search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.
    • அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை.

    விவிபாட் வழக்கு, சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கில்,  உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், இவிஎம், விவிபாட் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.

    தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட இயந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மேலும், கண்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன.

    இவற்றை தாமாக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதாடுகையில், " மைக்ரோ கண்ட்ரோல் யூனிட் பிளாஷ் மெமரியை கொண்டுள்ளதால் மீண்டும் புரோகிராம் எழுத முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.

    விவிபாடில் பிளாஷ் மெமரி இருக்கும்போது முறைகேடு செய்வதற்கான புரோகிராம் இருக்க முடியும். " என்றார்.

    அப்போது, "தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். இதுவரை முறைகேடு நடக்கவில்லை. அரசியலமைப்பு சாசனத்தின் அங்கமாகவுள்ள தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. " என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - நிர்மலா சீதாராமன்
    • பாஜக தோற்றுவிட்டால் அவர்களுக்கு இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள் - காங்கிரஸ்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

    "வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் எம்.பி, "தேர்தல் பத்திர நன்கொடை முறையை திரும்பக் கொண்டு வருவோமென நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால், இந்த தேர்தலுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதில் அவர்கள் தோற்றுவிட்டால் இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என பா.ஜ.க கூறுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க இப்போதும் விரும்புகிறது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தான் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது
    • கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

    "வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    "தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக தேர்தல் பத்திர திட்டம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், "தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்தி இருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும்.
    • இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும்.

    இந்தியாவில் EVMs மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவிபாட் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காட்டும். ஆனால் ரசீது வாக்காளரிடம் வழங்கப்படாது. பெட்டிக்குள் சேகரிக்கப்படும்.

    EVMs மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் விவிபாட்டில் உள்ள அனைத்து ரசீதுகளையும் எண்ண வேண்டும் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபாட் என்ற வகையில் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அனைத்து விவிபாட்டையும் எண்ண முடியாது எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்க வேண்டும். பின்னர் அந்த ரசீது ஒரு பெட்டியில் சேரிக்கப்பட்டு அது எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    ஜனநாயக சீரமைப்புக்கான சங்கத்தின் சார்பில் ஆஜரான பிரஷாந்த் பூஷன் "நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும். இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும். அதை அவர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும். விவிபாட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் ஜெர்மனியில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை உதாரணத்திற்கு கூறினார்.

    அதற்கு நீதிபதி திபன்கார் தத்தா, ஜெர்மனியின் மக்கள் தொகை எவ்வளவு என கேட்க, பிரஷாந்த் பூஷன் சுமார் 6 கோடி இருக்கும் என்றார்.

    அதற்கு நீதிபதி திபன்கர் தத்தா "வெளிநாட்டு தேர்தலை நம்முடைய தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது. என்னுடைய வீடு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. ஜெர்மனியை விட மேற்கு வங்காளத்தில் மக்கள் தொகை அதிகம். நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. இதுபோன்ற உதாரணங்களை தெரிவிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது" என்றார்.

    • 10 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட ஒட்டுமொத்த நடைமுறையையும் நிறுத்த வேண்டும். இது நியாயமா?
    • இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது.

    இந்தியாவில் EVMs மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவிபாட் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காட்டும். ஆனால் ரசீது வாக்காளரிடம் வழங்கப்படாது. பெட்டிக்குள் சேகரிக்கப்படும்.

    EVMs மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் விவிபாட்டில் உள்ள அனைத்து ரசீதுகளையும் எண்ண வேண்டும் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபாட் என்ற வகையில் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அனைத்து விவிபாட்டையும் எண்ண முடியாது எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்க வேண்டும். பின்னர் அந்த ரசீது ஒரு பெட்டியில் சேரிக்கப்பட்டு அது எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    ஜனநாயக சீரமைப்பு சங்கத்தின் சார்பில் ஆஜரான பிரஷாந்த் பூஷன் "நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும். இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும். அதை அவர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும். விவிபாட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் ஜெர்மனியில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை உதாரணத்திற்கு கூறினார்.

