search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி"

    • சிறுமி கொலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விளக்கம் அளித்தார்
    • வாட்ஸ்-அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை டிஜிபி சீனிவாஸ், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார்.

    இவ்வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநர், டிஜிபி-யிடம் கேட்டறிந்தார்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க டிஜிபி-யிடம் துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்.

    • 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை.
    • ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது.

    பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் நிலையில், சொந்த ஊர் மற்றும் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வரும் பத்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவு.

    தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.

    நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.

    ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது சந்தித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை.
    • அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம், தேர்தல் விதிமுறையை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    காங்கிரஸ் கட்சி வெற்றி அதிகாரப்பூர்வமாக ஆட்சியை பிடிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தெலுங்கானா டி.ஜி.பி. அஞ்சனி குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இவரது நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயல் என தேர்தல் கமிஷன் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனால் ஐபிஎஸ் அதிகாரி ரவி குப்தா கூடுதலாக டிஜிபி பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த நிலையில் அஞ்சனி குமார் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

    இவரது சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப்பின் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான இடத்தை பிடித்தது. பின்னர், ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம் என்று கருதிய தேர்தல் ஆணையம், டிஜிபி-யின் செயல் தெளிவான தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    • தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1100 காவலர்கள் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை விடுத்துள்ளார்.

    பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் மற்றும் இசிஆர் சாலைகளில் போக்குவரத்தை சரி செய்ய 300 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

    தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1100 காவலர்கள் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயிலில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை முன்னிட்டு 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவர் கைது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.

    இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை வருநதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சற்று நேரம் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதன் எதிரொலியால், குடியரசு தலைவர் சென்னை வருகையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழும்பியது.

    இந்நிலையில், குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என டிஜபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    • வெல்பேர் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம்.
    • போலீசார் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலர்களின் நலன் காப்பதற்காக 'வாட்ஸ்அப்' குழுக்களை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து இந்த வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் காவலர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பதிவு செய்து தமிழ்நாடு போலீஸ் வெல்பேர் என்ற பெயரிலான இந்த குழுவை தங்களது பகுதிக்கு ஏற்ப அதிகாரிகள் மாற்றம் செய்து செயல்படுத்த வேண்டும்.

    உதாரணமாக கீழ்ப்பாக்கம் பகுதி வெல்பேர் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம்.

    இதில் போலீசார் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது.
    • சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை:

    முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யும், தாம்பரம் போலீஸ் கமிஷனருமான ரவியின் பெயரில் போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது. இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.

    இதற்கு முன்னரும் இதே போன்று போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் பக்கங்கள் தொடங்கப்பட்டு பலர் மோசடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார்.
    • மெரினா கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை டிரோன் மூலம் வழங்கி உதவ முடியும்.

    சென்னை:

    சென்னை போலீசில் புதிதாக டிரோன் சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் இதற்காக தனி பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த டிரோன் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின் பேரில் இந்த டிரோன் பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தொழில், சட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படும் 9 டிரோன்கள் இந்த பிரிவில் பயன்படுத்தப்பட உள்ளன. 3 விதமான பயன்பாட்டில் இவை இருக்கும்.

    மெரினா கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை டிரோன் மூலம் வழங்கி உதவ முடியும். அவசர காலத்தில் குற்றவாளிகளை பிடிப்பதற்கும், தொலை தூரங்களில் உள்ள இடங்களுக்கு சென்று பயன்படும் வகையிலும் டிரோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் உள்ள பட்டதாரிகள் என்ஜினீயர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த பிரிவில் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த டிரோன் பிரிவு போலீசுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

    இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.

    நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்ட டிரோன் பிரிவு தொடக்க விழாவில் கூடுதல் கமிஷனர்கள் பிரேமானந்த் சின்கா, லோகநாதன், இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, துணை கமிஷனர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
    • குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது போக்சோ, வீடு புகுந்து திருட்டு, கார் திருட்டு, உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உள்ள செல்போன் டவரில் திடீரென அவர் ஏறினார்.

    பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும் இதற்காக செல்போன் டவரில் ஏறியதாகவும் கூறி அவர் கூச்சலிட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த நாமக்கல் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு கீழே இறக்கி கொண்டு வந்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு உற்றார், உறவினர் யாரும் கிடையாது. டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.

    2-10-2017 அன்று அவர் சேலம் மத்திய சிறைக்கு வந்தார். அப்போது நான் ஒரு கார் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தேன்.

    அன்று அவர் எங்கள் முன் பேசிய வார்த்தைகளும் செயலும் என் உள்ளத்தில் அனைவரின் அன்பின் பிரதிபலிப்பை கண்டேன். குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.

    நான் திருந்துவதற்கு காரணம் நீங்கள் தான். மாணவர்கள் முயற்சி பண்ணுங்க என நீங்க சொன்னீங்க. இப்பொழுது என்னுடைய முயற்சி உங்களை பார்ப்பது மட்டுமே.

    உங்கள் பேச்சைக் கேட்டு நான் தற்போது திருந்தி விட்டேன். நான் இதற்கு முன்பு பலமுறை தங்களை பார்க்க வேண்டும் என முயற்சி செய்தேன்.

    வருடப்பிறப்பு அன்று நீங்கள் கோவிலுக்கு சென்ற போது உங்களை தூரத்திலிருந்து பார்த்தேன்.ஆனாலும் தொடர்ந்து உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால் தான் தொடர்ந்து முயற்சியை கொண்டுள்ளேன்.

    இந்த கடிதத்தை யார் பார்த்தாலும் அவரிடம் தெரியப்படுத்துங்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தமிழக டி.ஜி.பி.-ஐ பார்க்க வேண்டும் என பிரபல கொள்ளையன் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததால் நமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது.
    • துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    வண்டலூர்:

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. நாளை வரை இந்த போட்டிகள் நடை பெறுகின்றன.

    இதனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை மற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    • கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
    • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை தேடும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்றது.

    தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்ததை அடுத்து தமிழ் நாடு முழுக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அந்த வகையில், கடந்த 2 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,558 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது."

    "4 ஆயிரத்து 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16 ஆயிரத்து 493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன."

    "2023 ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி.ஜி.பி. சைக்கிள் வாங்கி தருவார் என்று 3 வருடமாக உவேஷ்அல்தாப் காத்திருந்திருந்து உள்ளான்.
    • சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.

    கன்னியாகுமரி:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கொரானா கால கட்டத்தில் தனது மகன் உவேஷ் அல்தாப் (வயது 13) மற்றும் மகளுக்கு ஆன்லைன் வகுப்பு படிக்க செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். அவர்கள், அந்த செல்போனில் யூடியூப். மூலம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் மோட்டிவேஷனல் பேச்சுகளை பார்த்திருக்கின்றனர்.

    இதுகுறித்து உவேஷ் அல்தாப், தனது தாயாரிடம் கூறுகையில், குழந்தைகள் பப்ஜி கேம் விளையாட கூடாது. அப்படி விளையாடாமல் இருந்தால் சைக்கிள் வாங்கித்தருவேன் என்று ஒரு வீடியோவில் டி.ஜி.பி. குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளான். மேலும் டி.ஜி.பி. சைக்கிள் வாங்கி தருவார் என்று 3 வருடமாக உவேஷ்அல்தாப் காத்திருந்திருந்து உள்ளான்.

    இந்த நிலையில் கடந்த வாரம் மணிமுத்தாறு ஆய்வுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்த உவேஷ் அல்தாப், எனக்கு எப்போது சைக்கிள் வாங்கி தருவீர்கள் என்று கேட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.

    இதை தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் 8-ம் வகுப்பு மாணவனான உவேஷ் அல்தாப்புக்கு சென்னை பெருநகர போலீஸ் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் சைக்கிள் பரிசளித்தனர்.

    ×