search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia"

    • ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.
    • ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என தெரிவித்தார்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் துவங்கி, இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. போர் காரணமாக இருபதரப்புக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 29 மாதங்களாக தொடரும் போரில், ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் முன்னேறி வருகின்றன.

    போரில் ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி நேட்டோ அமைப்பு சார்பிலும் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்க வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பட்தத்தில் உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே, ரஷியாவுக்கு எதிரான போர் குறித்து உக்ரைன் நாட்டின் உயரிய அதிகாரிகளில் ஒருவரான வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன பயணத்தின் போது, அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்த குலெபா உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் பட்சத்தில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்று தெரிவித்தார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு போர் துவங்கியதில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைனின் உயரதிகாரி குலெபா ஆவார். சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்த குலெபா ஏற்கனவே திட்டமிட்டதை விட அதிக நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரண்டு மிகமுக்கிய விஷயங்களை மட்டுமே முன்வைத்ததாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் குலெபா தெரிவித்தார்.

    "நான் இரண்டு விஷயங்களை மட்டுமே முன்வைத்தேன். முதலில் உக்ரைன் தொடர்பான ஒப்பந்தங்களை உக்ரைன் இல்லாமல் இயற்றக்கூடாது. இரண்டாவது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இவை இரண்டும் ஏற்கப்பட்டால், நாங்கள் எத்தகைய விவாதங்கள் மற்றும் தீர்வுகளை காணவும் தயாராக இருக்கிறோம்," என்று குலெபா தெரிவித்தார்.

    ரஷியா நல்ல உணர்வோடு வரும் பட்சத்தில் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறது. எனினும், ரஷியா தரப்பில் அத்தகை தயார்நிலை தற்போதைக்கு காணப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. 

    • கட்டிடத்தில் 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இடறி விழுந்துள்ளார்.
    • இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

    ரஷியாவின் நோவோசிபிர்ஸ்க் [Novosibirsk] நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் 13 வது மாடியில் இருந்து விழுந்த  இளம்பெண் அதிசயிக்கத்தக்க வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.

    சைபீரியாவைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம்பெண் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அந்த கட்டிடத்தில் 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இடறி விழுந்துள்ளார். இளம்பெண் கீழே புல் தரையில் விழுந்த உடனே நிதானித்து எழுந்து நின்ற காட்சிகள் வெளியாகி அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.

    இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதற்கிடையில் இந்த வீடியோ இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது. 

    • உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • போரை முடிவுக்கு கொண்டும் வருவதற்கான பேச்சுவார்த்தையில் சீனா முக்கியமான பங்கு வகிக்க முடியும்- உக்ரைன்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து மூன்று ஆண்டுகளாகியுள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சீனா ரஷியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நட்பு நாடாக இருந்து வருகிறது. இதனால் சீனாவால் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீனாவுக்கு சென்றுள்ளார். ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்த பின் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி முதன்முறையாக சீனா சென்றுள்ளார்.

    உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா சீன வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். உக்ரைன- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரஷியா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவுடன் பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தையை விரும்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    "நியாயமான மற்றும் நிலையான அமைதி நோக்கி செல்வது எங்களுக்கு அவசியம். சீனா இதில் முக்கியமான பங்கு வகிக்க முடியும்" என்றார்.

    ஒருமித்த கருத்தோடு, இணைந்து அரசியல் நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தினருக்கு சீனா உதவி செய்யும் என சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

    சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற அமைதி மாநாட்டில் சீனா கலந்து கொள்ளவில்லை.

    • அனைத்து பயணிகளுக்கும் போதுமான உணவு, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.
    • 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது.

    டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் (ஏ.ஐ.183) திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்கள் இருந்தனர். இதற்கிடையே ரஷியாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறொரு விமானத்தில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மும்பை விமான நிலையத்தில் மாற்று விமானம் (ஏ.ஐ.1179) ரஷியாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தது. அதில் அனைத்து பயணிகளுக்கும் போதுமான உணவு, அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

    அந்த விமானம், 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. இது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, ஏ.ஐ.183 விமான பயணிகளுடன் ஏர் இந்தியா மீட்பு விமானம் ஏ.ஐ.1179 கிராஸ்நோ யார்ஸ்கில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது. ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கிராஸ்நோயார்ஸ் விமான நிலைய அதிகாரிகள், விமான போக்குவரத்துக்கான ரஷிய கூட்டாட்சி நிறுவனம் பயணிகளுக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.

    • பிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது

    உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே  வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. நேற்று [ ஜூலை 11] ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 99 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்துள்ளன.

    கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடைபெற்ற இந்தியா- ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவருக்கு ரஷியாவின் உயரிய விருதான ஆர்தர் ஆப் செயின்ட் ஆன்ரியூ தி அப்போஸ்தல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உக்ரைன் போருக்கு மத்தியில் மோடி ரஷிய அதிபர் புதினுடன் இணக்கம் காட்டுவது மேற்கு நாடுகளுக்கு கோபமூட்டியுள்ளது.

     

    மோடி ரஷியா சென்ற கடந்த ஜூலை 8 ஆம் தேதி அன்று உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்தனர். கீவ் நகரில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை தகர்க்கப்பட்டது. இந்தியா புத்தரைத் தான் உலகத்துக்கு கொடுத்தது, யுத்தத்தை அல்ல என்று மோடி தனது பயணத்தின்போது பேசினாலும், தற்போது ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     

    முன்னதாக 38,000 மக்கள் உயிரிழந்த இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மோடியின் ரஷியா பயணம் குறித்து விமர்சித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தற்போதைய சூழலில் எந்த போரும் தொலைவில் இல்லை. இந்தியா - அமெரிக்காவின் நட்புறவை மீண்டும் உறுதி செய்ய வேண்டி உள்ளது. அமெரிக்க உறவை நினைத்து போல்  எடுத்துக்கொள்ளக்கூடாது  என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார்.
    • இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது.

    பிரதமர் மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றினார்.

    அப்போது, "பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது" என்று மோடி பேசியுள்ளார்.

    ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை இந்தியா வந்தடைந்தார். 

    • இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.
    • மோடி தெரிவித்ததை போல், இது போருக்கான காலக்கட்டம் இல்லை.

    ரஷியாவுடன் வைத்துள்ள நட்புறவை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த அந்நாட்டிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

    இது குறித்து அமெரிக்க இந்துஸ்தானி செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் மேக்லியோட் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்து இருந்த, "இது போருக்கான காலம் இல்லை" என்பதை எடுத்துரைத்தார்.

     


    தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா உள்பட அனைத்து நட்பு நாடுகளும் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்த அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா வலுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. ரஷியா உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும். பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்ததை போல், இது போருக்கான காலக்கட்டம் இல்லை."

    "இந்தியா மற்றும் ரஷியா இடையே மிகவும் விசேஷமான நட்புறவு உள்ளது. இந்த நட்புறவை பயன்படுத்தி ரஷியாவிடம் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஐநா விதிகளை மீறும் செயல்," என்று அவர் தெரிவித்தார். 

    • நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர்.
    • உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பில் மோடியை புதில் காட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார். நேற்றைய தினம் அதிபர் புதினுடன் தேநீர் விருந்தில் அவரது இல்லத்தில் வைத்து மோடி உரையாடினார். பின்னர் மோடிக்கு முக்கிய பகுதிகளை புதின் சுற்றிக் காட்டினார்.

     

    சிறிது நேரம் கோல்ப் வண்டியில் இருவரும் பயணித்தனர். அதனபின் புதின் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் அவருடன் மோடி உணவருந்தினார். அதைத்தொடர்ந்து இன்று நடக்கும் மாநாட்டில் மோடி கலந்துகொள்கிறார். இந்நிலையில் மோடி ரஷியா சென்றுள்ளது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர். உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீதும் ரஷியா நேற்றைய தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதளுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்று தெரிவித்தார்.