    அதற்கு நீதிபதி திபன்கார் தத்தா, ஜெர்மனியின் மக்கள் தொகை எவ்வளவு என கேட்க, பிரஷாந்த் பூஷன் சுமார் 6 கோடி இருக்கும் என்றார்.

    அப்போது நீதிபதி கண்ணா "நமது நாட்டில் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பது நாம் எல்லோருக்குத் தெரியும்." என்றார்.

    அப்போது மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே "EVMs விவிபாட் ரசீதுடன் ஒப்பிட்டு சரியாக இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்" என்றார்.

    உடனே நீதிபதி கண்ணா "60 கோடி விவிபாட் ரசீதுகள் எண்ணப்பட வேண்டும். சரிதானே?" என்றார்.

    மேலும், "இயந்திரம் வழக்கமாக மனிதன் குறிக்கீடு இல்லாமல் சரியான முடிவுகளை கொடுக்கும். மனிதன் குறுக்கிடும்போது அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை (மென்பொருள் மற்றும் இயந்திரம்) செய்யும்போது பிரச்சனை எழுப்பப்படுகிறது. இதை தவிர்க்க ஏதாவது ஆலோசனை இருந்தால் தெரிவிக்கலாம்" என்றார்.

    பிரஷாந்த பூசன் "ஒரே சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து பிவிபாட் இயந்திரத்தில் உள்ள ரசீதுகள் எண்ணப்படுகின்றன. 200 இயந்திரங்களில் இது வெறும் ஐந்து சதம் வீதம்தான். இது நியாயமாக இருக்க முடியாது. ஏழு வினாடி லைட் தவறாக வழி நடத்தப்படலாம். வாக்காளர் விவிபாட் ரசீதை பெற்று, அதை வாக்குப்பெட்டியில் செலுத்த அனுமதிக்க வேண்டும்."

    சீனியர் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயன் "பிராசந்த் பூஷன் தெரிவிக்கும் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் கெட்ட எண்ணத்தில் கூறவில்லை. தன்னுடைய வாக்கு போடப்பட்டது என்ற நம்பிக்கை வாக்காளருக்கு ஏற்பட வேண்டும். இது ஒன்றுதான்" என்றார்.

    உடனே, உச்சநீதிமன்றம் வாக்களிக்கும் நடைமுறை, EVMs-ன் சேமிப்பு மற்றும் வாக்கு எண்ணப்படுதல் உள்ளிட்ட அனைத்தை தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.

    நீதிபதி கண்ணா "EVMs இயந்திரத்தை டேம்பரிங் செய்யப்படும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வாய்ப்பு இல்லை. இது முக்கியமான விசயம். பயப்படும் வகையில் தண்டனை இருக்க வேண்டும்." என்றார்.

    வழக்கறிஞர் சங்கரநாராயணன் "வாக்காளர்கள் ரசீதை பெற்று வாக்குப்பெட்டியில் செலுத்த அனுமதிக்க வேண்டும்" என்றார.

    அதற்கு நீதிமன்றம் "10 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட ஒட்டுமொத்த நடைமுறையையும் நிறுத்த வேண்டும். இது நியாயமா?." என்றது. அதற்கு வழக்கறிஞர் சங்கரநாராயணன் "ஆம், அதைக் கேட்க எனக்கு உரிமை உண்டு. நான் ஒரு வாக்காளர், வேண்டுமென்றே செயல்முறையை நிறுத்துவதால் எனக்கு என்ன லாபம்?" என்றார்.

    நீதிபதி திபன்கர் தத்தா வெளிநாட்டை நம்முடைய தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "என்னுடைய வீடு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. ஜெர்மனியை விட மேற்கு வங்காளத்தில் மக்கள் தொகை அதிகம். நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. இதுபோன்ற உதாரணங்களை தெரிவிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது" என்றார்.

