search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tender corruption"

    முதலமைச்சர் பழனிசாமி மீதான் சிபிஐ விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று தான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையில் மேல்முறையீடு குறித்து நான் சொல்லாததை சொன்னது போல் மு.க. ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

    அதாவது சி.பி.ஐ. விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அப்பீல் செய்யும் என்ற கருத்தை நான் கூறியதாக சொல்லி இருக்கிறார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது.

    லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்பது ஒரு தன்னிச்சையான, தன்னாட்சி நிலையிலே செயல்படுகிற ஒரு அமைப்பு. உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்படுகிறது.

    இது அகில இந்திய அளவில் இருக்கிற ஒரு நடைமுறை. சி.பி.ஐ. என்ற அமைப்பு மைய அரசின் அமைப்பு என்ற போர்வையில் இருந்தாலும் நீதிமன்றம் ஒரு ஆணை வெளியிடும் போது நடுநிலை தவறாமல் செயல்படுவது தான் வழக்கமாக உள்ளது.

    இதிலே தன்னாட்சி அமைப்பான லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று நான் கூறியதாக கூறி இருப்பது தவறு.

    என்னிடம் நிருபர்கள் கேட்ட போது அவர்கள் ஒருவேளை அப்பீல் செய்யலாம் என்று பொருள்பட தான் சொன்னேன். அதாவது மேல்முறையீடு செய்யலாம் செல்லாமலும் இருக்கலாம் என்பது தான் இதன் தத்துவம்.

    லஞ்ச ஒழிப்பு துறையை பொறுத்தவரை அது பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்கிற உணர்வு அவர்களுக்கு வரும்போது அப்பீல் செல்வதா? செல்ல வேண்டாமா? என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இதில் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை.


    டெண்டர் விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தம் இல்லை. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இல்லை. இதுதான் உண்மை நிலை. அதனால் மேல்முறையீடு என்பது லஞ்ச ஒழிப்பு துறை எடுக்க வேண்டிய முடிவு.

    இதில் தெளிவுப்பட ஆவணங்கள் பேசுகிறது. அன்றையதினம் நான் பேட்டி கொடுத்த போது சற்று பரபரப்பான சூழலாக இருந்தது. எந்த ஒரு விசாரணையாக இருந்தாலும், ஆரம்பகட்ட புலனாய்வு உண்டு. அதன் பிறகு தான் ஆழ்ந்த புலனாய்வு விசாரணை நடைபெறும்.

    ரோடு டெண்டரை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் ‘பாக்ஸ்’ டெண்டர் நடைமுறை இருந்தது. இதில் யார்? என்ன தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது கமிட்டிக்கு தெரியும். ஆட்சியாளர்களுக்கு தெரியும். தி.மு.க. ஆட்சியில் பல தவறுகள் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது ஆன்லைன் டெண்டர் நடைமுறையில் உள்ளது. இதில் யார் மனு போடுகிறார்கள் எவ்வளவு தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதில் எந்த தவறுமே நடக்க முடியாது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையை, நேர்மையை, இந்தியாவே பாராட்டுகிறது. மத்திய அரசும் பாராட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் ஊழல் புகாரில் ஆதாரம் இல்லை என்று ஐகோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. #EdappadiPalaniswami #Highcourt

    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சரின் நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.

    முதல்-அமைச்சரின் (மகனின் மனைவி) மருமகளின் சகோதரியின் கணவருடைய சகோதரருக்குத்தான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் சந்தை மதிப்புடன் ஒப்பிடும் போது நியாயமான விலைப் புள்ளிகளுடன் தான் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    மேலும் அவர் தன் வாதத்தில், ‘மனுதாரர் கூறுவது போல ஒரு கிமீ தூரமுடைய சாலையை ரூ. 2.20 கோடிக்கு போட முடியும் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் இது இடத்திற்கு இடம் மாறுபடும். அந்தப்பகுதியின் மண் தரம் மற்றும் மூலப்பொருட்களின் சந்தை மதிப்பு விலைகளைப் பொறுத்து இது மாறுபடும். சில இடங்களில் மத்திய அரசின் கீழ் போடப்பட்ட சாலைகளுக்கு ரூ. 30 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது’ என்றும் வாதிட்டார்.

     


    இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே முகாந்திரம் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை’ என்று கூறினார்.

    அதற்கு நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை யார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், ‘லஞ்ச ஒழிப்பு துறையானது தன்னிச்சையாக செயல்படக் கூடிய அமைப்பு. தங்களுடைய விசாரணை விவரங்களை கூட லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யிடம் தெரிவிக்க தேவையில்லை’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனரை யார் நியமிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசு தான் நியமிக்கிறது என்று அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #EdappadiPalaniswami #Highcourt

    ×