search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்"

    • வடகொரியாவில் ராணுவ பல்கலைக்கழகத்தை அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.
    • அதன்பின் பேசிய அதிபர்,போருக்கு தயாராகுமாறு கூறியது கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பியாங்யாங்:

    வட கொரிய அதிபராக பதவி வகித்து வருபவர் கிம் ஜாங் உன். தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் மோதி வரும் இவர், உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே, அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ பயிற்சிகளை அதிகளவில் மேற்கொண்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது என வடகொரியா கூறியிருந்தது.

    இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ பல்கலைக்கழகத்தை கிம் ஜாங் உன் ஆய்வுசெய்தார். அதன்பின் அவர் பேசியதாவது:

    வடகொரியாவை சுற்றி நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் உள்ளது. எனவே, கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது போருக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

    • ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்
    • சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா.

    சென்னையில் விளம்பர மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் சஞ்சனா நடராஜன். இவர் இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0, பாலாஜி மோகனின் வலைத் தொடரான 'அஸ் ஐம் சப்ரிங் பிரம் காதல்' ஆகியவற்றில் நடித்து புகழடைந்தார்.

    ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

    அதோடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தில் எஸ். ஜே. சூர்யா விற்கு இணையாக நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா. அதில் இவர்கள் இருவருக்கும் இடையிலான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப் பட்டது.

    தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சஞ்சனா, இந்தக் கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்பட கலைஞரான ஹ்ரிஷி, சஞ்சனாவை அழகாக படம்பிடித்துள்ளார்.

     

    இந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சனா, கடற்கரையில் வெள்ளை நிற ஆடையில் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கினார்.
    • அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்து மார்ச் 1 ஆம்தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர்.

    அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்து மார்ச் 1 ஆம்தேதி திரையரங்குகளில் வெளிவந்த படம் போர். தமிழ் - இந்தி என இரு மொழிகளிலும் இப்படம் வெளியானது. இந்தியில் டாங்கி என்ற பெயரில் வெளியானது. பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கினார்.

    மக்களிடையே இப்படம் கலந்த விமர்சனத்தை பெற்றது. சஞ்சனா நட்ராஜன், பானு, ஜான் விஜய், விவேக் ராஜகோபால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். காலேஜில் படிக்கும் சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே இருக்கும் ஈகோ, துரோகம் பற்றிய கதைக்களமாக அமைந்தது . அதில் அரசியல் குறியீடுகளையும் சாதி பாகுபாடுகளையும் மிக நேர்த்தியாக காண்பித்திருப்பார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

    இப்படம் இப்பொழுது ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸில் இன்று  வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மவுன குரு, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார்
    • ரகுவரனுக்கு அடுத்து குரல் வளமை அர்ஜூன் தாசுக்கே இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் தன் குரலால் மக்கள் மனதை கட்டிப் போட்ட நடிகர்களில் ஒருவர் அர்ஜூன் தாஸ். நடிகர் ரகுவரனுக்கு அடுத்து குரல் வளமை அர்ஜூன் தாசுக்கே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019-ல் வெளியான கைதி படத்தில் அன்பு கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நின்றது. அர்ஜூன் தாஸ் கூறிய 'லைஃப் டைம் செட்டில்மெண்ட்' டயலாக் வைரலாக பரவி, இன்றுவரை மக்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

    'கைதி', 'அந்தகாரம்', 'மாஸ்டர்' என அடுத்தடுத்த படங்களால் கோலிவுட்டை தன் பக்கம் திரும்ப வைத்தவர், 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆந்தாலஜியில் அர்ஜுன் தாஸ் - லிஜோமோல் ஜோடியை வைத்து 'லோனர்ஸ்' எனும் கதையை இயக்கியிருப்பார் ஹலீதா ஷமீம். அதன் பிறகு, முழு நீளப்படத்தில் நாயகனாக அறிமுகமானது இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய 'அநீதி'. சமீபத்தில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளியான போர் படத்தில் நடித்து இருந்தார்.

