் மது பாண்டியன் எங்கள் கடையை சட்ட–விரோதமாக அபகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருகிறார்.

    அவர் கொடுத்த பொய்யான புகார் குறித்து முறை–யாக விசாரிக்காமல் என்னை போலீசார் கைது செய்தனர். உரிய விசாரணை நடத்தாமல் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை பின் பற்றாமலும் என்னை கைது செய்ததற்காக போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் என் மீது மற்றொரு பொய்யான புகார் பெற்று வழக்கு பதிவு செய்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

    எனவே திலகர் திடல் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரே–சன், சொர்ண ராஜா ஆகி–யோர் மீது உரிய நடவ–டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி–யிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி கல்யாண மாரிமுத்து விசா–ரித்தார். முடிவில், மனுதா–ரரை கைது செய்ததில் உரிய வழிகாட்டுதல்களை பின் பற்றவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் மீதான புகார் குறித்து திலகர் திடல் உதவி போலீஸ் கமிஷனர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை குறித்து ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தர–விட்டார்.

    • கோவிலுக்கு நன்கொடை அளித்தவருக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தை சேர்ந்த சின்னன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கண்டனூர் கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டும், திருவிழாக்காலங்களிலும் தனி நபருக்கு எந்த விதமான சிறப்பு மரியாதை கோவில் சார்பில் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கோவில் நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில், பொது நலன் கருதி ஒரு விசயத்தை தெளிவு படுத்த வேண்டும்.

    ஒரு நபர் கோவிலுக்கு தனது பங்களிப்பை, நன்கொடையாக வழங்கியிருந்தால் அவர்களுக்கு, கோவில் சார்பில் சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • மதுரை ஆதீன மட சொத்துகள் ஐகோர்ட்டு உத்தரவுபடி மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
    • பிரதமர் அனைத்து ஆதீனங்களையும் சந்தித்தார் அவரின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது.

    மதுரை

    மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் பழமையான திருஞான சம்பந்த சுவாமி கள் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் அருகில் இருந்த ஆதீனத்திற்கு சொந்தமான 3,200 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதி அமைக்கப் பட்டது. அந்த இடத்தை மீட்கும் பணிகளில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி மதுரை ஆதீனத்தின் முன் பகுதியில் சண்முகம் மற்றும் இளவரசன் ஆகியோரிடம் இருந்து 3,200 சதுர அடி இடம் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனி டையே மதுரை ஆதீனத்தின் முன்புறம் 3,200 சதுர அடி இடத்தினை ஆக்கிரமித்த தற்காக 2 வாரத்திற்குள் ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கோர்ட்டு உத்தரவை அவர்கள் நிறைவேற்றா ததால் தங்கும் விடுதிக்கு சீல் ைவக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் மதுரை ஆதீனம் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடம் சட்ட ரீதியாக மீட்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள ஆதீனத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுப்போம்.

    மேலும் ஆதீனத்திற்கு சொந்தமாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள 1,100 ஏக்கர் இடத்தில் விவசாய பல்கலைகழகம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.பிரதமர் அனைத்து ஆதீனங்களையும் சந்தித்தார் அவரின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது.

    • விவசாய நிலத்தை சட்டப்படி கையகப்படுத்தாமல் சாலை அமைத்தது ஏன்?
    • விருதுநகர் கலெக்டரிடம் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர்கள் ரமேஷ், மும்மூர்த்தி, காராளம். இவர்கள் 3 பேருக்கும் அரசகுளம் கிராமத்தில் விவசாய பட்டா நிலங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித அறிவிப்பு நோட்டீசும் வழங்காமல் விவசாய நிலத்தின் மீது மாவட்ட நிர்வாகம் சாலை அமைத்தது. இது தொடர்பாக 3 பேரும் மாவட்ட நிர்வா கத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.

    இதையடுத்து அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். அதில், எங்களது விவசாய நிலத்தில் மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்ன றிவிப்பும் செய்யாமல் சாலை அமைத்துள்ளது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தலா ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மாவட்ட கலெக்டர் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அப்போது நீதிபதிகள் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கையகப் படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் எப்படி சாலை அமைத்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை வருகிற 20 -ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • பட்டா மாறுதல்களுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்ற பிறகு கையெழுத்திடுகின்றனர்.
    • உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டில் அழகப்பன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா அமராவதி புதூர் கிராமத்தில் எனது விவசாய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2019-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆவணங்களின் அடிப்ப டையில் ஆக்கிரமிப்புகளை உரிய காலத்திற்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தனர்.

    நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர், அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    நீதிபதிகள் கலெக்டரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் அது தொடர்பாக ஏன்? எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்.

    பல்வேறு வழக்குகளிலும் இதுபோன்ற நிலையே நீடிக்கின்றன. இதனால் கடந்த 100 நாட்களில் 600-க்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால் சட்டத்தின் அடிப்படையில் கூடுதல் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் கால அவகாசம் வழங்க தயாராக உள்ளது. ஆனால் அவ்வாறாக ஏன்? எந்தவித மனுவும் தாக்கல் செய்வதில்லை.

    இத்தகைய செயல்கள் ஆக்கிரமிப்பாளர்களை அதிகாரிகள் ஊக்குவிக்கும் விதமாகவே அமைகிறது. மேலும் ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்க ளில் பட்டா மாறுதல் செய்வதற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டே அதிகாரிகள் பட்டா மாறுதல் செய்கின்றனர். இதற்காக தனி புரோக்கர்கள் செயல்படுகின்றனர் என நீதிபதிகள் வேதனை தெரி வித்தனர்.

    லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் நீதிமன்ற உத்தரவை சட்டத்தின் அடிப்படையில் எப்படி பின்பற்ற வேண்டும் என அனைத்து தாசில்தாருக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த வேண்டும்.

    அதன் பின்பும் முறையாக நடவடிக்கை எடுக்காத தாசில்தார் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் தரப்பில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி மாவட்ட கலெக்டர் மீதான அவ மதிப்பு வழக்கினை முடித்து வைத்தார். மனுதாரரிடம் மேலும் கோரிக்கை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


    • யூ-டியூபர் மீதான வழக்கு மதுரை கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
    • பீகார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இது வடமாநில தொழிலாளர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சட்டம்- ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

    இதுகுறித்து பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த யூ-டியூபர் மணிஷ் காஷ்யப் மீது மதுரை பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்தனர். அதன் பிறகு அவர் கடந்த 30-ந் தேதி மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    நீதிபதி டீலாபானு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது மனீஷ் காஷ்ய ப்பை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்து 3-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    யூ-டியூபர் மனீஷ்காஷ்யப் பின் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்துவதாக இருந்தது. இன்று விடுமுறை என்பதால் தாமரை தொட்டி பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில் மனீஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப் பட்டார்.

    அப்போது அவரை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனீஷ் காஷ்யப் விசா ரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு சில கேள்வி களுக்கு மட்டும் பதில் அளித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. அவரை பீகார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டி யுள்ளது. மனீஷை மேலும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    கோர்ட்டு விடுமுறை என்பதால் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலையில் வருகிற புதன்கிழமைக்கு (5-ந் தேதி) வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

    • குருந்தன் கோடு கிராம சர்வேயராக இருந்த ஸ்டாலின் என்பவர், ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்
    • 1 வரு டம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் வில்லுக் குறி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் ( வயது 53). விவசாயி.இவர் வில்லுக்குறியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாற்றுவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு விண்ணப்பம் செய்தி ருந்தார். அப்போது குருந்தன் கோடு கிராம சர்வேயராக இருந்த ஸ்டாலின் என்பவர், ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோசப் ராஜ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் கடந்த 7.7.2007 அன்று, ஜோசப் ராஜ் லஞ்ச பணத்துடன் ஸ்டாலினை சந்தித்து, அந்த பணத்தை அளித்தார். அந்த பணத்தை ஸ்டாலின் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 8.8.2016 அன்று ஸ்டாலினை விடு தலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் ஸ்டாலினுக்கு 1 வரு டம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் ரவி ஆஜர் ஆனார்.

    • 2017-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.
    • இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் வாங்கவேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்டத்தகுந்தது.

    மதுரை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:

    தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்டத் தகுந்தது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகிலுள்ள பிற மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டு உள்ளன.

    கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடைவதில்லை. இதற்கு மாற்றாக, தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தும் பலன் இல்லை. எனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என

    கோரியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. நன்மை தருவதும் கூட. இதுதொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்து உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

    அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது சம்பந்தமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மனுதாரர் முன்கூட்டியே யூகத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர், தமிழக வேளாண்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    ×