    பிரசாந்த் பூஷனிடம் நீதிபதி திபன்கர் தத்தா, மக்கள் EVMs மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதற்கு தரவுகள் உள்ளதா? என கேட்டார். அதற்கு பூஷன் ஆய்வுகளை குறிப்பிட்டார். அதற்கு நீதிபதி திபன்கர் தத்தா "நாங்கள் தனியார் தேர்தல் கணிப்பை நம்பவில்லை. எங்களுக்கு தரவுகள் வேண்டும். தரவுகள் அது உண்மையானதாக இருக்க வேண்டும், ஆனால் கருத்து அடிப்படையில் அல்ல. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தரவுகளை பெற இருக்கிறோம்." என்றார்.

    அத்துடன் இந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

    • யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால்,
    • தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?

    தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்த நிலையில், சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஒஹா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது நீதிபதிகள் "யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால், தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?. அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை அவர் தவறாக பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

    அவதூறாக பேசமாட்டேன் என அவருக்கு நிபந்தனை விதிக்க முடியாது. ஒரு அறிக்கை அவதூறா? அல்லது அவதூறு இல்லையா? என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது? என நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழங்கறிஞர் முகுல் ரோஹத்கி நோக்கி கேள்வி எழுப்பினர்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது.
    • இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    2018 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி (SBI) கமிஷன் பெற்றுள்ளது.

    இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கும் நிதி அமைச்சகத்துக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றத்தில், வங்கி தனக்கு செலுத்த வேண்டிய "கமிஷன்" கோரிக்கையை வைத்தது. மேலும், தேர்தலை முன்னிட்டு பத்திரங்கள் விற்பனை அதிகரிக்கும் என்றும் எஸ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வங்கி தனது பரிவர்த்தனை கட்டணம் மற்றும் வங்கிக் கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி-யுடன் "கமிஷன்" செலுத்துவதற்கான வவுச்சர்களை உயர்த்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ரேண்டம் அடிப்படையில் ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
    • அனைத்து விவிபாட் ரசீதுகளும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு EVMs இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியாது. இதனால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள விவிபாட் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரம் செயல்படுத்தப்பட்டது.

    வாக்களிக்கும் ஒரு நபர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்பதை ஒரு ரசீது மூலம் இந்த இயந்திரம் காட்டும். ஆனால் இந்த இயந்திரம் காட்டப்படும் ரசீது வாக்காளர்களுக்கு காட்டப்பட்ட பின் அவர்களிடம் வழங்கப்படாது. ஒரு பாக்ஸில் சேகரிக்கப்படும்.

    தேவைப்பட்டால் இந்த ரீதுகள் ஒரு தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் ரேண்டம் முறையில் எண்ணப்படும்.

    ஆனால், இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஏவிஎம் இயந்திரம் 100% நம்பகத்தன்மை கொண்டது. அதனால் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கோவாய் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தொடர்பாக இந்தியா கூட்டணி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்த நேரம் கேட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது முக்கியமான முதல்படி. தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி 3500 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ்.
    • தேர்தல் களத்தில் சமநிலையை பாதிக்கும் என காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்தது.

    வருமான வரி தாக்குதலில் தவறு செய்ததாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராதம், வட்டி என சுமார் 3500 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வரி தீர்ப்பாயம் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கியது.

    இதனால் தேர்தல் நேரத்தின்போது தங்களால் பணம் எடுக்க சிரமமாக உள்ளது என காங்கிரஸ் தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் எந்த தடையும் பிறப்பிக்கவில்லை.

    இதனால் உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது இது வரி தீவிரவாதம். மக்களவை தேர்தலின்போது பணத்தை எடுக்க முடியாத வகையில் முடக்குவதற்கான முயற்சி என குற்றம்சாட்டியது. இது தேர்தலில் சமநிலையை பாதிக்கும் எனவும் தெரிவித்தது.

    இந்த வழக்கு பிவி நாகரத்னா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய சொலிட்டர் ஜெனரல், தேர்தல் முடியும் வரை கட்டாய நடவடிக்கை எடுக்காது எனத் தெரிவித்தார்.

    2024-ல் 20 சதவீதம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. 135 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. 1,700 கோடி ரூபாய் கட்டுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். அதன்பின் 1,700 கோடி ரூபாய் கட்ட வலியுறுத்தப்படும். ஒட்டுமொத்த விசயங்களும் தேர்தலுக்கு பின் சரி செய்யப்படும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்" என்றார்.

    மத்திய அரசு வரி கட்டுவதற்கு ஏதேனும் இடைக்கால தடைவிதிக்கிறதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, "அப்படி ஏதும் இல்லை. தேர்தல் வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதை மட்டும் தெரிவிக்கிறோம்" என்றார்.

    • தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குப் நிதி வழங்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
    • ஒரு அரசியல் கட்சியால் 15 நாட்களுக்குள் பத்திரங்களில் இருந்து பணத்தை பெற முடியும்.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்வதற்கு 3 நாட்கள் முன்பு, மேலும் ₹10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சிட பொதுத்துறை நிறுவனமான இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.

    தலா ₹1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் அம்பலமாகியுள்ளது

    10000 கோடி மதிப்பிலான தேர்தல் பாத்திரங்களை அச்சிடும் பணியை நிறுத்துமாறு நிதி அமைச்சகம் கடந்த மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டது.

    தேர்தல் பத்திரங்களை தடை செய்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு 2 வாரங்களுக்கு பின்னர், எஸ்பிஐ நிதி அமைச்சகத்திடம் அச்சிடும் பணியை நிறுத்தி வைக்குமாறு கூறிய பின்பு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் தலா ₹1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களில் ஏற்கனவே 8,350 தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐக்கு தயாரித்து அனுப்பியுள்ளது. ஆகவே மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவது மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி என அரசியல் கட்சிகளுக்குப் பத்திரங்களை வழங்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அரசியல் கட்சியால் 15 நாட்களுக்குள் பத்திரங்களில் இருந்து பணத்தை பெற முடியும். ஆனால், யார் எந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற தகவல் இதில், மறைமுகமாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் தான் எஸ்.பி.ஐ. தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது
    • தேர்தல் பத்திரங்களின் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வழங்கவேண்டும்

    உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

    கடந்த பிப்ரவரி மாதம் 15 அன்று உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை எஸ்.பி.ஐ. இரண்டு பகுதிகளாக வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் அளித்த எஸ்.பி.ஐ. முழுமையான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கவில்லை.

    இதனையடுத்து கடந்த 18-ம் தேதி அன்று தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டு அதுகுறித்து பிரமாணப்பத்திரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அந்த உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. 

    • பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
    • தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன?

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, "பொன்முடி 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர். சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்ததால், பொன்முடி தகுதி நீக்கத்திற்கு உள்ளானார்" என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும், "பொன்முடியை மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக விரும்புகிறோம்.

    சாக்குபோக்கு செல்வதற்காக அரசியலமைப்பு சட்ட அறம் குறித்து ஆளுநர் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விவகாரத்திற்கும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு வர வேண்டுமா?

    இருப்பினும், பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன? என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பொன்முடி பதவியை ராஜினாமா செய்தாரா ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், குற்வாளி என தீர்மானித்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, ஆளுநருக்கு இதில் என்ன வேலை இருக்கிறது? இந்த விவகாரத்தில் தீவிரமாக கருத்துக்களை தெரிவிக்க உள்ளோம் என்பதை ஆளுநரிடம் தெரிவியுங்கள்.

    ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக இருக்கின்றன.

    ஆளுநருக்கு இன்று இரவு வரை காலக்கெடு விதிக்கிறோம். நாளை உத்தரவிடுகிறோம். நாளைக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே ஆளுநருக்கு உத்தரவிடும்.

    இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக" தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

     

    ×