    அடுத்தடுத்து மிக முக்கியான சுவாரசியமான படத்தில் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'கப்பேலா' திரைப்படத்தின் டோலிவுட் வெர்ஷனில் நடித்தார். சுஜீத் இயக்கத்தில் 'தே கால் ஹிம் ஓஜி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

    பிரபாஸை வைத்து 'சாஹோ' படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, பிரகாஷ்ராஜ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    மவுன குரு, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கைதி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். 'ஜூன்', 'மதுரம்' ஆகிய படங்களையும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' எனும் வெப் சீரிஸையும் இயக்கிய

    மலையாள இயக்குனரான அஹமத் கபீர் இயக்கத்தில் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் அர்ஜூன் தாஸ்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பாரபட்சம் பார்க்காமல் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். இவரது ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுக்காகவும், ரிலீஸ் தேதிக் குறித்து தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்திலும் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
    • தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கி விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "போர்" திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது.

    தமிழில் டேவிட், சோலோ உள்ளிட்ட திரைப்படங்கள், நவரசா, ஸ்வீட் காரம் காபி போன்ற பிரபல வெப் சீரீஸ்களை இயக்கியவர் இயக்குனர் பிஜோய் நம்பியார்.

    இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி இருக்கும் "போர்" படம் வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் "டாங்கே" என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், போர் படத்தின் முதல் மற்றும் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், போர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வறுகிறது.

    • போர் திரைப்படம் இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது.
    • போர் படம் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

    சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடித்திருக்கும் புதிய படம் "போர்". டி.ஜே. பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொசாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படம் தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது.

     


    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அர்ஜூன் தாஸ் பேசும் போது, "போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது."

    "இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது' என்று தெரிவித்தார்.

    • இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
    • இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கி விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் "போர்" திரைப்படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழில் டேவிட், சோலோ உள்ளிட்ட திரைப்படங்கள், நவரசா, ஸ்வீட் காரம் காபி போன்ற பிரபல வெப் சீரீஸ்களை இயக்கியவர் இயக்குனர் பிஜோய் நம்பியார்.

    இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 

    தமிழ் மாட்டு இல்லாமல், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில், தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி இருக்கும் "போர்" படம் வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் "டாங்கே" என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்

    இந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், போர் படத்தின் 2வது பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "நண்பகல் நேரம்" என்ற இந்த பாடல் வைரலாகி வருகிறது.

      இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள "போர்" படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது.

      இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றப் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

      நடிகர் விக்ரம் நடித்த 'டேவிட்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான பிஜாய் நம்பியார், பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.

      டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். 2 நபர்களுக்கு இடையேயான ஈகோ மோதலாக இப்படம் உருவாகியுள்ளது.

      • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
      • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

      வாஷிங்டன்:

      இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

      இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

      இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

      இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

      ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

      இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

      இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

      இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

      • ’போர்’ படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
      • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

      இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "போர்". இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


      குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், 'போர்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர். "போர்" திரைப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


      இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • பிஜோய் நம்பியார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
      • இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

      இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "போர்". இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

      குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், 'போர்' திரைப்படத்தை தயாரித்துள்ளனர். "போர்" திரைப்படம் கதை சொல்லலின் எல்லைகளைத் மாற்றியமைத்து, நமக்கு ஒரு வித்தியாசமான, பரபரப்பான அனுபவத்தை தரும் படைப்பாக இருக்கும்.


      போர் போஸ்டர்

      இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், வித்தியாசமான சவாலைத் தருகிறது இந்த ஃபர்ஸ்ட் லுக்.

      • ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
      • ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.

      ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

      கடந்த வாரம், ரஜோரியில் நடந்த ஒரு நடவடிக்கையின்போது இரண்டு கேப்டன்கள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

      இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முழுமையாக முடிவடையவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம் என்றும் அதற்காக போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர் ஸ்வைன் இன்று தெரிவித்தார்.

      குருபூராப்பை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள சட்டிபட்ஷாய் குருத்வாராவில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

      இந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த போரினால் எந்தப் பலனும் இல்லை என்று எதிர் தரப்பு ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். அதுவரை எமது போராட்டத்தைப் பொறுத்த வரையில் இழப்புகள் ஏற்படுவது நிதர்சனம். ஆனால் அந்த இழப்புகளைச் சுமந்து கொண்டு நாம் முன்னேற வேண்டும். இந்தப் போரிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.

      ஒவ்வொரு பனிப்பொழிவுக்கும் சில இடங்களில் ஊடுருவல் அதிகரிக்கிறது மற்றும் சில இடங்களில் குறைகிறது.

      முடிந்த வரையில், உயிரிழப்பு நேர்வதை குறைக்க முயற்சிப்போம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ×