என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வீடியோ அனுப்பியதால் போலீஸ்காரர் பணிநீக்கமா?
- முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வீடியோ அனுப்பியதால் போலீஸ்காரர் பணிநீக்கமா? அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பிருந்தனர்.
- உயர் அதிகாரியை நான் திட்டியதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராகிம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை ஆயுதப்படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தேன். கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரத்திடம் எனக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க கோரி மனு அளித்தேன். இதற்கு போலீஸ் கமிஷனரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கூறி சாதாரண விடுப்பு வழங்கினார்.
இது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை வீடியோ வெளியிட்டேன்.
அது சமூக வலை தளங்களில் வைரலானது. இதையடுத்து என்னை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. எனது தரப்பு கருத்துகளை கேட்காமலேயே இறுதி அறிக்கை தாக்கல் செய்து என்னை நிரந்தரமாக நீக்கிவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல.
ஆயுதப்படை துணை போலீஸ் கமிஷனர் சண்முகசுந்தரம், டிக்-டாக் வீடியோக்களை சமூக ஊடகங்களில் போலீஸ் சீருடையில் வெளியிட்டார்.
அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் எச்சரித்து அதிகாரிகளால் மன்னிக்க ப்பட்டது. இதுபோல பல போலீஸ்காரர்கள் மன அழுத்தத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் சில போலீஸ்காரர்களை மட்டும் டி.ஜி.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
நான் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்த வீடியோவை வெளியிட்டதாகவும், முக கவசம் அணியவில்லை என்று கூறியும் என்னை பணி நீக்கம் செய்துள்ளனர்.
உயர் அதிகாரியை நான் திட்டியதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்னை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்