search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரியை சட்டவிரோதமாக கைது செய்த சம்பவம்
    X

    வியாபாரியை சட்டவிரோதமாக கைது செய்த சம்பவம்

    • திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் ஒர்க் ஷாப் ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை 2-வது மாஜிஸ் திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த–தாவது:-

    நான் எனது கணவருடன் சேர்ந்து இதே பகுதியில் டயர் வியாபாரம் செய்து வருகிறேன். சட்டப்படிப்பும் படித்து வருகிறேன். எனது கணவர் சரவணன் மாற்றுத் திறனாளி. அவரின் சகோ–தரர் மது பாண்டியன் எங்கள் கடையை சட்ட–விரோதமாக அபகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருகிறார்.

    அவர் கொடுத்த பொய்யான புகார் குறித்து முறை–யாக விசாரிக்காமல் என்னை போலீசார் கைது செய்தனர். உரிய விசாரணை நடத்தாமல் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை பின் பற்றாமலும் என்னை கைது செய்ததற்காக போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் என் மீது மற்றொரு பொய்யான புகார் பெற்று வழக்கு பதிவு செய்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

    எனவே திலகர் திடல் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரே–சன், சொர்ண ராஜா ஆகி–யோர் மீது உரிய நடவ–டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி–யிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி கல்யாண மாரிமுத்து விசா–ரித்தார். முடிவில், மனுதா–ரரை கைது செய்ததில் உரிய வழிகாட்டுதல்களை பின் பற்றவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் மீதான புகார் குறித்து திலகர் திடல் உதவி போலீஸ் கமிஷனர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை குறித்து ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தர–விட்டார்.

    Next Story
    ×