     

     

    இதற்கிடையில், மோடியின் ரஷிய பயணம் குறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், 'இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளது அமைதிக்கான முயற்சிகள் மீது விழுந்த பெருத்த அடியாக உள்ளது' என்று தெரிவிட்டுள்ளார். கடந்த மாதம் இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டில் மோடியும்  ஜெலன்ஸ்கியும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

     

    • உக்ரைனிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துமனையான இதில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர்
    • இந்த தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 87 படுகாயமடைந்த்துள்ளனர்

    உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பிரதான குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துமனையான இதில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். தாக்குதல் நடந்த சில நொடிகளுக்கு பிறகு தங்களின் குழந்தைகளை கையில் ஏந்தியபடி தாய்மார்கள் வெளியே ஓடி வந்தனர்.

     

    இந்த தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 87 படுகாயமடைந்த்துள்ளனர் என்றும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் மருத்துவமனையில் டயாலிசிஸ் பகுதி உட்பட 5 யூனிட்டுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. மருத்துவமனை ஊழியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என பலர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.

     

    நேற்று உக்ரைனின் பல்வேறு நகரங்களின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 170 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனை பிரச வார்டுகள், குழந்தைகள் நர்சரிகள், மக்கள் வசிக்கும் வீடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ கூத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுகொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள செய்தியில்,  ரஷிய தீவிரவாதிகள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   

     

    • மோடி மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார் புதின்
    • ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் தெரிகிறது

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார்.  விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் புதினை சந்தித்து மோடி, இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

     

    அந்தவகையில் நேற்று மதியம் அதிபர் புதினின் இல்லமான நோகோ ஓகார்யோவோவில் வைத்து இரு தலைவர்களும் சந்தித்து தனிப்பட்ட முறையில் பலவேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளனர்.மோடி மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், 'நீங்கள் உங்களின் மொத்த வாழ்க்கையையும் இந்திய மக்களுக்காக உழைப்பதற்கு அர்ப்பணித்துள்ளீர்கள், மக்களும் அதை அறிவர்' என்று மோடியிடம் தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த மோடி, 'நீங்கள் சொல்வது சரி, எனக்கு ஒரே ஒரு இலக்கு தான் உள்ளது - அது என் நாடும், இந்திய மக்களுமே ஆவர்' என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மோடி, ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் மாஸ்கோ வாட்டரங்கள் தெரிவிக்கின்றன. 

    முன்னதாக, உக்ரைனின் இறையாண்மை குறித்து புதினிடம் மோடி வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து ரஷிய ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை பணியில் இருந்து சீக்கிரம்  விடுவிக்க வேண்டும் மோடி புதினிடம் வலியுறுத்தியுள்ளார்.

     

    புதின் இல்லத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் கோல்ப் வண்டியில் மோடிக்கு அப்பகுதியை புதின் சுற்றிக்காட்டினார். அதன்பின்னர் நடந்த இரவு விருந்தில் இருவரும் சேர்ந்து உணவருந்தினர். இன்று நடக்க உள்ள உச்சிமாநாட்டில் இந்தியா-ரஷியா இடையிலான பொருளாதார உறவுகள் குறித்த பல முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
    • சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை.

    ரஷிய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷியா புறப்பட்டார். ரஷியா செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

    அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ரஷியாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    ரஷிய அதிபர் புதினுடனான மோடியின் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்முக உறவுகள் குறஇத்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள் என்றும், பரஸ்பர ஆர்வமுள்ள சமகால பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் என்றும், பிராந்திய, சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரஷியாவில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் சரக்கு கப்பல்களை இயக்க ஆலோசிக்கப்படுகிறது.

    தற்போது ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு சரக்கு கப்பல்கள் வந்து சேர 40 நாட்கள் ஆகிறது.

    அதற்கு பதிலாக ரஷியாவின் விளாடிவாஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் சரக்கு கப்பல்களை இயக்கினால் 20 நாட்களுக்குள் சரக்கு கப்பல்கள் இந்தியாவை வந்தடையும். இதனால் நேரமும், எரிபொருளும் கணிசமாக மிச்சமாகும்.

    எனவே சென்னைக்கு புதிய வழித்தடத்தில் சரக்கு கப்பல்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து மருந்து பொருட்கள், ஜவுளி, மின்னணு பொருட்கள், வேளாண் கருவிகளை அதிக அளவில் ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்வது. இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    • இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
    • போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    ரஷிய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷியா புறப்பட்டார். ரஷியா செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

    அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ரஷியாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாஸ்கோவில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    ×